Posts

Showing posts from March, 2026

குருமண்டலம்

Image
 திதி நித்யாவிற்கு #ஶ்ரீதேவிகட்கமாலாஸ்தோத்திரம் பிறகு #குருமண்டலம் தெய்வீக அன்னையின் குணங்களும் அவளை வழிபட்டு அதன் மூலம் முக்தி அடைந்த புதனிர்களின் பெயர்களும். கீழ்க்கண்ட முக்தி அடைந்த புனிதர்களின் பெயர்களை உச்சரிக்கிறேன். பரமேஸ்வர பரமேஸ்வரி -  தெய்வங்களின் தெய்வம். மித்ரேசமயி - நட்பின் தெய்வம். ஷஷ்டீசமயி - கந்தனின் துணைவியாக விளங்குபவன். உட்டீசமயி - சந்திரனைப் போல வியாபித்திருப்பவள். சர்யாநாதமயி - அனைத்து சடங்குகளிலும் வியாத்திருப்பவள். லோபாமுத்ரிமயி - லோபாமுத்திரை முனிவராக வியாப்பிபவள். அகஸ்திமயி - அகஸ்திய முனிவராக வியாபிப்பவள். காலதாபனமயி - காலங்காலமாக தவமிருப்பவள். தர்மச்சாராயாமயி - தர்மம் கற்பிக்கும் ஆரிசியர்களுக்குள் வியாதிருப்பவள். முக்தகேசீஸ்வயமயி - தவழும் முடியுடன் இருப்பவள். தீபகலாநாதமயி - விளக்கின் சுடர் போன்றவள். விஷ்ணுதேவமயி -  விஷ்ணுவில் வியாத்திருப்பவள். பிரபாகரதேவமயி - சூரிய பகவானில் வியாபித்திருப்பவள். தேஜோதேவமயி  பிரகாசிப்பவள். மனோஜதேவமயி - ஆசைக் கடவுளை வியாபிக்கும் தெய்வம். கல்யாணதேவமயி - எப்பொழுதும் மங்களரமானவள். ரத்னதேவமயி - ரத்தினம்போல் குவிந்தி...

திதிநித்யாவழிபாடு

Image
 ஷடங்கார்ச்சணம் தேவிகட்கமலா ஸ்தோத்திரம் அடுத்தது #திதிநித்யாவழிபாடு . தேவியின்ஷ16அம்சங்கள்(நித்யா) அல்லது குணங்கள். அதாவது அமாவாசை முதல்  பௌர்ணமி வரை சந்திரனின் 16கலைகளை குறிக்கிறது. இந்த நித்யைகளில் காமேஸ்வரி முதல் சித்ரே வரையிலான பதினைந்து நித்யைகள் ஶ்ரீசக்ரத்தின் எட்டாம் ஆவரணமான சர்வ சித்திபிரத சக்கரத்தின் முக்கோண வடிவில் மூன்று பக்கங்களிலும் பக்கத்திற்கு ஐந்தாக இருப்பத்துடன் பதினாறாவது நித்தியாவான மகாநித்தியே நடுவிலும் வாசம் செய்கிறார்கள். இந்த அமைப்பை கீழே உள்ள படம் விளக்குகிறது. திதி நித்யாக்களை தலை வணங்கிறேன். 1.காமேஸ்வரி - காமத்தை கட்டுபத்துகிறவள். 2 .பகமாலினி - சூரிய மாலை உடையவள். 3.நித்யக்லினா - எப்போதும் கிளர்தெழுபவள். 4.பேருண்டா -  பயங்கரமானவள். 5.வன்ஹிவாசினி - அக்னியிள் வசிப்பவள். 6.மஹாவஜ்ரேஸ்வரி - இடியின் எஜமானி. 7.சிவதூதி - சிவனின் தூதராக மகிழ்ச்சியைக் கொடுபவள். 8.துவரிதே.  - தடுக்க முடியாதவள். 9.குலசுந்தரி - குலத்தின் அழகிய தேவி 10.நித்யே - அழிவில்லாதவள். 11.நீலபதாகே - நீலநிறப் பதாகைகளை உடையவள். 12.விஜயே - எப்போதும் வெற்றியடைவள். 13.சர்வமங்களே - எப்போ...

ஏன்இந்தஆன்மீகபயணம்?.

