Posts

Showing posts from May, 2025

ஏன் இந்த உமையொருபாகன்?.

Image
 உமையொருபாகன் ஏன் இந்த உமையொருபாகன்?. நேற்றைய முந்தைய நாள்  அபிராமி அந்தாதி பதிவு. மூன்று கோலங்கள். வவ்விய பாகத்து இறைவனும்  நீயும் மகிழ்ந்திருக்கும், செவ்வியும்  உங்கள் திருமண கோலமும், சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து என்னை ஆட்கொண்ட  பொற்பாதமும் ஆகிவந்து. வவ்விய பாகம் - எஞ்சிய பாகம் - எது எஞ்சிய பாகம் அம்பாள் ஆட்கொண்டத்தின் மற்றொரு பாகம். அதாவது வாமபாகத்தின் மற்றொரு பாகம் வலது பக்கம் - சிவன்,  உமையம்மை இருவரும் மகிழ்ந்திருக்கும் கோலம் - அர்த்தநாரீஸ்வர கோலம். அம்மையப்பர் கோலம் என்றும் சொல்வர். கொடிய காலன் என் மேல் பாசக்கயிற்றை விடும்போது, நம் சிந்தனையுள் இருக்கவேண்டியவை: 1. அர்த்தநாரீஸ்வர திருக்கோலம் (திருச்செங்கோடு என்னும் ஸ்தலத்தில் இக்கோலம் ப்ரசித்தி) 2. சிவன் - பார்வதி கல்யாண கோலம் திருமணஞ்சேரி, திருவீழிமிழலை போன்ற ஸ்தலங்களில்  இக்கோலம் ப்ரசித்தி) 3. நம் அறியாமையினை அகற்றும் அம்பாளின் பொற்பாதம் இம்மூன்றும் தன் முன்னே நிற்க வேண்டும் என்று பட்டர் வேண்டுகிறார். மேலே கூறப்பட்டுள்ள  அர்த்தநாரீச்வர கோலம்,  திருமண கோலம் ஆகியவை ஆகிய இரு கோலங்கள் அம...

அறிவோம் நமது சாஸ்திரம் -மஹாபெரியவா அருள்வாக்கு

Image
 அறிவோம் நமது சாஸ்திரம் மஹாபெரியவா அருள்வாக்கு மறைந்த  நம் தாய் தந்தையர்க்கு, முன்னோர்க்கு,தர்ப்பணம், சிராத்தம் - பண்ணுவதால் என்ன பயன்? யாரோ ஒருவருக்கு வாழைக்காய், அரிசி கொடுத்தால் அது முன்னோர்களைச் சேருமா? அற்புத விளக்கமும், பதிலும் கொடுத்த மகா பெரியவா. ஒருவர் பட்டணத்தில் பிள்ளையை படிக்க வைத்திருந்தார். பரிட்சைக்குப் பணம் கட்டவேண்டியிருக்கிறது. அதுவும் மறுநாள் கட்ட வேண்டியிருக்கிறது.  உடனே அப்பாவுக்கு தந்தி மணியாடரில் பணம் அனுப்பு என்று எழுதினான்.  அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் தனித்தனியாகத் தெரியும். பிள்ளையோ தந்தி மணியார்டர் அனுப்பும்படி எழுதியிருக்கிறான். அப்பா தபாலாபீசுக்கு போனார். ரூபாயைக் கொடுத்துவிட்டுத் தந்தி மணியார்டர் பண்ண வேண்டும் என்றார். அவர், தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஒட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணினார்.  ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, சரி, உம்முடைய பணம் வந்து சேர்ந்துவிடும். அனுப்பியாகிவிட்டது என்றார். குமாஸ்தா பணத்தை பெட்டியில் போட்டதையும், ஒட்டை பண்ணிக் கம்பியில் கோர்க்காமலிருப்பத...

கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் #காமாக்ஷி#

Image
 #அறிந்ததலம்அறியாததகவல்கள்# கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் #காமாக்ஷி# இங்கே அன்னை காமாட்சியின் அருள் வேண்டி வந்தார். அப்போது அவர் அகக் காதில்,  “இங்கே ஆலயத்தில் சந்நதி கொண்டுள்ள தர்மசாஸ்தாவின் கைச்செண்டினைப் பெற்றுச் செல்!  நீ போகும் இடமெலாம் வெற்றித் திருமகள் தாண்டவமாடுவாள்”  என்று கூறி அருள் புரிந்தார் அன்னை. அதன்படியே கரிகாற்சோழர், தர்மசாஸ்தா சந்நதி வந்து  விழுந்து வணங்கினார். அப்போது தர்மசாஸ்தா விக்கிரகத்தின் கையில் இருந்து,  ஆசி வழங்குவதைப்போல் செண்டு கீழே விழுந்தது. அதைக் கைக்கொண்டு திக்விஜய யாத்திரைக்குப் புறப்பட்ட கரிகாற்சோழர், இமயமலை வரை சென்று இமயத்தில் புலிக்கொடி நாட்டினார். இச்செய்தியை சிலப்பதிகார மேற்கோள் பாடலாக அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார், கச்சி வளைக்கைச்சி காமகோட்டம் காவல் மெச்சி இனிதிருக்கும் மெய்ச்சாத்தன் கைச்செண்டு கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான் செம்பொற் திகிரி திரித்த செண்டு - என்பதே அப்பாடல். துர்வாசர் வகுத்துத் தந்த `சிந்தாமணி தந்திரம்’ என்ற ஆராதனை முறைப்படியே,  இங்கு அன்னை காமாட்சிக்கு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மற...

#அறிந்ததலம்அறியாததகவல்கள்#

Image
 #அறிந்ததலம்அறியாததகவல்கள்# முக்தித் தலங்களில் ஒன்று,  முக்தித் தலங்களான அயோத்தியா, வடமதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகாபுரி எனும் ஏழு தலங்களில், தமிழ் நாட்டில் இருக்கும் ஒரே தலம் #காஞ்சி# கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான  தியாகராஜ சுவாமிகள்,  முத்துஸ்வாமி தீட்சிதர்,  சியாமா சாஸ்திரிகள்  எனும் மூவரும் அன்னை காமாட்சியைப் பாடியிருக்கிறார்கள். அன்னை காமாட்சியை வேண்டி சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் பாடிய தமிழ்க் கீர்த்தனை, தருணம் ஈதம்மா என்னை ரட்சிக்க கருணாநிதியான காமாட்சி ரட்சிக்க அனுதினமும் எந்தன் நாக்கில் உன் நாமம் அதுவலால் மற்றொன்றும் இல்லை என் நேமம்மனக்கவலை தீர்க்க மறு தெய்வம் உன்னைப்பார்க்க எனக்கு உண்டோ உனக்கேற்க இரங்கி உன் கண் பார்க்க.... .(தருணம் ஈதம்மா) காஞ்சி காமாட்சி தன்னிடம் இருந்து இரு காமாட்சிகளைத் தோற்றுவித்தார்.  1. தபஸ் காமாட்சி.  (காமாட்சியின் வலது பக்கத்தில்) 2. ஹேம காமாட்சி எனப்படும் பங்காரு காமாட்சி. காமாட்சியும் ஐந்தும்;  அன்னை காமாட்சிக்கும் ஐந்திற்கும் பல விதமான தொடர்புகள் உண்டு.  அவற்றில் ...

#அபிராமிஅந்தாதிபாடல்17#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்17# கன்னிகைகள் நல்வரன் அமையப்பெறுவர் அதிசயமான வடிவுடையாள், அரவிந்தம் எல்லாம் துதி சயானன  சுந்தரவல்லி,  துணை இரதி பதி சயமானது  அபசயமாக,  முன் பார்த்தவர் தம் மதி சயமானதன்றோ,  வாமபாகத்தை  வவ்வியதே அபிராமி அனைவரும் அதிசயம் அடையும்படியான அழகுவாய்ந்தவள்.  அரவிந்தம் - தாமரை -  முதலிய மலர்கள் எல்லாம் துதிக்கத்தக்க, வெற்றி நிறைந்த முகம் உடையவள்.  சயானன - ஜயம் (வெற்றி) முகம். ஹயக்ரீவருக்கு குதிரை முகம்.  ஹய - குதிரை.  ஹயானனன், அச்வானனன் என்றும் அவரை அழைப்பதுண்டு.  அஸ்வம் - குதிரை.  அதுபோல் சயானன என்றால் வெற்றி முகம் "கமலாகோடி சேவிதா" என்று  ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம்,  அம்பாளை கோடி தாமரை மலர்கள் வணங்குகின்றன என்று கூறப்பட்டுள்ளது.  இங்கு தாமரை - லக்ஷ்மி தேவி அல்லது அழகிய வஸ்துக்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். அம்பாளை அழகிய வஸ்துக்கள் வணங்குகின்றனவா?  அல்லது  அம்பாளை வணங்குவதால் அவை அழகாக இருக்கின்றனவா?  முடிவு நம்மிடத்தில்.  எதுவாக இருந்தாலும் அம்பாளை வணங்குவதால் ...

