Posts

Showing posts from August, 2025

காமாக்ஷியை காமதாயினி

Image
 காமாக்ஷியை காமதாயினி என அழைக்க காரணம். அம்பாள் தாட்சாயாணியாக தக்ஷசனுக்கு மகளாக பிறந்த போது தனது கணவர் சிவபெருமானுக்கு தான் செய்த யாகத்தில் உரிய மரியாதை கொடுக்காததால் வெகுண்ட அம்பாள் தக்ஷ்சன் செய்த யாகத்தில் தனது உயிரை மாய்த்துக்கொண்டால். இதில் மனிதனாக பிறந்த யாவரும் செய்த கர்மாவிற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதே இது உணர்த்துக்கிறது. இதை அறிந்த சிவப்பெருமான் அம்பாளின் உடலை சுமந்து பைத்தியம் பிடித்தார் உலகை சுற்றி வரும்போது. உலகம் இயக்கமே ஸ்தம்பித்து. இதை பார்த்த நாராயணன் தனது சுதர்சன சக்கரத்தால்,அம்பாளை உடல்பாகங்களை 51பாகங்களாக சிதைத்தார். அம்பாள் உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் 51சக்தி பீடங்களாக மாறியது. இதன் பின் சிவபெருமான் தவகோலத்தில், அடுத்த அவதாரத்தில் பார்வதியாக அவரித்த அம்பாள் ,அப்பனை மணமுடிக்க நினைத்தார். ஆனால் சிவப்பெருமான் தவத்தில் இருந்ததால் அவரது தவத்தை கலைக்க தேவர்கள் மன்மதனின் உதவியை நாடினார். மன்மதன் தனது மலர் அம்புகள் மூலம் சிவனின் தவத்தை கலைத்தான். அதில் வெகுண்ட சிவப்பெருமான் தனது நெற்றி கண்மூலமாக மன்மதனை சாம்பலாக்கினான். பிறகு நடைப்பெற்ற சிவபெருமான் மற்றும் ...

#அபிராமிஅந்தாதிபாடல்-42#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-42# இடங்கொண்டு விம்மி  இணை கொண்டு இறுகி,  இளகி,  முத்து வடங்கொண்ட  கொங்கை  மலை கொண்டு  இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட கொள்கை  நலம் கொண்ட நாயகி  நல் அரவின் படம் கொண்ட  அல்குல் பனி மொழி  வேதப் பரிபுரையே அன்பரின் விளக்கவுரை  இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி,  இளகி முத்துவடம் கொண்ட கொங்கை மலை கொண்டு) அன்னையின் திருநகில்கள் அகன்று, பரப்புற்று,  பருத்து, ஒன்றினை ஒன்று இணைதல்  உற்றுத் தளர்வு இன்றி  இறுக்கம் பெற்று இளகிய  மென்மைத் தன்மை பெற்றவை.  அவ்வழகிய திருமார்பில்லே முத்துமாலை புரள்கிறது.  அம்மாலை புரள்வதும் ஓர்அழகே! பரஞானத்துக்கும் (உயரிய, உன்னதமான அறிவு.) அபரஞானத்துக்கும் (தாழ்ந்த, உலகாயுத அறிவு.). இவற்றிற்கு அடையளமானவை அம்பிகையின் திருமுலைகள்.  அவை ஓன்றுக்கொன்று இணையாக இறுகியும் இளகியும் முத்துவடம் சூடிய மலைகள் போல் தோன்றி வல்லமை பொருந்திய சிவபெருமானின் திருவுள்ளத்தை ஆட்டுவிக்கும் கொள்கை கொண்டன. வடமொழியில் காளிதாசருக்கும், தமிழில் திருமூலர்,கம்பர், அருணகிரிநாதர் முதல...