Image
 #ஏன்இந்தஆன்மீகபயணம்?. சுயசிந்தனை இன்றைய காலகட்டம் என்பது மிகவும் பரபரப்பானஒரு காலகட்டம். என்னிடம் வரும் வாடிகையாளர் உபயோகிக்கும் வார்த்தை. ரொம்ப work press ஜாஸ்தியாக இருக்கும்/கவலையாக இருக்கிறது/ரொம்ப tension ஆக உள்ளது என்று அடிக்கடி உபயோக்கும் வார்த்தை. இதை போக்குவதற்கு டாக்டர்கள் சொல்கிற அறிவுரை மனதை அமைதிப்படுத்துங்கள். அதற்கு தியானம் பழங்குங்கள் அல்லது யோக செய்யுங்கள் என கூறுவார்கள். காரணம் ,2018வருடம் என்பது  எனக்கு மிகவும் இக்கட்டான காலக்கட்டம் . அந்த சமயத்தில் நான் தேர்ந்து எடுத்தது ஆன்மீகம். ஆன்மீகத்தில் நம்மை ஈடுபத்திய பிறகு நம்மால் ஒன்றும் இல்லை. முயற்சி செய்வது நம்முடையது கடமை அதற்கான பதில் இறைவனது என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. காரணம் மனம் பக்குவபடுவதற்கு ஆன்மீகம் மிகவும் சிறந்த ஒரு வழி என்பதை உணர வைத்தது. ஆன்மீகத்தில் எந்த பாதையை தேர்ந்தெடுங்கலாம் என எண்ணிய போது ,மஹாபெரியவாவின் பரம சிஷ்யர் ஶ்ரீகாமாட்சி தாசன் ஸ்வாமிகளை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். அவர்கள் எனக்கு அம்பாளின் மந்திர உபதேசம் செய்து வைத்தார். இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே வா. அதற்கான வழியை அவள் காட்...

ஷடங்கார்ச்சணம்

Image
 #ஶ்ரீமாத்ரேநமஹ #ஶ்ரீதேவிகட்கமாலாஸ்தோத்திரம் தியானத்திற்கு அடுத்தது #ஷடங்கார்ச்சணம் ஹ்ருதய தேவி -  இதயத்தில் வசிக்கும் தெய்வம்  (கருணையுள்ளவள்). சிரோ தேவி - தலையில் கீரிடமாக வீற்றிருக்கும் அம்பாள். சிகா தேவி - பாயும் கூந்தலை உடையவள். கவச தேவி - கவசம் போன்று காக்கும் தேவி நேத்ர தேவி - கண்களில் வசிக்கும் கருணை தெய்வம். அஸ்த்ர தேவி - காக்கும் ஆயுதம் கொண்ட  தேவி. அதாவது விழிப்பு கனவு மற்றும்  உறக்க நிலைகளாகிய மூவுலங்களிலும் மிக  அழகான பெண்மணியே,  உனது இரக்கமுள்ள இதயத்திற்கு, அரச கீரிடத்திற்கு, உனது பாயும் கூந்தலுக்கு,  உனது காக்கும் கரங்களுக்கு, உனது கருணையான பார்வைக்கு, உனது பாதுகாப்பு ஆயுதங்களுக்கு தலை வணங்கிறேன்.

பிந்து ஸ்தானம்

Image
 ஶ்ரீசக்ரத்தின் கவசங்கள். ஶ்ரீசக்ரத்தின் அமைப்பு மற்றும் ஓவ்வொரு ஆவரணமும் ஒவ்வொரு நம்மை காக்கும் கவசம். #1தியானம்ஸ்லோகம் #2ஷடங்கார்ச்சனம் #3குருவந்தனம் #4திதிநித்யாதேவதைகள் #ஶ்ரீசக்கரத்தின்9ஆவரணங்கள். 1.#திரைலோக்யமோகனசக்ரம் அல்லது #பூரம். வெளிபுறம் உள்ள நான்கு வாசல்களுடன் கூடிய மூன்று கோடுகள் கொண்டசதுரமும் அடுத்துள்ள மூன்று வட்டங்களும் சேர்ந்த மூலவுலங்களையும் மயக்கம் சக்கரம். 2 .#சர்வஆசபரிபூரகசக்கரம். பதினாறு  இதழ்கள் கொண்ட தாமரையால் ஆன அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் சக்கரம். 3.#சர்வசம்க்ஷோபணசக்கரம். எட்டு இதழ்கள் கொண்ட தாமரையால் ஆர அனைத்து கிளர்ச்சிகளையும் அடக்கும் சக்கரம்  4.#சர்வசௌபாக்யதாகசக்கரம். பதினான்கு சிறிய முக்கோணங்கள் ஆன எல்லா அதிஷ்டங்களையும் தரும் சக்கரம். 5.#சர்வஅர்த்தசாதகசக்கரம். பத்து சிறிய முக்கோணங்களால் ஆன எல்லா செல்வங்களையும் தரும் சக்கரம். 6.#சர்வரஷாகரசக்கரம். பத்து சிறிய முக்கோணங்களால் ஆன எல்லா பாதுகாப்பகளையும் தரும் சக்கரம். 7.#சர்வரோகஹரசக்கரம்.  எட்டு சிறிய முக்கோணங்களால் ஆன எல்லா நோய்களையும் அழிக்கும் சக்கரம்  8.#சர்வசித்திப்ரதாசக்கரம். ஒ...