மாத்ருகா புஷ்பமாலா

Image
 பகவத்பாதாள் மாத்ருகா புஷ்பமாலா என்ற  ஒரு ஸ்தோத்திரத்தை அருளினார் இந்த ஸ்தோத்திரத்தில், ஒவ்வொரு பாடலின் முதல் வரியின் முதல் எழுத்தும்  காதி வித்யையான பஞ்சதஸி மந்திரமான  “க ஏ ஈ ல ஹ்ரீம்;  ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்;  ஸ க ல ஹ்ரீம்”  என்பதிலிருந்தே ஆரம்பிக்கிறது. இந்த ஸ்தோத்திரம்,  இறைவியை மானஸ பூஜை முறையில் ஆராதிக்க பயன்படுத்தப்படுகிறது. இதை இங்கு பதிவிடும் பொழுது  ஸ்ரீ ஆதி சங்கரரின் தொலைநோக்கு நன்கு புலனாகிறது. ‘ஸ்ரீ வித்யா’ எனப்படும்  ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பிகையின் ஆராதனையில் மந்திரம்,  முத்திரை,  அனுஷ்டானம் போன்ற எல்லாமே மிகவுமே விஷேஷமானது, கடினமானது.  இந்த முறையில் சித்தி பெற்ற ஒருவரே,  இன்னொருவருக்கு தீக்ஷை அளிக்கமுடியும்.  உதாரணத்திற்கு, அம்பிகையின் கட்கமாலா சித்தி அருளப்பட்டாலே,  ஸ்ரீ வித்யாவின் ‘பாலா மந்திரம்’ எனும் த்ரியக்ஷரி உபதேசம் நடக்கும். த்ரியக்ஷரி சித்தியானாலே ‘பாலா திரிபுரசுந்தரி ஷடாக்ஷரி’ கிட்டும், பாலா திரிபுரசுந்தரி ஷடாக்ஷரி பாராயணம் செய்பவரே பாலாம்பிகா த்ரியக்ஷரி உபதேசம் செய்ய முடியும். பாலா திரிப...

#திருநெய்த்தானம்##தில்லைஸ்தானம்#

Image
 #திருநெய்த்தானம்##தில்லைஸ்தானம்# கோயில் தலவரலாறு இறைவர் திருப்பெயர்:   நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர்.  இறைவியார் திருப்பெயர்:  பாலாம்பிகை.   தல மரம்:     வில்வம் தீர்த்தம் : காவிரி  வழிபட்டோர் சம்பந்தர், அப்பர்,சுந்தரர் ,சேக்கிழார், சரசுவதி, காமதேனு, கௌதமமுனிவர் ஆகியோர். சிவன் அபிஷேகப் பிரியர்.  காமதேனு தனது பாலாலும், பாலில் கட்டி நின்ற நெய்யாலும் அபிஷேகித்தது. இவர் பசு நெய்யில் ஆடிய அப்பர் ஆதலால் நெய்யாடியப்பர். தல வரலாறு முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பசு ஒன்று தினமும் தன் பாலை குறிப்பிட்ட இடத்தில் சொரிவதை வழக்கமாக கொண்டிருந்தது. தினமும் இப்படி செய்ததால் வெயிலுக்கும், மழைக்கும் பால் முழுவதும் நெய்யாக மாறியது.  ஒரு நாள் மாடு மேய்க்கும் இடையன் மறைந்திருந்து பார்க்க பசு மறைந்து விட்டது.  காமதேனுவே பசுவாக வந்து பால்சொரிந்த விஷயம் இவனுக்கு தெரியவில்லை.  இடையன் கூறியதைக்கேட்ட மக்கள், நெய் இருந்த இடத்தை தோண்டி பார்த்த போது, அங்கே சிவலிங்கம் இருந்தது. மன்னனுக்கும் இந்த செய்தி பரவியது. சிவபக்தனான அவன் சிவனுக்கு கோயி...