முழுமுதற் கடவுள்

Image
விநாயகரை ஏன் முதற் கடவுள் என அழைக்கிறோம்?. முதற் கடவுள்" அல்லது "முழு முதற் கடவுள்" என்பது விநாயகரையே குறிக்கிறது.  எந்தவொரு செயலைத் தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வழிபடுவது, வெற்றியையும் தடையற்ற பயணத்தையும் உறுதி செய்யும்.  தர்ம சாஸ்திரங்களின்படி,  இவருக்கு மேல் பெரிய தலைவர் எவருமில்லை என்பதால்,  விநாயகர் முழு முதற் கடவுளாக வணங்கப்படுகிறார்.  தடையற்ற வெற்றி:  எந்தவொரு  புது வேலை,  திருமணம்  அல்லது  முக்கிய நிகழ்வைத்  தொடங்கும் போதும்,  மக்கள் விநாயகரை முதலில் வழிபடுகிறார்கள்.  ஏனெனில் அவருடைய இருப்பு, திட்டங்கள்  வெற்றிகரமாக நிறைவேற உதவுகிறது.  ஆதி பரம்பொருள்:  விநாயகர் அனைத்து கடவுள்களுக்கும் ஆதி பரம்பொருளாக விளங்குகிறார் என்று சில நூல்கள் குறிப்பிடுகின்றன.  முழு முதற் கடவுள் என்ற சொல்  பயன்பாடு: "முழு முதற் கடவுள்" என்ற சொல், எந்தச் செயலைத் தொடங்குவதற்கு முன்பும் முதலில் வணங்கப்படும் கடவுளைக் குறிக்கிறது. அனைத்து உலகங்களுக்கும் தலைவனான சிவனைக்கூட இந்த வகையில் குறிப்பிடுவது கிடையாது.  விநாய...

காமாக்ஷிகாமதாயினி

Image
 காமாக்ஷிகாமதாயினி   என்பது  #விருப்பங்களைத்தருபவள்#  அல்லது  #வேண்டியதைஅளிப்பவள்# என்று பொருள்படும் ஒரு பெயர்.  இது காமாக்ஷி அம்மன் மற்றும் சப்தகன்னியர்களில் ஒருவரான கவுமாரியையும் குறிக்கும்.  மக்கள் தங்களின் விருப்பங்களையும் கோரிக்கைகளையும் நிறை வேற்றுமாறு இவர்களை வழிபடுகிறார்கள்.  காமதாயினி என்ற சொல்லின் பொருள்  • காமம்:  என்றால்  விருப்பம் அல்லது தேவை.  • தாயினி:  என்றால் கொடுப்பவள் அல்லது அளிப்பவள்.  • ஆகவே, காமதாயினி என்றால்,  "தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றித் தருபவள்" என்று பொருள்.  காமாக்ஷிஅம்மன்:  காமாக்ஷி அம்மனை வழிபடும்போது, காமதாயினி என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது.  அவளை வேண்டினால்,  மக்கள் விரும்பும் அனைத்தையும் நேரடியாகவும் சூட்சுமமாகவும் அளிப்பாள் என்று நம்பப்படுகிறது.  "காமதாயினி காமாக்ஷி" என்பது காமாக்ஷி அம்மனைப் போற்றும்  ஒரு பெயர் ஆகும்,  இதில் "காமாக்ஷி" என்பது கண்களின் வடிவில் ஆசைகளை நிறை வேற்றுபவள் அல்லது இன்பம் அளிப்பவள் என்று பொருள்படும், மேலும்...

ஏன் பகவானின் பாதாரவிந்ததை நாட வேண்டும்?.

Image
ஏன் பகவானின் பாதாரவிந்ததை நாட வேண்டும்?. மஹான்களின் விளக்கம் எல்லாம் மஹான்களும் சொல்வது ஒன்றே பகவானின் பாதாரவிந்ததில் சரணடைங்கள் என்பதை தான். காரணம் இந்த கலியுகத்தில் நாம் கறையேறுவதற்கு அது ஒன்றே மார்க்கம் அது பகவானின் திருநாமத்தை பாராயணம் பண்ணுவது. எப்போது நம்மாள் சொல்லமுடியுமா அப்போது சொல்ல ஆரம்பித்தாள் தான் நம்மாள் சொல்லமுடியும். இப்போது வேண்டாம் எப்போது வேண்டுமோ அப்போது சொல்வோம் என நினைத்தால் அப்போது நம்மாள் சொல்ல இயலாது. இதையே தான் ஆதிசங்கர பகவத்பாதாள், அபிராமி பட்டர் மற்றும் மஹாபெரியவா தனது தெய்வத்தின் குரலில் சொல்லியுள்ளார். அபிராமி பட்டர் தனது ஒவ்வொரு அபிராமி அந்தாதியிலும் சரணாகதி தத்துவத்தையே வலியுருத்திருகிறார். மஹாபெரியவா தனது தெய்வத்தின் குரலில் நான் சொல்வதை பத்து பேராவது சொல்ல மாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடன் தான் திரும்ப திரும்ப பகவான் பாதார விந்ததை அடைய வலியுருத்துகிறார். காரணம் அவர்களுக்கு கரையேறுவதற்கு வழி தெரியாமல் இதை சொல்லவில்லை. அது நமக்கு புரியவேண்டும் என்பதற்காக கூறுகிறார்கள் அபிராமி அந்தாதியில் பட்டர் #ததியுறுமத்தில்சுழலும்என்ஆவி" என்பது அபிராமி அந்தாதி பா...