அதில் ஆன்மீக என்பது #ஒருபாதையா?. அல்லது #உணர்வா

Image
இது நாள்வரை ஆன்மீகத்தைப் பற்றிய நிறைய பதிவை பதிந்துள்ளேன்.  அதில் ஆன்மீக என்பது  #ஒருபாதையா?. அல்லது  #உணர்வா  என்ற ஒரு கேள்வி. அதற்கு எனது பதில்  #அதுஒருஉணர்வு.  காரணம் ஞானிகள் தங்கள் பகவானிடம் உணர்ந்ததை தான்,பாடல்கள் மற்றும் ஸ்லோகங்கள் வெளிபடுத்தினர். அந்த ஸ்லோகங்கள் அல்லது பாடல்கள் நாம் உணர்ந்ததான் அதன் வலிமையை நாம் உணரமுடியும். அது எவ்வாறு dr.சுதாசேஷையன் தனது சொற்பொழிவில் ஒரு மொழி , அந்த மொழி அதன் அர்த்தம் என்பது இரு கண்கள் என்பார்.  ஏன் என்றால் மொழி தெரிந்து அதன் அர்த்தம் தெரியவில்லை என்றால், அந்த மொழி தெரிந்து எந்தொரு உபயோகமில்லை.  இதற்கு உதாரணமாக  சாக்த வழிபாட்டில் அம்பாளுக்கு மிக உயர்ந்ததாக கருதுவது  ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமம்.  அந்த சஹஸ்ர நாமத்தை பாராயணம் செய்து, அதன் அர்த்தம் தெரியாமல் பாராயணம் செய்தால் அந்த உணர்வு நம்மில் சென்று அடையாது.  காரணம் அது ஒரு திருநாமாகவே நம்மைச் சென்று அடையும் . அதன் அர்த்தம் தெரிந்தால் அந்த திருநாமத்தை நம்மால் நன்கு உணர முடியும். ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமத்தில்  #பஞ்சப்ரேதஆஸானா  என்ற திருந...

ஶ்ரீசக்ரதியானம்

Image
 #ஶ்ரீசக்ரதியானம் . ஹரி, ஹர  பிரம்மா  ஆகிய  மூவரின்  ஒளி, மூன்று புள்ளிகளாலான  ஹ்ரீம் என்ற  முக்கோணத்தின் நடுவில் காமேஸ்வரனின்  இன்ப/காம உணர்வைத் தூண்டும்  சிகப்பு, மஞ்சள்  நீல  தீப்பிழம்புகளுடன்  ஒளிரும் ஶ்ரீதேவியை  நான் தியானிக்கிறேன். ஶ்ரீதேவி தனது கீரிடத்தில்  முழுநிலை  (சௌ:)   அணிந்திக்கிறாள்: காமேஸ்வரனுடன் கூடுவதற்கான விருப்பம் (க்லிம்)  அவளை ஆட்கொண்டுள்ளது.   அவள் தங்க இழைகளால்  ஆடையை அணிந்திருக்கிறாள். மேலும் பாலா போன்று மாசற்றவளாகவும் சந்திர ஓளி போல அழகாகவும் இருக்கிறாள்.   மூன்று கண்கள் உடையவள். தன் நான்கு கைகளில்  புத்தகம் (அறிவு)  கயிறு அங்குசம்  மற்றும்  கடிதங்களில் மாலை  ஆகியவற்றை வைத்திருக்கிறாள். அவள் அழகு, அழகியல், இணக்கம், மகிழ்ச்சி  மற்றும்  துடிப்பு  ஆகிய அனைத்தின்  உருவமாக திகழ்பவள். அவள், இனி சொல்லிவிருக்கும்  தங்கள் மனைவிகளை வணங்கும், அனைத்து தெய்வங்களும் மண்டலமாக விளங்கும் ஶ்ரீசக்கரத்தில் விளங்குகிறாள...