மாத்ருகா பஞ்சகம் நான்காவது ஸ்லோகம்.

Image
மாத்ருகா பஞ்சகம் நான்காவது ஸ்லோகம். தாய் என்பவள் தன்னலம் பாராமல் நம்மை வளர்க்கிறாள். அந்த தாயிற்கு செய்ய வேண்டிய கடமை இந்த மகனுடையது. அதற்காக இந்த ஸ்லோகத்தை சமர்ப்பிக்கிறேன். 4.முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத: ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II தாயே,  என்னை, முத்தே, மணியே கண்ணே என பலவாறு கொஞ்சி மகிழ்ந்தீர்கள். நல்ல பழக்கங்களை தங்கள் அமுத மொழிகளால் புகட்டினீர்கள்.  பலவிதமாக பாராட்டி ஆனந்தம் அடைந்தீர்கள்.   அத்தகைய அன்பான தங்களுக்கு என்னால் கொடுக்க முடிந்தது இந்த காய்ந்த வாய்க்கரிசி மட்டுமே. இதனை ஏற்று என்னை ஆசீர்வதிக்க வேண்டும் என கதறுகிறார்.

மாத்ருகா பஞ்சகம் இரண்டாவது ஸ்லோகம்.

Image
மாத்ருகா பஞ்சகம் இரண்டாவது ஸ்லோகம். உறவுகளில் மிக உயர்ந்த ஸ்தானம் தாய். அந்த தாய்க்காக இந்த ஸ்லோகத்தை சமர்பணம் செய்கிறார் ஆச்சாரியர். 2.குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம் ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II அன்னையே,  நான் குருகுலத்தில் இருந்த சமயம் ஓர் நாள் விடியற்காலையில் நான் துறவறம் ஏற்றதாக கனவு கண்டு அங்கு வந்தீர்கள்.  அவ்வமயம் நான் குருசேவை நிமித்தமாக வெளியே சென்றிருக்க என்னை காணாமல் தவித்தீர்கள்.  நான் தங்கள் அனுமதியின்றி துறவறம் ஏற்று சென்றுவிட்டேனோ என்ற பயத்தில் அழுதீர்கள்.  தாங்கள் அழுவதை கண்டு குருகுலமே அழுதது.  நான் வந்தவுடன் என்னை கண்டு சமாதானம் அடைந்தீர்கள்.  அந்த தாய்பாசத்திற்கு ஈடாக எதை தர இயலும்.  எந்த ஒரு செயலாலும் அதை ஈடு செய்ய முடியாது.  அதற்காக தங்கள் பாதார விந்தங்களுக்கு என் நமஸ்காரத்தை சமர்ப்பிக்கிறேன்.  அன்போடு அதனை ஏற்று என்னை காத்தருளவேண்டும் என கூறுகிறார். #ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ#
Image
 மாத்ருகா பஞ்சகம் முதல் ஸ்லோகம் பந்தங்களில் மிக உயர்ந்தது தாய் எனும் பந்தம்.  அந்த ஐந்து ஸ்லோகங்களை இப்பகுதியில் காண்போம். இவை ஐந்தும் ஐம்பெரும் சாகரங்கள். இவற்றின் ஆழம் காண இயலாது.  1..ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I ஏகஸ்யாபிந கர்பபாரபரண க்லேசஸ்ய யஸ்ய க்ஷம : தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய தஸ்யை ஜநன்யை நம: தாயே,  நான் கருவாக உங்கள் கர்பத்தில் இருந்த சமயம் எத்தனை வேதனை அடைந்தீர்கள். மசக்கையால் வாந்தி எடுத்து சிரமபட்டீர்கள்.  சிசு ஆரோக்கியமாக வளர காஷாயத்தையும், மருந்துகளையும் முகம் சுளிக்காமல் உட்கொண்டீர்கள்.   சுவையான உணவை உண்ண இயலாது நாவை அடக்கி, வாயை அடக்கி, ருசி பாராமல் பத்திய உணவை ஏற்றீர்கள். தூங்கவும் இயலாது, விழித்திருக்கவும் இயலாது சிரமப்பட்டீர்கள்.  பிரசவ நேரத்தில் தாங்கொணா வேதனையில் அரற்றினீர்கள்.  சிசுவாக நான் தங்கள் அருகே விஸர்ஜனம் செய்ய, தாங்களோ  முகம் சுணங்காமல் என்னை அள்ளியெடுத்து சுத்தம் செய்தீர்கள்.  நான் வளர வளர என் நலனுக்காக தாங்கள் பல தியாகங்களை செய்தீர்கள...