#அபிராமிஅந்தாதிபாடல்-40#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-40# வாணுதற் கண்ணியை  விண்ணவர் யாவரும்  வந்து இறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய  எம்பெருமாட்டியை  பேதை நெஞ்சில் காணுதற்கு  அண்ணியள் அல்லாத  கன்னியை காணும்  அன்பு பூணுதற்கு  எண்ணிய  எண்ணமன்றோ  முன் செய் புண்ணியமே வாள் நுதல் கண்ணி ஒளி பொருந்திய நெற்றி கொண்டவள் அன்னை : அந்நெற்றியில் கண்ணையும் உடையவள் அவள். அவள் முக்கண்ணி-அதுவே ஞானகண் சிவபிரான் உள்ளது போன்றே உமை அம்மைக்கும் நெற்றியில் கண் உண்டு.  இவ்விருவர்க்கு உள்ளது போன்றே இவர்தம் முதல் மதலையான விநாயகருக்கு மூன்று கண்கள் உண்டு.  இரண்டாம் பிள்ளையான முருகனுக்கு முகத்துக்கு  மூன்று கண்கள் வீதம் ஆறுமுகங்களுக்குப்  பதினெட்டு கண்கள் உண்டு.  ' வாள் நுதல் கண்ணி' யை என்று குறிப்பிட்டது ஒரு பெருமை. 'வாணுதற் கண்ணி' என்பதற்கு நெற்றிக்கண்ணை உடையவள் என்றும் பொருள் கொள்ளலாம்.  லலிதாசஹஸ்ர நாமம் மற்றும் சௌந்தர்யலஹரியில்  ஒளி வீசும் நெற்றி, நெற்றிக் கண் இரண்டு விதத்திலும் வர்ணிக்கப் பட்டிருக்கிறாள் சக்தி.  சிவனுடைய நெற்றிக்கண்ணே சக்தி தான் என்றும் ச...

அம்பாளின் கருணை

Image
அம்பாளின் கருணை போன ஞாயிறு மிகவும் அருமையான தினம் அன்று எனது நண்பர் மற்றும் வாடிக்கையாளரை சந்திக்கும் வாய்ப்பு. அவரிடம் சில மணிக்கள் பேசுவதற்கான  வாய்ப்பு கிடைத்தது. அவரின் சந்திப்பு பிறகு அவர் என்னை அவரது பூஜை அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பு இணங்க உள்ளே தரிசிக்க சென்றால்.  அம்பாள் ஶ்ரீசக்கரத்தில் மற்று தேவிகளுடன் வீற்றிருக்கும் அழகான படம். பார்பதற்கு அவ்வளவு அழகே. அம்பாளை தரிசித்த பிறகு, ஸ்வாமி இதே மாதிரி 3படங்கள் வாங்கினேன். ஒன்று எனது வீட்டிற்கு,மற்றொன்று எனது ஆபீஸிற்கு ,மூன்றாவது தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வாங்கி வைத்துள்ளேன். அதை பெற்றுக் கொள்ளுங்கள் என்னிடம் திருவுருவ படத்தை கொடுத்தார். படத்தை பெறும் போது மெய்சிலிர்த்து போனேன். தினந்தோறும் எந்த அம்பாளை தேவிகட்கமாலா ஸ்தோத்திரத்தில் பாராயணம் செய்கிறோனோ. அதே அம்பாள்களை ஶ்ரீசக்ரத்தில் பார்க்கும் போது மெய்சிலிர்த்து போனேன். காரணம் நாம் அம்பாள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தாள். அவள் நம் பக்திக்கு செவிசாய்ப்பாள் என்பது திண்ணம். காரணம் முதலில் பஞ்சப்ரேத ஆசான என்ற நாமத்திற்கு இணங்க சிவகுமார் என்ற அ...