தேவிகட்கமாலாஸ்தோத்திரம்ஒருஅறிமுகம்

Image
 #தேவிகட்கமாலாஸ்தோத்திரம்ஒருஅறிமுகம் . #கட்கமாலா,  ஶ்ரீசக்கர பூரண மஹாமேருவில் அமர்ந்து அருள்பாலிக்கும் தேவியின் திவ்ய நாமாக்கள் அடங்கிய பிராத்தனைக்கு உரிய ஒரு சக்தி வாய்ந்த ஸ்தோத்திரமாகும். #கட்க என்றால் #வாள் எனறும். #மாலா என்றால் #மாலை என்றும் பொருள். அதாவது இந்த ஸ்துதியை ஸ்துதிப்பவர்களின் கழுத்தில் அணிந்த மாலை போன்று கவசமாக இருந்து ,அவர்களை அன்னை  காப்பாள் என்று பொருள். கட்கமாலா மனனம் செய்பவ -பகர்ளுக்கு ஶ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு நிலைகளின் பொருளையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தி,  வெளிப்புறச் சுற்றில் தொடங்கி நடுப்புள்ளி வரை அழைத்து செல்வதுடன் அவர்களின் பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது. ஶ்ரீசக்கரத்தின் மையத்திற்கு , 98 யோகினிகள் அல்லது தேவியின் அம்சங்களை வணங்கிச் செல்லும்போது தன்னிடமுள்ள பற்றுகளை ஓவ்வொன்றாக களைந்து இறுதியில் அன்னையின் நினைவிலேயே நிலைக்கச் செய்ய உதவுகிறது. அவ்வாறு ஒவ்வொரு நிலையையும் பற்றிய ஸ்தோத்திரத்தின் பகுதியை உச்சரிக்கும் போது, அந்த நிலைக்குரிய தேவதைகள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்று மனதில் நிறுத்தி வழிப்பட்டு அந்தந்த தேவதைகளின் சக்திகளை நம்மைச்...

ஶ்ரீசக்கரத்தின்9ஆவரணங்கள்

Image
 #ஶ்ரீசக்கரத்தின்9ஆவரணங்கள் . 1.#திரைலோக்யமோகனசக்ரம் அல்லது #பூரம். வெளிபுறம் உள்ள நான்கு வாசல்களுடன் கூடிய மூன்று கோடுகள் கொண்டசதுரமும் அடுத்துள்ள மூன்று வட்டங்களும் சேர்ந்த மூலவுலங்களையும் மயக்கம் சக்கரம். 2 .#சர்வஆசபரிபூரகசக்கரம். பதினாறு  இதழ்கள் கொண்ட தாமரையால் ஆன அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் சக்கரம். 3.#சர்வசம்க்ஷோபணசக்கரம். எட்டு இதழ்கள் கொண்ட தாமரையால் ஆர அனைத்து கிளர்ச்சிகளையும் அடக்கும் சக்கரம்  4.#சர்வசௌபாக்யதாகசக்கரம். பதினான்கு சிறிய முக்கோணங்கள் ஆன எல்லா அதிஷ்டங்களையும் தரும் சக்கரம். 5.#சர்வஅர்த்தசாதகசக்கரம். பத்து சிறிய முக்கோணங்களால் ஆன எல்லா செல்வங்களையும் தரும் சக்கரம். 6.#சர்வரஷாகரசக்கரம். பத்து சிறிய முக்கோணங்களால் ஆன எல்லா பாதுகாப்பகளையும் தரும் சக்கரம். 7.#சர்வரோகஹரசக்கரம்.  எட்டு சிறிய முக்கோணங்களால் ஆன எல்லா நோய்களையும் அழிக்கும் சக்கரம்  8.#சர்வசித்திப்ரதாசக்கரம். ஒரு சிறிய முக்கோணத்தால் ஆன எல்லா செயல்களிலும் முன்மை தரும் சக்கரம் . 9.#சர்வஆனந்தமயசக்கரம். ஒரு புள்ளி அல்லது பொட்டால் ஆன பேரானந்தமய சக்கரம். இச்சக்கரத்தின் ஒன்பது ஆவரணங்கள...

வசந்தநவராத்திரிசிறப்புபதிவு#

Image
 #வசந்தநவராத்திரிசிறப்புபதிவு# எல்லாம் வல்ல அம்பிகைக்கு நான்கு விதமான நவராத்திரிகள் உள்ளது.  நான்கு விதமான நவராத்திரி  1. வசந்த நவராத்திரி - ஸ்ரீ லலிதாம்பிகைக்கு உரிய நவராத்திரி. 2. ஆஷாட நவராத்திரி- ஸ்ரீ வராகி அம்பிகைக்குரிய நவராத்திரி.  ( வராஹி அம்பிகை எல்லாம் வல்ல லலிதாம்பிகையின் சேனாதிபதி ஆவார்)   3. நமக்கெல்லாம் தெரிந்த புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரி- துர்க்கை லட்சுமி மற்றும் சரஸ்வதி மூன்று சக்திகளுக்கு நடத்தப்படும் நவராத்திரி சாரதா நவராத்திரி. 4. சியாமளா நவராத்திரி- எல்லாம் வல்ல லலிதாம்பிகையின் மந்திரியாக விளங்கும் ஸ்ரீ ராஜ சியாமளா,  ராஜ மாதங்கி அம்பாள் . வசந்த நவராத்திரி மற்றும் சாரதா நவராத்திரி இந்த இரண்டு நவராத்திரி .. முக்கியத்துவம் என்ன என்றால் ?. அந்த காலங்களில் பூமியில் நிறைய மரணங்கள் எமதர்மனின் கோர பற்கள் மூலமாக நடைபெறும். இதனை தடுக்க எல்லாம் வல்ல அம்பிகையை நாம் பிரார்த்தனை செய்யும்போது அம்பாள் அசுரனை சம்ஹாரம் செய்வது போல் கெட்டதுகளை தீர்த்து வைப்பார். வசந்த நவராத்திரி -  ஸ்ரீ சக்ர பூஜை சிறப்பு  19.03.2026 - 27.03.202...

