லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல்.
பகுதி 78. லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல். #லலிதாசஹஸ்ரநாமம்# #சௌந்தயலஹரி#. நாப்யாலவாலரௌமாலி லதாபலகுசத்வயீ லக்ஷ்யரோம லதாதாரதா ஸாமுந்நேய .மத்யமா ஸ்தநபார தலந்மந்த்ய பட்டபந்த வலித்ரயா தநுமத்யா முலை மொட்டுக்கள் முளைத்த பாத்தி (ஸர்வலோக வச்யம்) "ஸ்திரோ கங்காவர்தஹ ஸ்தானமுகுலரோமாவலீலாதா- கலாவாலம் குண்டம் குஸுமாஷரதேஜோஹுதபூஜஹ! ரதேலீலாகாரம் கிமபி தவ நாபிர்கிரிசுதே பிலத்வாரம் சித்தர்கிரிஷனாயனாநாம் விஜயதே!" மலையரசரன் பெண்ணே! உன்னுடைய நாபியானது அசையாது இருக்கும் கங்கை நீரின் சூழலா?. இல்லை நகில்ளாகிய மொட்டுக்களுடன் கூடிய ரோம வரிசையான கொடியின் கிழங்கு இருக்கும் (விளைநிலத்து) பாத்தியா?. அல்லது மன்மதனுடைய ஓளியான அக்னியின் ஹோம குண்டமா?. இல்லையென்றால் ரதி வசிக்கும் வீடா?. அல்லது பரமசிவனது யோகம் சித்திக்கும் குகையின் துவாரமா?. இவை என்னவென்று சொல்முடியாத அழகுடையதாக விளங்குகிறது. நாபியானது சுழல் மாதிரி வட்ட வடிவோடு ஆழம் தெரியயதாக இருப்பதால் அதற்கு கங்கையின் நீர்ச்சுழல் உமையாகிச் சொல்லி. அந்த நீர்சுழல் நகர்வது போல இல்லாமல் ஸ்திரமாக ...