#அபிராமிஅந்தாதிபாடல்-39#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-39# ஆளுகைக்கு  உந்தன் அடித்தாமரைகள்  உண்டு  அந்தகன்பால் மீளுகைக்கு  உந்தன் விழியின்  கடை உண்டு  மேல் இவற்றின் மூளுகைக்கு  என் குறை நின் குறையே  அன்று  முப்புரங்கள் மாளுகைக்கு  அம்பு தொடுத்த  வில்லான் பங்கில்  வாணுதலே அன்பரின் விளக்கவுரை  ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு -  என்னை ஆள்வதற்கு உந்தன் திருவடித்தாமரைகள் உண்டு வாழ்விலே,  மேலாக வாழ்வதற்கு,  ஆளுமையோடு வாழ்வதற்கு,  அந்த அம்பிகையின் அடித்தாமரைகள் இருக்கின்றன. வாழ்விலே நம்மைக் கைதூக்கிவிடும் அந்த தேவியின் பாதங்கள். ஆளுக்கைக்கு அடித்தாமரையும் யமன் கையினின்று மீளுகைக்கு கடைக்கண்ணும் என்பதை ஆதிசங்கரர்  ' ஜன்ம ஜலதௌ நிமக்னானாம் முரரிபு வராஹஸ்ய த்ஷ்ட்ராபவதி ' - என்கிறார்.  ( ஸௌ.ல. 3 ) உயிர்கள் சம்சாரக்கடலில் மூழ்கித் தவிக்கும் போது  அம்பாளின் இருபாதங்களும் வராஹமூர்த்தியின் இருகோரைப்பற்கள் போல இருக்கின்றன என்கிறார்.  தண்ணீரில் மூழ்கிக் கிடந்த ' பாசிதூர்ந்த பார்மகளை  ' வராஹ அவதாரம் எடுத்துத் தனது கோரை...

தஞ்சாவூரில் வீற்றிருக்கும் அன்னை காமாக்ஷி

Image
 தஞ்சாவூரில் வீற்றிருக்கும் அன்னை காமாக்ஷி ,அவள் அருகில் வசித்தது. அதாவது தஞ்சாவூர் மேலவீதியில் விஸ்வேசர் பண்டிதர்  தெருவில் வசித்து வந்த காலம், அப்போது விஸ்வரூப தரிசனத்து காலை 5மணிக்கு ரசித்தவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். அதில் நானும் ஓருவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன். அவ்வாறு பால்ய வயத்தில் விஸ்வரூப தரிசனத்தை தரிசித்தவனின் நானும் ஒருவன். அந்த விபரம் தெரியாத வயத்தில் எனது தந்தை கையை பிடித்து அம்பாளை தரிசத்தவன், அந்த நினைவுகள் பசுமரத்து ஆணியை எனது நெஞ்சில் பதிந்துள்ளது. அம்பாளைப் பற்றி பதியும்போது அந்த நினைவலைகள் என் எண்ணத்தில் வந்துச் செல்கிறது. அது ஒரு கனா காலம். இன்று, தஞ்சாவூரில் காமாக்ஷி  கோயிலில் இரண்டு சன்னிதிகள் (சன்னிதிகள்) உள்ளன: முதன்மை சன்னிதி -  பங்காரு காமாட்சி இரண்டாம் சன்னிதி -  காமகோடி காமாட்சி இது தனித்துவமானது,  ஏனெனில் இந்தியாவின் பிற பகுதிகளில்,  ஒரு தனி காமகோடி காமாட்சி சன்னிதி காணப்படவில்லை. காஞ்சிபுரத்தில் உள்ள காயத்ரி மண்டபத்தில் கூட,  காமகோட்டி காமக்ஷி  வெறுமனே காமக்ஷி,  மூல காமாக்ஷி,  திரிபுரசுந்தர...