ஶ்ரீசக்கரம் #ஒரு #புரிதல்.

Image
 #ஶ்ரீசக்கரம் #ஒரு #புரிதல். ஶ்ரீசக்ரம் அல்லது ஶ்ரீயந்திரம் என்பது லலிதா (அழகியவள்/நேர்த்தியானவள் / விளையாடுபவர்)  அல்லது  திரிபுரசுந்தரி(பூர்,புவ மற்றும் ஸ்வ என்ற மூவுலங்களிலா அழகி) என்ற பெண் வடிவில் இறை சக்தியானது, இரு பரிமாண தட்டை வடிவில் ஒன்பது முக்கோணங்கள் சூழ நடுவில் ஒரு புள்ளியில் இருந்துக் கொண்டு தன் சக்தியை வெளிபடுத்திவரும் அமைப்பாக்கும். இதுவே முப்பரிமாண வடிவில் இருப்பினா அதற்கு #மஹாமேரு என்று பெயர்.  இந்த யந்திரத்தில் மேல் நோக்கியிருக்கும்படி உள்ள நான்கு இரு சமபக்க முக்கோணங்கள் ஆண் தத்துவமான சிவனையும் , கீழ் நோக்கி  உள்ள ஐந்து இருசமபக்க முக்கோணங்கள் பெண் சக்தியையும் குறிக்கின்றன. ஐந்து முக்கோணங்கள் கீழே உள்ளது போல் யந்திரத்தை வைத்து வழிப்பட்டால் பெண் சக்தியை முதன்மைப் படுத்தி வணங்குவதாக பொருள்படும். இதில் 9 முக்கோணங்கள் இருப்பதால் இதை நவயோனி சக்கரம் என்று அழைப்பதுண்டு. மேலும் 9முக்கோணங்கள் 10வெவ்வேறு முத்திரைகளையும் அவற்றிற்குரிய தேவதைகளையும் குறிக்கின்றன. மேலும் இந்த ஒம்பது முக்கோணங்களும் ஒன்றொடொன்று பின்னி 43சிறிய முக்கோணங்கள் உருவாக்கின்றன.   ...

ஸ்ரீ தேவீ கட்கமாலா ஸ்தோத்ரம்

Image
 ஸ்ரீ தேவீ கட்கமாலா ஸ்தோத்ரம் :- ஓம்  நமஸ்  த்ரிபுரஸுந்தரி ஹ்ருதயதேவி சிரோதேவி  சிகாதேவி  கவச தேவி  நேத்ரதேவி  அஸ்த்ரதேவி காமேச்வரி  பகமாலினி நித்யக்லிந்நே  பேருண்டே  வஹ்நி வாஸிநி  மஹா வஜ்ரேச்வரி  சிவதூதி  த்வரிதே  குலஸுந்தரி  நித்யே  நீலபதாகே  விஜயே  ஸர்வமங்களே க்ஷ ஜ்வாலாமாலினி  சித்ரே  மஹாநித்யே  பரமேச்வர  பரமேச்வரி மித்ரேசமயி  ஷஷ்டீசமயி  உட்டீசமயி  சர்யா நாதமயி  லோபாமுத்ராமயி  அகஸ்த்யமயி  காலதாபநமயி  தர்மாசார்யமயி  முக்தகேசீச்வரமயி  தீபகளா நாதமயி  விஷ்ணுதேவமயி  ப்ரபாகரதேவமயி தேஜோதேவமயி  மநோஜ தேவமயி  (கல்யாண தேவமயி  வாஸுதேவமயி  ரத்நதேவமயி  ஸ்ரீராமாநந்தமயி) அணிமா ஸித்தே  லகிமாஸித்தே  (கரிமாஸித்தே)  மஹிமாஸித்த  ஈசித்வஸித்தே வசித்வஸித்தே  ப்ராகாம்ய ஸித்தே  புக்தி ஸித்தே   இச்சாஸித்தே  ப்ராப்திஸித்தே  ஸர்வகாமஸித்தே ப்ராஹ்மி  மாஹேச்வரி  கௌமாரி...

