அம்பாள் : எப்படிபட்டவள் -3.
அம்பாள் : எப்படிபட்டவள் -3. அழகு – அன்புகளின் முழுமை : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி). அன்பே அழகாகிவிட்டால்? பராசக்தியின் அன்பு அல்லது அருளைவிட சாச்வதப் பேரானந்தமான மோக்ஷத்துக்கு என்ன உபாயமிருக்கிறது? இந்த அன்பையே நாம் அழகாக அநுபவிப்பதால்தான் அது மோக்ஷோபாயமாகிறது. அன்பே சிவமாவ(து) ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே (-திருமந்திரம்) என்றபடி, இந்த அன்பில் நன்றாக உருகிக் கரைந்தபின் அதுவாகவே, அவளாகவே, அத்வைதமாகி விடலாம். ”பவாநித்வம்” [ச்லோ. 22], ”ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா” [ச்லோ. 99] ஆகிய ச்லோகங்களில் இந்த அகண்ட பரிபூர்ண நிலையைத்தான் சொல்லியிருக்கிறது. ஆகையால் அழகு வழியாக மோக்ஷமே பெறலாம் என்பது அதிசயோக்தியே இல்லை. ஸாக்ஷாத் அம்பாள் எப்படியிருப்பாள் என்பதை நாம் எப்படி ரூபப்படுத்திப் பார்ப்பது? பச்சையாயிருப்பாளா, அவள் மீனாஷி யா சிகப்பாயிருப்பாளா, அவள் லலிதாவா கறுப்பாயிருப்பாளா? இல்லை காளியா இந்த எல்லாக் கலரிலும்தான் அவளுக்கு ரூப பேதங்கள் சொல்லியிருக்கிறது. பிரம்மாவுக்கு நாலு தலை, சிவனுக்கு ஐந்து தலை, ஸுப்ரஹ்மண்யருக்கு ஆறு...