#அபிராமிஅந்தாதிபாடல் - 38

Image
 #அபிராமிஅந்தாதிபாடல் - 38 வேண்டியவற்றை வேண்டியவாறு அருளும் பவளக் கொடியில்  பழுத்த செவ்வாயும்,  பனிமுறுவல் தவளத் திருநகையும்,  துணையா, எங்கள் சங்கரனை துவளப் பொருது,  துடியிடை சாய்க்கும்  துணை முலையாள் அவளைப் பணிமின் கண்டீர்  அமராவதி ஆளுகைக்கே அம்பாள் எப்படிப்பட்டவள் என்று இங்கு கூறுகிறார் பட்டர். 1. பவளம் போன்ற சிவந்த திருவாய் உடையவள். அவளுடைய செவ் + வாய் . கோவை பழமே தோற்க்கின்ற அளவுக்கு சிவப்பு நிறமுடையது. 2. பனிமுறுவல் -  குளிரூட்டும் இதமான சிரிப்பு உடையவள் அவளுடைய சிரிப்போ மிகவும் ரம்மியமானது. இந்தப் பாடலில் அபிராமபட்டர் இரண்டு விவரங்கள் தருகிறார். ஒன்று சிவபெருமான் அம்பிகையிடம் எவ்வாறு மயங்கினார் என்பது. இரண்டாவது இந்திர உலகம்  ஆளும் ஆசை இருந்தால், அவளைப் பணிவதே அதற்கு வழி என்பது. சிவனுக்கே போகம் அருளும் எம்பெருமாட்டி,  அவளைப் பணிவோருக்கு  ( இந்திரன் அருளும்)  அமராவதியை ஆளும் உயர்ந்த தேவலோகப் பதவியைத் தருவாள். ( இந்திரன் அனுபவிக்கும் போகம் தான்-  போகத்தின் எல்லை). பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் -  பவளக் கொடியில்...

ஆடிதிருவாதிரையில் முப்பெரும் விழா.

Image
கோவிலாக இருந்தாலும் அதற்குரிய கால பிரமாணத்தில் தான் அனைத்தும் நடக்கும். அவ்வாறான நிகழ்வு இந்த வருட ஆடிதிருவாதிரையில் முப்பெரும் விழா. காஞ்சிமடமும் கங்கைக் கொண்ட சோழபுரமும் மற்றும் பிரதமர் மோடி  இது நாள்வரை மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவும் பல ஆண்டுகளாக சிறப்பாக நடந்து வருகிறது. இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து,  கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் பணிகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் எடுத்துக் கூறினர். இதில் பெரும் உற்சாகம் அடைந்த மத்திய நிதியமைச்சர்,  இந்த ஆண்டு ஆடி திருவாதிரை விழாவை சிறப்பாக நடத்தவும், இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் இசை நிகழ்ச்சியை நடத்தவும் பெரும் ஊக்கமளித்தார். மத்திய தொல்லியல், கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் அவர்களும் இதில் பெரும் ஆர்வம் காட்டினார். சைவ ஆதினங்களை அழைத்து மிகப்பெரிய அளவில், ஆடி திருவாதிரை விழாவை நடத்த காரணமாக இருந்தார்.  இந்த தகவல்களை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஆடி திருவாதிரை விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்.  நான...
Image
 *மஹா பெரியவா அருள்வாக்கு* *எவருக்கும், எவற்றுக்கும் கெடுதலே எண்ணாதபடி மனதை அன்பு மயமாகச் செய்து கொள்வதே அகிம்சை. * புத்திப்பூர்வமாக ஒரு தவறைச் செய்தால் தான் அது பாவமாகிறது,  புத்தி தங்கள் வசத்திலேயே இல்லாமல் சித்தப் பிரம்மம் பிடித்தவர்கள் செய்கிற எந்தச் செயலும் பாவம் இல்லை. * நம்முடைய துன்பத்தையே பெரிதாக நினைத்துக் கொண்டு பிறருக்கு நன்மை செய்யாமல் இருந்து விடக்கூடாது.  நம்மால் உலகம் சிறிதளவாவது நலமாக இருப்பதற்காக பாடுபட வேண்டும். * பலனை எதிர்பார்க்காமல் பொதுநலத்துடன் தர்மம் செய்ய வேண்டும். * இயற்கையில் அனைத்தும் மாறிக் கொண்டே இருக்கிறது.  சில மாறுதல்கள் மட்டும் நம் கண்ணுக்குத் தெரிகிறது. மலையும், சமுத்திரமும் கூட காலப்போக்கில் மாறுகின்றன என்பதால் உலக நடப்புகளை தெரிந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். * குழந்தை குறும்புத்தனம் செய்தால் வீட்டில் கட்டிப்போடுகிறோம். நம்மிடம் ஆசை என்ற குறும்புத்தனம் இருப்பதால் ஈஸ்வரன் நம்மை கட்டிப் போடுகிறான். - ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் 