ஆதிசங்கர பகவத்பாதாளுக்கு மாத்ருபக்தி அதிகம்.

Image
 ஆதிசங்கர பகவத்பாதாளுக்கு மாத்ருபக்தி அதிகம்.  சிருங்கேரியில் இருந்த சங்கரர் ஆர்யாம்பா பூதவுடலை விடும் நிலையில் இருக்கிறார் என்பதை தனது ஞானதிருஷ்டியில் அறிந்துகொள்கிறார். அஷ்டமாசித்திகளில் லகிமா என்ற சித்தியினால் தேகத்தை லேசாக காற்றில் மிதக்கும்படி ஆக்கிக்கொண்டு காலடியில் இறங்குகிறார்.  வீட்டு வாசலில் பிராமணர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். சங்கரர் அம்மாவைப் பார்ப்பதற்காக வீட்டினுள் நுழைய காலடி எடுத்து வைக்கும்போது  “பூர்வாஸ்ரம வீட்டிற்குள் சந்நியாசம் எடுத்துக்கொண்டவன் நுழையக் கூடாது” என்று தடுக்கிறார்கள். அம்மா என்ற அன்பை தன்னிடமிருந்து அவர்களால் பிரிக்கமுடியாது என்று வாதாடுகிறார். சமூகத்தை விட்டு விலக்கி வைத்துவிடுவோம் என்று பயமுறுத்துகிறார்கள். அதற்கெல்லாம் அசந்தவரா அந்த தவமுனி? பரவாயில்லை என்று வீட்டிற்குள் நுழைந்துவிடுகிறார்.  காவி உடையை கழற்றி வைத்துவிட்டு வெள்ளைத் துண்டு கட்டிக்கொண்டு ஆரியாம்பாளுக்கு கைகால் பிடித்துவிட்டு சேவகம் செய்கிறார். பரமேஸ்வரனே சங்கரராக அவதரித்தார்.  ஆரியாம்பாள் என்ன புண்ணியம் செய்தாளோ! இறைவன் அவளுக்குத் தொண்டு செய்கிறான்....

அபிராமிஅந்தாதிபாடல்-14#

Image
 ##அபிராமிஅந்தாதிபாடல்-14# தலைமை பதவி கிடைக்கும் வந்திப்பவர்  உன்னை  வானவர் தானவர்  ஆனவர்கள், சிந்திப்பவர்  நல்திசைமுகர்  நாரணர்,  சிந்தையுள்ள பந்திப்பவர்  அழியா பரமானந்தர்,  பாரில் உன்னை சந்திப்பவர்க்கு எளிதாம்  எம்பிராட்டி  நின் தண்ணளியே. #அர்த்தம்# அம்பாளை யார் எல்லாம் வணங்கிறார்கள் என்பதை பட்டியலிடுகிறார் பட்டர். என் அன்னை அபிராமியே, தேவர்கள்,  அசுரர்கள்  மற்றும்  உன் அடியார்கள்  உன்னை வணங்குகின்றனர். நல்திசைமுகர் - 4 திசைகளிலும் முகம் உள்ளவர் - நான்முகர் - பிரம்மா. நாரணர் - நாராயணன் - விஷ்ணு பிரம்மா, விஷ்ணு இவர்கள் இருவரும் எப்போதும் அபிராமி அன்னையை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அன்னையை தன் மனத்தின் உள்ளேயே கட்டுப்படுத்தியவர், என்றும் அழியா ஆனந்தமே வடிவான பரமசிவன்-பரம்பொருள் பரம்பொருளுக்கு ஆதாரமாக இருந்து  லோகபரபிரம்ம் இவர்களை காட்டிலும் அன்னையே,  நீ பாரில் உன்னை கோவிலில் தரிசனம் செய்வோர்க்கு எளிதாய் அருள் புரிகிறாய்.  உனது உள்ளத்தை எப்படி புகழ்வது?. தலைமை பதவி கிடைக்கும் வந்திப்பவர்  உன...

