Posts

ஆதிபீடேஸ்வரியிலிருந்துகாமாக்ஷி

Image
 #சக்திக்ஷேத்திரசிந்தனைகள் #ஆதிபீடேஸ்வரியிலிருந்துகாமாக்ஷி #காளிகாம்பாள்# காஞ்சிபுரம் காஞ்சியின் மகாராணியாவதற்கு  முன்பு,  அவள் காளியாகவே இருந்தாள். இன்று காஞ்சிபுரத்தின் புனிதமான கற்பனைகளில் பெரும்பாலானவை, ஸ்ரீ சக்கரத்தின் மையத்தில் அமைதியான நிசப்தத்துடன் அமர்ந்திருக்கும் காமாக்ஷியைச் சுற்றியே சுழல்கின்றன;  அவள் கரும்பு வில்லையும்  மலர் அம்புகளையும் ஏந்தியபடி,  லலிதா மகாதிரிபுரசுந்தரியின்  மென்மையான பேரொளியை வெளிப்படுத்துகிறாள்.  ஆயினும்,  காஞ்சியில் பாதுகாக்கப்பட்டு வரும் பழமையான மரபுகள்,  மற்றொரு இருப்பை —  தொன்மையான,  உக்கிரமான,  மற்றும் மிகவும் செறிவான — தொடர்ந்து நினைவுகூர்கின்றன. அந்த நினைவு ஆதி பீடேஸ்வரி மூலம் நிலைத்திருக்கிறது;  பல மரபுகளில் காளிகாம்பாள் என்றும்,  காஞ்சியின் மூல தேவி என்றும், நகரத்துடன் தொடர்புடைய சக்தி வழிபாட்டின் மிகப் பழமையான அடுக்குகளில் ஒருவராகவும் அவள் நினைவுகூரப்படுகிறாள். ஆதி பீடேஸ்வரியை ஆன்மீக ரீதியாகக் கவர்வது என்னவென்றால், அவளுடைய உருவ வழிபாடு காளிக்கும் காமாக்ஷிக்கும் இடையில்...

லோகஜனனி

Image
 #அம்பாளைஏன்லோகஜனனிஎன்கிறோம் .  சங்கரபகவத்பாதாள் அம்பாளின் கண்ணை அழகை விவரிகிறப்போது கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார். விஶாலா கல்யாணீ ஸ்பு²டருசிரயோத்⁴யா குவலயை: க்ருபாதா⁴ராதா⁴ரா கிமபி மது⁴ராபோ⁴க³வதிகா । அவந்தீ த்³ருஷ்டிஸ்தே ப³ஹுனக³ரவிஸ்தாரவிஜயா த்⁴ருவம்  தத்தன்னாமவ்யவஹரணயோக்³யா விஜயதே ॥ 49 ॥ பொருள்: தாயே!  உன்னுடைய திருஷ்டி (பார்வை)  எட்டு விதமான அழகுகளையும், குணங்களையும் கொண்டு, அந்தந்தப் பெயர்களைக் கொண்ட நகரங்களின் தன்மையாகவும் விளங்கி,  எல்லாவற்றையும் வென்று திகழ்கிறது:  #விசாலா:  உன்னுடைய கண்கள் அகன்று (விசாலமாக) இருப்பதால் 'விசாலா' என்று அழைக்கப்படுகிறது. #கல்யாணீ:  மங்களகரமான பார்வை. #அயோத்யா:  நீல மலர்களைக் (குவளை) காட்டிலும் வெல்ல முடியாத பேரழகுடையது. #தாரா:  அருளைத் தாரை தாரையாகப் பொழிவதற்கு ஆதாரமாக இருப்பது. #மதுரா:  வர்ணிக்க முடியாத அளவிற்கு இனிமையானது. #போகவதிகா:  இன்பத்தை அனுபவிக்கக் கூடியது. #அவந்தீ:  உலகங்களைக் காத்து ரட்சிப்பது. #பஹுநகரவிஸ்தாரவிஜயா:  பல நகரங்களில் வெற்றியை நிலைநாட்டுவது.  காரணம் ...