ஶ்ரீசக்ரம்

Image
 ஏன் #ஶ்ரீசக்ரம் பற்றி இவ்வளவு பதிவுகள். சாக்தத்தில் மிக உயர்ந்த தத்துவம் ஶ்ரீசக்ரம் அல்லது மஹாமேருப் பற்றிய சிந்தனைகள். ஶ்ரீசக்ரத்தைப் பற்றி விளக்கும் போது தேவி கட்கமாலா ஸ்தோத்திரத்தைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. ஶ்ரீசக்ரத்தின் மேன்மை உணரந்தது தான் கோபமாக இருந்த அம்பாளை சாந்தபடுத்த ஶ்ரீசக்ரத்தை நிறுவினார் ஆதிசங்கர பகவத்பாதாள் என புராணங்கள் கூறுகிறது  ஶ்ரீசக்ரம் என்பது பிந்துவில் அம்மையும் மற்றும் அப்பனின் இணைவு. அதை தான் முன்பு பதிவிட்டு இருந்தேன். அவர்களின் இணைவே இந்த உலகு என கூறி இருந்தேன். அதனால் தான் ஒவ்வொரு பௌர்ணமி தினதன்று காஞ்சி காமாக்ஷி கோவிலில் நவாவர்ண பூஜை நடைப்பெறுகிறது. அதை நாம் காண வேண்டும் என்றால் அதற்கு நாம் பாக்கியம் செய்து இருக்க வேண்டும். காரணம் ஓவ்வொரு ஆவரணத்தில் உள்ள யோகினி தேவதைகளுக்கும் பூஜை நடத்தபடுகிறது. அந்த யோகினி தேவதைகளைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு ஶ்ரீதேவி கட்கமாலா ஸ்தோத்திரதைப் பற்றிய அறிந்து கொள்வது மிக அவசியம். அதனால் அம்பாளின் அனுகிரஹத்துடன் கட்கமாலா ஸ்தோத்திரதைப் பற்றிய பதிவுகளைப் பற்றிய என்ற எண்ணம் எனது மனதில் தோன்றியது என எண்ணுகிறே...

ஶ்ரீசக்ரத்தின்அமைப்பைப்பு

Image
 கடந்த மூன்று நாட்களாக #ஶ்ரீசக்ரத்தின்அமைப்பைப்  பற்றிய பதிவை கண்டோம். ஶ்ரீசக்ரத்தின் ஏன் அவ்வளவு உயர்வு என்பதைப் பற்றிய காணலாம் ஸ்ரீசக்கரம் – அண்ட சராசரத்தின் மறைநிலை வரைபடம்!  அதன் ரகசியங்களும் தெய்வீக வழிபாட்டு முறைகளும் பிரபஞ்சத்தின் ஆழமான தத்துவங்களை ஒரு சின்ன வடிவில் அடக்கியுள்ள அதிசய மந்திர வடிவம் ஸ்ரீசக்கரம்.  இது வெறும் கோடுகளாலும் முக்கோணங்களாலும் வரையப்பட்ட சித்திரம் அல்ல;  பிரபஞ்ச சக்தியின் மறைநிலை வடிவம் என்று தாந்த்ரீக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சக்தி வழிபாட்டில் மிக உயர்ந்த தத்துவமாக கருதப்படும் இந்த ஸ்ரீசக்கரம்,  அண்டம் முதல் மனிதனின் உள்ளம் வரை உள்ள சக்தி இயக்கங்களை விளக்கும் ஆன்மீக வரைபடமாக கருதப்படுகிறது. ஸ்ரீசக்கரத்தின் தொன்மை பண்டைக்கால தாந்த்ரீக தத்துவம் கூறுவது என்னவென்றால், பழைய கால சடங்கு முறைகளை கடைப்பிடித்து வந்த சாதகர்கள் ஸ்ரீசக்கரத்தை வழிபாட்டின் முக்கிய கருவியாக பயன்படுத்தியுள்ளனர். பழமையான ஆகமங்களிலும் தாந்திரிக நூல்களிலும் கிடைக்கும் ஆதாரங்களின் படி, ஸ்ரீசக்கரத்தின் வடிவம் கிமு  ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே பயன்பாட்டில் இர...

தீர்க்கசுமங்கலிவரம்

Image
 #தீர்க்கசுமங்கலிவரம்   அருளும்  #காரடையான்நோன்பு.. இந்த விரதம் இருந்தால்  மாங்கல்ய பலம் அதிகரிக்கும்* *சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும்.  மாசி மாதம் 30 ஆம் தேதி பூஜை முடிந்த பின்னர் எருமை மாட்டிற்கு தீவனம் அளிக்க வேண்டும்*  *மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில் காரடையான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும்.  மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பாகும்.  மாசி மாதத்தின் கடைசி நாளும், பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் தினத்தில் தான் காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.  *மாசிக் கயிறு பாசி படியும் என்பார்கள்.  அதாவது,  காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் கயிறானது, பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும் கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர்*. *காரடையான் நோன்பு சத்தியவான் சாவித்திரி கதை* *மந்திர தே...