பூத்தவளே பூத்தவண்ணம் காத்தவளே

Image
 நேற்றைய அபிராமி அந்தாதி பாடலில் பட்டர்   பூத்தவளே பூத்தவண்ணம் காத்தவளே எனதொடங்கி இருப்பார். இதை தான் முன்பு ஒரு பாடலில் கற்பது உன்நாமம்  கற்பது: கற்கிறேன், மனதில் நினைத்துக்கொண்டிருக்கிறேன், பயிற்சி செய்கிறேன். உன் நாமம்: உன் திருநாமம், உன் பெயர். உன்: உன்னுடைய. ஒவ்வொரு முறை கற்க்கும்போது புது அர்த்தம் வெளிபடுகிறது. அவ்வாறு நண்பர் ஒருவருக்கு வெளிப்பட்டத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஓவ்வொரு வீட்டிலும் அன்றாடம் நடக்கும் போராட்டம் . எந்த வீட்டுக்கும், காலையில் போய் பார்த்தால் தெரியும்... ஒரு பெரிய யுத்தமே நடந்து கொண்டிருக்கும். ... குழந்தைகளை எழுப்புவதும், அவர்களை குளித்து பள்ளிக்குச் செல்ல தயார் பண்ணுவதும், சிற்றுண்டி தயார்  பண்ணுவதும்,  மதிய உணவு தயார் செய்ய  வேண்டும்,  இதற்கிடையில் தொலை காட்சியில்  ஏதாவது ஓடிக் கொண்டிருக்கும், தொலை பேசி வரும்... இப்படி பெரிய களேபரமாய் இருக்கும். ஒரு வீட்டில், இரண்டு அல்லது மூணு பேரை தயார் செய்து அனுப்புவது என்றாலே இவ்வளவு சத்தம், களேபரம்.... இந்த உலகையே படைப்பது என்றால் எவ்வளவு சிக்கலான காரியம் ? இந்த உல...

மஹாபெரியவா

Image
 மஹாபெரியவா பங்காரு காமாக்ஷி நாலு கையோட இருக்கல்லை. ஒரு கையைத் தொங்கப் போட்டுண்டு,  ஒரு கைல கிளியை வெச்சுண்டு, நின்னுண்டு இருப்பா...மீனாக்ஷி மாதிரியே..."* 1961 ல் சங்கர ஜெயந்திக்கு மதுரைக்கு விஜயம் பண்ணிய பெரியவர்,  மீனாக்ஷி அம்மனுக்கு முத்துநகை ஒன்றை சாத்தினார். அம்பாளுக்கே முத்துநகை என்ற நாமமும் உண்டு.  அங்கயற் கண்ணியின் சந்நிதியில் பெரியவர் கண்களில் நீர் சொரிய நின்றது பேரானந்தமான காக்ஷி! அன்று அம்பாளின் சந்நிதியில்  அவள் முன்னால் நின்றதும் என்ன அனுபவமோ!  யாருக்குத் தெரிந்துகொள்ள முடியும்? தெரிந்தாலும் எதை புரிந்து கொள்ளமுடியும்?  முப்பத்தி மூணு வர்ஷங்களுக்கு முன்னால் அவர் ப்ரவேசித்த சந்நிதி! "நம்ம மடத்துக்கு அதிதேவதை அம்பாள் காமாக்ஷி.  அவதான் சக்ரவர்த்தினி  லலிதாம்பா......மீனாக்ஷி அவளுக்கு மந்த்ரி.... மந்த்ரிணின்னு சொல்றோமே,  அந்த ஷ்யாமளாம்பாள்தான் மீனாக்ஷி!  அவளோட சேனாதிபதி திருவானைக்கா அகிலாண்டேஸ்வரிதான்!" இதில் விந்தையான விஷயம் பெரியவர் முதன்முதலாக அகிலாண்டேஸ்வரியையும், மீனாக்ஷி அம்மனையும் தர்சித்த பின்,  [1922 லும் 1928 ...

