#ஒம்பதாவதுஆவரணம்
ஶ்ரீதேவியை துதிப்பதற்கான கூடுதலான பெயர்கள்
மஹாமஹேஸ்வரி - பேரண்டத்தைகட்டுபடுத்துபவர்/சிவனின் துணைவி
மஹாமஹாராக்ஞி - பேரண்டத்தின் பேரரசி
மஹாமஹாசக்தே - பேரணாடத்தின் பெரும் சக்தியாக இருப்பவள்.
மஹாமஹாகுப்தே - பேரண்டத்தின் பெரிய ரகசியமாக இருப்பவள்.
மஹாமஹாஜ்ஞப்தே - பேரண்டத்தின் நினைவகமாக இருப்பவள்.
மஹாமஹானந்தே -பேரண்டத்தின் பேரினாபமாக இருப்பவள்.
மஹாமஹாஸ்கந்தே - பேரண்டத்தின் பெரும் ஆதரவாக இருப்பவள்.
மஹாமஹாசயே - பேரண்டத்தின் பெரும் சிந்தனை செயல்முறையுடையவள்.
மஹாமஹா ஶ்ரீசக்ரநகரசாம்ராஜ்ஜினி - ஶ்ரீசக்கரத்தின் பெரிய ஆழ்நிலை உணர்வுள்ள பேரரசி.
நமஸ்தே நமஸ்தே நமஸ்தே நம:
எனது வணக்கங்களை மீண்டும் மீண்டும் சமர்பிக்கிறேன்.
இதற்குரிய சகரேஸ்வரி மஹாதிரிபூந் தரி - மூவுலகங்களிலும் அழகானவள.
இச்சக்கரத்திற்குரிய முத்ராதேவி சர்யோனே ஆவாள்.
இச்சக்கரத்தின் தேவி ஶ்ரீமஹாமஹா ஶ்ரீசக்ரநகரசாம்ராஞ்சி ஆவாள்.
ஶ்ரீசக்கரத்தின் 9நிலைகளில்
ஓவ்வொன்றும் பரிணாம வளர்ச்சியின் ஒருபடியைக் குறிக்கிறது.
ஓவ்வொரு தடையையும் ,கடப்பது நம் வாழ்வில் பல தடைகள் மற்றும் வரம்புகளை விடுவித்து ஒரு மேம்பட்ட விழிப்புணர்வுக்கும் வழிவகுக்கிறது.
இந்த சக்தகளை அடையாமல் அடுத்த கட்டதத்திற்கு செல்ல முடியாது.
9நிலைகளில் ஓவ்வொன்றயும் கடக்கும் போது,இறுதி தெய்வத்துடன் ஒன்றாக இருப்பதை அல்லது மிக உயர்ந்த இறை சக்தியுடன் இணைந்து கலந்துவிடுவதைக் குறிக்கும் புள்ளியான #பிந்து# என்ற இலக்கை ஆடைக்கிறோம்.
இது விழிப்புணர்வு அல்லது முழுமையான அமைதியின் இறுதி நிலையாகும்.
மூலம்
ஶ்ரீ பூர்ணமஹாமேரு டிரஸ்ட்
சென்னை 600 117
தொகுத்து வழங்கியவர்
திரு R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

Comments
Post a Comment