அபிராமிஅந்தாதிபாடல்# - 35

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்# - 35 மனதிற்கு பிடித்தாற்போல்  திருமணம் நிறைவேறும் திங்கள் பசுவின் மணம் நாறும் சீரடி,  சென்னி வைக்க, எங்கட்கு ஒரு தவம் எய்தியவா,  எண் இறந்த விண்ணோர், தங்கட்கு  இந்த தவம் எய்துமோ? -  தரங்க கடலுள் வெங்கண் பணியனை  மேல் துயில்  கூறும் விழுபொருளே தரங்க கடல் - பாற்கடல் வெங்கண் - வெப்பம் ததும்பும் கண்.  வெப்பத்தால் சிவந்த கண் பணியனை - பணி - பாம்பு,  அனை - தலை அனை போல. அதாவது பாம்பு படுக்கை. திருப்பாற்கடலில், ஆதி சேஷன் மேல் துயிலும் அன்னை வைஷ்ணவியே, இங்கு அம்பாளும் நாராயணும் ஒன்றே அதாவது அவளே சோட்டாணிகரையில்  #அம்மாநாராயணா மற்றும் #லெக்ஷ்மிநாராயணா என்று போற்றபடுகிறாள் என்பதை விளக்குகிறார் பட்டர். இங்கே பட்டர்,  அன்னையே விஷ்ணு என்று பாடுகிறார்.),  சந்திரனின் மணம் வீசும்  ஜோதிடத்தில் மனக்காரகன் சந்திரன் என குறிப்பிடுகிறது. அந்த மனத்தில் உன் திருவடி தாமரையால் பதித்தனால்,எனது மனதை நீ ஆட்கொண்டததால். நினது சீர்மிகு திருவடிகளை,  என் தலைமேலும் நீ வைக்க  நான் என்னதவம் செய்தேனோ!  நம் முன்னோர்களும்,...

ஆன்மீகம் என்பது என்ன?.

Image
 ஆன்மீகம் என்பது என்ன?. ஆன்மீகம் என்பது, உடல் மற்றும் மனம் கடந்து,  ஒருவரது ஆத்மாவின் வளர்ச்சிக்கான தேடலாகும்.  இது உலகியல் சார்ந்த விஷயங்களில் இருந்து விலகி,  அக அமைதியையும், புரிதலையும் நோக்கிய ஒரு பயணம்.  ஒருவரின் உள்ளார்ந்த ஆன்மீக உணர்வை மேம்படுத்தும் செயல்களும் ஆன்மீகத்தில் அடங்கும்.  விளக்கம்: ஆன்மீகம் என்பது, பொருள்சார்ந்த உலகியல் விடயங்களைத் தாண்டி, மனதின் ஆழத்தில் ஏற்படும் தேடலாகவும்,  ஆன்மாவின் வளர்ச்சிக்கான பாதையாகவும் கருதப்படுகிறது.  இது, ஒருவரது வாழ்க்கையின் அர்த்தத்தையும், நோக்கத்தையும் கண்டறிய உதவும் ஒரு பயணமாகும். உடல் மற்றும் மனம் கடந்த நிலை: ஆன்மீகம் என்பது, உடல் மற்றும் மனதின் செயல்பாடுகளைக் கடந்த ஒரு உயர் நிலையை உணர்த்துவது. இது, மனம் கடந்த பெருநிலையை உணர்ந்து,  இவ்வுலகில் ஒருவரது இருப்பின் அர்த்தத்தைத் தேடும் ஒரு பயணமாகும்.  உள்ளார்ந்த தேடல்: ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளார்ந்த ஆன்மீகத் தேடல் இருக்கிறது.  இதை உணர்ந்து, அதை நோக்கிச் செல்வது ஆன்மீகம்.  இந்தத் தேடல், ஒருவரது வாழ்க்கையின் நோக்கம், அர்த்தம் மற்றும்...