ஆசார்யாள் காட்டும் அம்பாள் : நிறைவு பகுதி

Image
 ஆசார்யாள் காட்டும் அம்பாள் :  தெய்வத்தின் குரல் (முதல் பகுதி) பகுதி 5 ஈசுவரன் அப்படி இவள் பாதத்தில் தலையை வைத்து நமஸ்கரிக்கும் போது அவனுடைய ஜடையிலிருந்து கங்கா ஜலம் பாதத்தில் விழுமல்லவா?  இதைத்தான் ‘பாத்யம்’ தருவதாகச் சொல்கிறார். ஈசுவரனுக்கு அந்த பிரபுத்வ சக்தியும் மூலமான பிரம்ம சக்தியிடமிருந்துதானே உண்டாயிற்று?  அதனால் அவருங்கூட அகம்பாவமில்லாமல் இங்கே வந்து நமஸ்கரிக்கிறார். ‘உத்தம ஸ்திரீகள் பாதங்களில் லாக்ஷாரஸம்’ என்கிற செவ்வரக்குக் குழம்பைப் பூசியிருப்பார்கள். அம்பாள் பாதத்தை அலங்கரிக்கவோ வேறு சிவப்பு ஜோதி ஒன்று இருக்கிறது என்கிறார்.  ‘ஹரி’ எனப்படும் சாக்ஷாத் நாராயணனின் சிரஸில் குடியிருக்கிற சூடாமணியின் பிரகாசமே, அம்பாளின் பாதத்துக்கு லாக்ஷாரஸமாக இருக்கிறது’ என்கிறார் ஆசார்யாள்.  ஜகத் பரிபாலன கர்த்தாவான மகாவிஷ்ணு அவரது பரிபாலன சக்தியும் பராசக்தியிடமிருந்தே வந்தது என்பதால் அடக்கத்தோடு அவளுடைய சரண கமலங்களில் நமஸ்கரிக்கிறார்.  அப்போது அவருடைய சிரோ பூஷணம் அம்பாளுக்குப் பாத பூஷணமாகிறது. மஹாவிஷ்ணுவின் கிரீடத்திலே டால் அடிக்கிற சிவப்பு மணி அம்பாளின் பாதத்த...

அபிராமிஅந்தாதிபாடல் -12#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல் -12# மனம் த்யானத்தில் நிலை பெறும் கண்ணியது உன் புகழ்,  கற்பது உன் நாமம்,  கசிந்து பத்தி பண்ணியது  உன் இரு பாதாம்புயத்தில்,  பகலிரவா நண்ணியது உன்னை நயந்தோர், அவையத்து நான்  முன்செய்த புண்ணியம் ஏது  என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே அன்னையே, அபிராமியே,  புவி - உலகம் ஏழினையும் படைத்தவளே,  #அவளேலோகமாதாஎன்பதைகூறுகிறார்#. நான் எப்போதும் நினைத்திருப்பது உன் புகழே.  #நான்உன்னைமறவாமல்உன்னையைஎன்சிந்தையில்வைத்துள்ளேன்#. நான் கற்பது உன் நாமத்தினையே. #கற்பதுஎன்பதுபாராயணம்செய்வதுஅல்ல# ,அதை திரும்ப திரும்ப சொல்லி ஓவ்வொரு முறையும்பதிய அர்த்தத்தை உணருதல்# பக்தி செய்வது உன் இரு திருப்பாதங்களையே.  உனது பாதத்தில் சரணாகதி அடைவது இரவும், பகலும் சேர்ந்திருப்பது உன் அடியார்களுடனேயே.  சத்சங்கமாக இருந்து நாமபாராயணம் செய்வது. இவ்வாறு நான் இருப்பதற்கு என்ன புண்ணியம் செய்தேனோ? -  இவ்வாறு நான் செய்வதற்கு நான் முன்ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்து இருந்தேனோ. என தனக்கு தானே கேள்வியை எழுப்பிய பட்டர் மற்றும் மனம் உருகி பாடுயதே அபிராமி அ...