அடியார்களுக்காகஅவ்வப்போதுஇறைவனும்
#அடியார்களுக்காகஅவ்வப்போதுஇறைவனும் அவர் திருவருளும் அம்மை அப்பராய்க் காட்சித் தந்து மறைவர். உண்மை, அறிவு, இன்பமாய் இருக்கின்ற சிவப்பரம்பொருளின் திருவருளே சிவசக்தியாகவும், பராசக்தியாகவும், ஆதிபராசக்தியாகவும் உலகைப் படைத்து உயிர்களைச் செயல்படுத்த வருகின்றது. இப்படிச் சிவப்பரம்பொருளிலிருந்து வேறுபடாத திருவருளே பல்வேறு சக்தி வடிவங்களில் வருகின்றது. இதனை உணர்த்துவதே நவராத்திரிப் பண்டிகை. சிவப்பரம்பொருளின் ஆற்றல் அல்லது சக்தி அருள்திருவுருவாய் நவசக்திகளாய் வருகின்றது. இவற்றை மாணிக்கவாசகப் பெருமான் திருவெம்பாவையிருவ தமிழ் விரகர் திருஞானசம்பந்தப் பெருமான், “சினமலி கரியுரி செய்த சிவன், உறைதரு திருமிழலையை, மிகு தனமனர் சிரபுர நகர் இறை, தமிழ்விரகனது உரை ஒருபதும் மனமகிழ்வோடு பயில்பவர், எழில் மலர்மகள், கலைமகள், சயமகள் இனமலி புகழ்மகள் இசைதர இருநிலன் இடைஇனிது அமர்வரே” – திருமுறை : 1 என்றும் குறிப்பிடுகின்றார். இதில் அவர் திருவீழிமிழலை எனும் தலத்திலுள்ள சிவப்பரம்பொருளைப் போற்றிப்பாடிய எம்பாடல்களைப் பாடினால் சரசுவதி, இலட்சுமி,...