சக்ரராஜம்என்றுபோற்றபடும்ஶ்ரீசக்ரத்தின்அமைப்பு தொடர்ச்சி3

Image
 #சக்ரராஜம்என்றுபோற்றபடும்ஶ்ரீசக்ரத்தின்அமைப்பு . தொடர்ச்சி-3 #7ஸ்ரீசக்ரத்தின்  மூன்றாவது ஆவரணமாகிய  எட்டிதழ் கமலம்,  அஷ்டதளபத்மம் எனப்படுகிறது.  இது சிவமூலமாக அறியப்படுகிறது. '#ஸர்வஸம்க்ஷோபணசக்ரம்'  என்றும் அறியப்படும்  இதில், #குப்ததரயோகினிகளான' எட்டு சக்திகள் வாசம் செய்கின்றனர். இவர்களின் நாயகி, ' #த்ரிபுரஸூந்தரி'  என்ற திருநாமமுடைய தேவி.  இந்த யோகினிகள் மிகவும் கண்டிப்பானவர்கள்.   இந்த தேவதைகளின் கட்டுப்பாட்டிலேயே,  ப்ரகிருதி, மஹத் தத்வம்,  அகங்காரம், பஞ்ச தன்மாத்திரைகள்,  பஞ்ச பூதங்கள்,  கர்ம,ஞானேந்திரியங்கள்,  அந்தக‌ரணம்,  புருஷன்(ஆத்மா)  ஆகிய யாவும் இருக்கின்றன.  இந்த யோகினிகளைப் பற்றி இன்னும் சற்று விரிவாகப் பின்னொரு பதிவில் பார்க்கலாம். நம் உடலில், தொப்புள்,  ஸ்ரீசக்ரத்தின்  எட்டிதழ் கமலத்தைக் குறிக்கிறது. ஆதாரச் சக்கரங்களில் மூலாதாரம்,  ஸ்ரீசக்ரத்தின்  எட்டிதழ் கமலத்தைக் குறிக்கிறது. #8ஸ்ரீசக்ரத்தின்,  இரண்டாவது ஆவரணமாகிய  #பதினாறிதழ்கமலம்,  #ஸர்வாச...

சக்ரராஜம் தொடர்ச்சி 2

Image
 #சக்ரராஜம் என்று போற்றபடும் ஶ்ரீசக்ரத்தின் அமைப்பு. 4. ஸ்ரீ சக்ரத்தில், #அந்தர்த்தசாரம்' என்ற உள்பத்து கோணம் #ஸர்வரக்ஷாகரசக்கரம் என்ற பெயர் பெற்றுத் திகழ்கிறது.  இது ஆறாவது ஆவரணமாக அமைந்துள்ளது.  இங்கு #நிகர்ப்பயோகினிகளும்'  அவர்களின் நாயகியாக,  #திரிபுராமாலினியும்'  வீற்றிருந்து அருளுகிறார்கள். இதுவும் சக்தி மூலமாகக் கருதப் படுகிறது. நம் உடலில்,  இரு புருவங்களின் மத்தியில் உள்ள பகுதி, உள்பத்து கோணத்தைக் குறிப்பதாக அமைகிறது.  ஆதாரச் சக்கரங்களில்,  அநாஹதம் ஸ்ரீசக்ரத்தின் உள்பத்து கோணத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. 5. ஸ்ரீசக்ரத்தில்,  ஐந்தாவது ஆவரணமான, வெளிப்பத்து முக்கோணங்கள் #பஹிர்த்தசாரம்#என அழைக்கப்படுகின்றன.  இதில் வாசம் செய்யும்  #குலோத்தீர்ணயோகினிகளுக்கு' #திரிபுராஸ்ரீ'  என்ற  திருநாமமுடைய தேவி தலைவியாக இருக்கிறாள்.  இந்த அம்பிகை,  தங்கமயமான சிம்ம வாகனத்தில் வீற்றிருந்து அருளுகிறாள்.  இந்த சக்கரம், சத்குருவை அடையும் மார்க்கத்தைக் காட்டுவதாகவும்,  குரு சிஷ்யப் பரம்பரையின் முக்கியத்துவத்தை...

சக்ரராஜம்

Image
 #சக்ரராஜம் என்று போற்றபடும்  #ஸ்ரீசக்ரத்தின் அமைப்பு பற்றி,  தேவியின் திருவடி, ஸ்ரீ சக்ரத்தின் அமைப்பு பதிவில் எழுதியிருந்தேன்.  அதன் தொடர்ச்சியாக, இந்தப் பதிவினைக் கொள்ளலாம். உள்ளம் பெருங்கோயில்  ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானுக்கு  வாய் கோபுரவாயில் என்று பாடுகிறார் திருமூலர் பெருமான்.  நாம் வெளியே காணும் பிரபஞ்சமும் நம் உடலும் ஒன்றையே சுட்டுகின்றன. 'அண்டத்திலுள்ளதே பிண்டம் பிண்டத்திலுள்ளதே அண்டம் அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும் போதே!" ... என்று சட்டைமுனிவர் பெருமான் பாடுகிறார். இரத்தம், தோல், தசை, நரம்புகள் முதலியவற்றாலான   இவ்வுடலே பிண்டம் எனப்படுகிறது.  இதில் தோல், இரத்தம், தசை நார்கள்,எலும்பு, மூளை என ஐந்தும் சக்திமூலங்கள் என்றும்,  ஜீவன், பிராணன், சுக்கில தாது, தேஜஸ் ஆகிய நான்கும் சிவமூலங்கள் என்றும் அறியப்படுகின்றன.  சிவ, சக்தி மூலங்கள் சேர்ந்த தேகமே பிண்டம். அண்டம் எனப்படுவது, பஞ்சபூதங்கள் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்),  ஈஸ்வர தத்துவம், சதாசிவ தத்துவம், சுத்த வித்யை, மாயை ஆகிய ஒன்பதின் தொகு...