ஶ்ரீசக்ரத்தின் மேன்மை

Image
 #ஶ்ரீஶ்ரீசக்ரம் #ஸ்ரீசக்கரம் அல்லது #ஸ்ரீசக்கரராஜம் என்பது அண்ட சராசரங்களின் சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ள ஒரு புனிதமான வடிவம். பராசக்தியின் முழுமையான அருள், சகல செளபாக்கியங்கள் மற்றும் ஞானத்தை அருளும் மாபெரும் எந்திரமாக இது போற்றப்படுகிறது.  #ஸ்ரீசக்கரத்தின்மேன்மை  மற்றும் சிறப்புகள்: #சர்வதேவதாசொரூபம்:  ஸ்ரீ சக்ரத்தில் பராசக்தியின் ஆற்றல் மட்டுமின்றி, 64 கோடி தேவதைகளும் உறைந்திருப்பதாக  தேவி புஜங்கம் என்னும்  ஆன்மிக நூல் கூறுகிறது. மகா மேருவின் வடிவம்:  இந்த சக்கரம் இருபரிமாணத்தில் (நீளம், அகலம்)  'ஸ்ரீ சக்கரம்' என்றும்,  முப்பரிமாணத்தி  (உயந்திர வடிவம்)  'ஸ்ரீ மஹாமேரு' என்றும் அழைக்கப்படுகிறது. #ஆதிசங்கரரின்ஸ்தாபனம்: அம்பிகையின் உக்கிரமான ஆற்றலை சாந்தப்படுத்தி,  பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் ஆதி சங்கரரால் பல இடங்களில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  நேற்றைய பதிவில் விலவாரியாக கண்டோம் உதாரணமாக,  திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனின் காதுகளில் தாடங்க வடிவில்  ஸ்ரீ சக்கரம் அமைந்துள்...

ஆதிசங்கரரால்ஸ்தாபிக்கப்பட்ட ஶ்ரீசக்ரம்

Image
 #ஆதிசங்கரரால்ஸ்தாபிக்கப்பட்டு , மிகச் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும்  #ஸ்ரீசக்ரம் (அ) #மகாமேரு  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள புகழ்பெற்ற ஆலயங்கள் இந்தியாவில் பல உள்ளன.  அவர் ஶ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்தார். ஆதிசங்கரர் பல கோவில்களில் ஸ்ரீசக்கரத்தை (மகாமேரு) பிரதிஷ்டை செய்ததற்கு முக்கிய காரணங்கள்: அம்மனின் உக்கிரத்தைத் தணிக்க: பல திருத்தலங்களில் உக்கிரமாக இருந்த தெய்வங்களை (உதாரணமாக: திருவொற்றியூர் வட்டப்பாறை அம்மன், திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி) சாந்தப்படுத்தி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் மாற்ற. அபரிமிதமான சக்தியை நிலைநிறுத்த:  ஸ்ரீசக்கரம் என்பது பிரபஞ்சத்தின் மற்றும் இறைவியின் அதிர்வலைகளின் வடிவமாகும். இதைச் சரியாக பிரதிஷ்டை செய்வதன் மூலம் அந்த இடத்தில் தெய்வீக ஆற்றல் பெருகி, மக்களுக்கு நலம் சேர்க்கும். வழிபாட்டு முறையை எளிமையாக்க: ஸ்ரீசக்கர வழிபாடு என்பது சப்தபதி (ஏழு படிகள்) பாராயணத்திற்கு இணையானது,  மேலும் இது பக்தர்களுக்கு சகல கலைகளையும், ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கக்கூடியது அவற்றுள் முதன்மையான மற்றும் மிகவும் பிரசித்தி பெற்ற சில முக்கிய கோயில்கள்: ...

#ஸ்ரீசக்கரம் / #ஸ்ரீயந்திரம்)

Image
 #ஸ்ரீசக்ரம்  அல்லது #ஸ்ரீசக்கரம் / #ஸ்ரீயந்திரம்)  (Sri Chakram / Yantram ) என்பது  இந்து சமயத்தின் ஸ்ரீ வித்யா சக்தி வழிபாடு பள்ளியில் பயன்படுத்தப்படும்  மாய வரைபடத்தின் ( யந்திரம் ) ஒரு வடிவமாகும்.  இதில் #பிந்து எனப்படும்  மையப் புள்ளியைச் சுற்றியுள்ள  ஒன்பது முக்கோணங்கள் ஒன்றையொன்று வெட்டிக்  கொண்டு இருக்கின்றன.  இந்த முக்கோணங்கள் அகிலத்தையும் மனித உடலையும் குறிக்கின்றன.  இதில் உள்ள ஒன்பது முக்கோணங்கள் காரணமாக,  ஸ்ரீ யந்திரம் நவயோனி சக்ரம் என்றும் அழைக்கப்படுகிறது.   #இருபரிமாணஸ்ரீயந்திரம், மூன்று பரிமாணங்களில் குறிப்பிடப்படும்போது,  இது ஒரு #மகாமேரு என்று அழைக்கப்படுகிறது.  மேரு மலை இந்த வடிவத்திலிருந்து இதன் பெயரைப் பெற்றது. ஸ்ரீ சக்கரம் ஸ்ரீசக்கரம் ஸ்ரீவித்யையின் மையச் சின்னம்.  ஸ்ரீவித்யை வழிபாட்டில் இந்த ஸ்ரீசக்கர யந்திரம் தெய்வத்தின்  முழு சக்தியை பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.  ஸ்ரீவித்யை உபாசனையில்  மந்திரம்,  யந்திரம்,  தியானம்  ஆகியவை ஒன்றாகப் பயன்படுத்தப்ப...
Image
 #ஒம்பதாவதுஆவரணம் ஶ்ரீதேவியை  துதிப்பதற்கான கூடுதலான பெயர்கள் மஹாமஹேஸ்வரி - பேரண்டத்தைகட்டுபடுத்துபவர்/சிவனின் துணைவி மஹாமஹாராக்ஞி - பேரண்டத்தின் பேரரசி மஹாமஹாசக்தே - பேரணாடத்தின் பெரும் சக்தியாக இருப்பவள். மஹாமஹாகுப்தே - பேரண்டத்தின் பெரிய ரகசியமாக இருப்பவள். மஹாமஹாஜ்ஞப்தே - பேரண்டத்தின் நினைவகமாக இருப்பவள். மஹாமஹானந்தே -பேரண்டத்தின் பேரினாபமாக இருப்பவள். மஹாமஹாஸ்கந்தே - பேரண்டத்தின் பெரும் ஆதரவாக இருப்பவள். மஹாமஹாசயே - பேரண்டத்தின் பெரும் சிந்தனை செயல்முறையுடையவள். மஹாமஹா ஶ்ரீசக்ரநகரசாம்ராஜ்ஜினி - ஶ்ரீசக்கரத்தின் பெரிய ஆழ்நிலை உணர்வுள்ள பேரரசி. நமஸ்தே நமஸ்தே நமஸ்தே நம: எனது வணக்கங்களை மீண்டும் மீண்டும் சமர்பிக்கிறேன். இதற்குரிய சகரேஸ்வரி மஹாதிரிபூந் தரி - மூவுலகங்களிலும் அழகானவள. இச்சக்கரத்திற்குரிய முத்ராதேவி சர்யோனே ஆவாள். இச்சக்கரத்தின் தேவி ஶ்ரீமஹாமஹா ஶ்ரீசக்ரநகரசாம்ராஞ்சி ஆவாள். ஶ்ரீசக்கரத்தின் 9நிலைகளில்  ஓவ்வொன்றும்  பரிணாம வளர்ச்சியின் ஒருபடியைக் குறிக்கிறது. ஓவ்வொரு தடையையும் ,கடப்பது நம் வாழ்வில் பல தடைகள் மற்றும் வரம்புகளை விடுவித்து ஒரு மேம்பட்ட  வ...

ஒம்பதாவதுஆவரணம்

Image
 #ஒம்பதாவதுஆவரணம் ஒம்பதாவது ஆவரணங்களை கட்டுப்படுத்தும் ஓம்பது தேவதைகள். திரிபுரா - விழிப்பு, கனவு உறக்கம் ஆகிய மூன்று நிலைகளையும் கட்டுப்படுப்படுத்துகிறவள். திரிபரேசி - மூவுலகையும் கட்டுப்படுத்தும் தெய்வம் திரிபுரசுந்தரி - மூவுலகிலும் மிக அழகானவள் திரிபுரவாசினி - மூவுலகிலுமா வாழ்பவள் திரிபுராஶ்ரீ - மூவுலக செல்வங்களை உடையவள். திரிபுரமாலினி - மூவுலகங்களையும் மாலையாக அணிந்திருப்பவள். திரிபுராசித்தே - மூவுலங்களையும் அனுமாஷ்ய சக்திகளை சாதாதியமாக்கக்கூடியவள். திரிபுரம்பா - மூவுலங்களின் தாயானவள் மஹாதிரிபுரசுந்தரிஸ-மூவுலகிலும் மிகச் சிறந்த அழகியானவள்.