தேவிகட்கமலா மற்றும் 98யோகினிகள்

Image
 #தேவிகட்கமலா என்பது நம்மை #காக்கும்அரண். அது எவ்வாறு ? ஒவ்வொரு ஆவரணத்திலும் யோகினிகள்.  அதே மாதிரி 98யோகினிகள் . அவர்களின் #திருநாமபாராயணம். அதை செய்வதற்கு நாம்பாக்கியம் செய்து இருக்க வேண்டும். அது எவ்வாறு. நாம் கோவிலின் வாசலில் குடி இருந்தாலும்.  அவளை வணங்குவதற்கு அவளின் அனுகிரஹம் வேண்டும். அவ்வாறே இந்த கட்கமாலா பாராயணம். ஓவ்வொரு ஆவரணத்திலும் உள்ள யோகினிகளைப் பற்றிய பதிவை வரும் நாட்களில் காணலாம். அது எவ்வாறு சாத்தியம் ஆயிற்று. பல நாட்கள் அம்பாளின் ஶ்ரீ லலிதா சஹஸ்ர நாம பாராயணம். பாராயணத்தின் பலனாக தானாகவே தேவிகட்கமலா ஸ்தோத்திர புத்தகம் அம்பாளின் சந்நிதியில் வைத்து கிடைக்கப்பெற்றேன். அதேபோல் அம்பாளின் சந்நிதியில் ஶ்ரீமஹாமேரு கிடைத்தது. தேவிகட்கமலா ஸ்தோத்திரம் பாராயணம் செய்துகொண்டு இருக்கும் போது . ஶ்ரீசக்ரம் அதில் ஓவ்வொரு ஆவரணத்தில் உள்ள தேவிகள் குறித்து குறிப்பு அடங்கிய பெரிய அளவினா ஶ்ரீசக்ரம் திருப்படம். தற்போது தொடர்ந்து ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமம் மற்றும் தேவிகட்கமலா பாராயணம். பாராயணம் செய்யும் போது யோகினிகளைப் பற்றிய விரிவான பதிவை பதியலாம் என்ற எண்ணம் எண்ணத்தில் உதித்தது....

அம்பிகையின்வைபோகம்பாகம்2

Image
 #அம்பிகையின்வைபோகம்பாகம்2 அம்மா என்று அழைத்தால் ஓடி வருவாள். அம்பிகையை நோக்கி செல்லும் பாதை கணித அமைப்பு கொண்டதே ஸ்ரீ சக்ரத்தின் அமைப்பாகும்.  சாதகன் இந்த பிரபஞ்சத்தைக் கடந்து நிற்கும் பேரறிவான,  ஆற்றலை எவ்வாறு அடைகிறான் என்பதே அடுத்தடுத்த யோகினிகள் அமைப்பிடமும்,  அவர்களின் செயல்பாடுகளையும் சாதகன் தன்னுள் மெல்ல , மெல்ல தன்னகத்துள்ளே உணர்ந்து கொள்கிறான். இவ்வண்டம் கடந்த பேரறிவே தானாகிறான். உடல் வேறு ,  தான் வேறு என்ற அனுபவம் பெற்ற பின் மிஞ்சி இருப்பது ஆன்மா. ஆன்மாவே ..அறிவுமயம்.  மனமற்ற எண்ணங்களற்ற …..ஆனந்தமயம். அன்னையே !  உன்னை நீயே…..உள்ளபடி காண்பித்து அருள்க ” என பிராத்தித்து தினமும் இதனை பாராயணம் செய்தல் மிகவும் நன்று. ஸ்ரீ வித்யா உபாசகர்கள் நவாவர்ண பூஜையில் கிடைக்கும் பலனை …….  ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரத்தின் மூலம் பெறலாம் என்பர். செய்ய வேண்டியதெல்லாம் இதனை தினசரி பாராயணம் செய்தலே. பின்னர் அன்னையின் காட்சியும், குருவும் தாமே வந்து அடுத்த படிக்கு அழைத்துச் செல்வார்கள். இதனை பாராயணம் செய்யுமிடத்தில்  ஏழ்மை ,  துன்பம் ,  நோய்கள...