காமாக்ஷியை காமதாயினி
காமாக்ஷியை காமதாயினி என அழைக்க காரணம். அம்பாள் தாட்சாயாணியாக தக்ஷசனுக்கு மகளாக பிறந்த போது தனது கணவர் சிவபெருமானுக்கு தான் செய்த யாகத்தில் உரிய மரியாதை கொடுக்காததால் வெகுண்ட அம்பாள் தக்ஷ்சன் செய்த யாகத்தில் தனது உயிரை மாய்த்துக்கொண்டால். இதில் மனிதனாக பிறந்த யாவரும் செய்த கர்மாவிற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதே இது உணர்த்துக்கிறது. இதை அறிந்த சிவப்பெருமான் அம்பாளின் உடலை சுமந்து பைத்தியம் பிடித்தார் உலகை சுற்றி வரும்போது. உலகம் இயக்கமே ஸ்தம்பித்து. இதை பார்த்த நாராயணன் தனது சுதர்சன சக்கரத்தால்,அம்பாளை உடல்பாகங்களை 51பாகங்களாக சிதைத்தார். அம்பாள் உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் 51சக்தி பீடங்களாக மாறியது. இதன் பின் சிவபெருமான் தவகோலத்தில், அடுத்த அவதாரத்தில் பார்வதியாக அவரித்த அம்பாள் ,அப்பனை மணமுடிக்க நினைத்தார். ஆனால் சிவப்பெருமான் தவத்தில் இருந்ததால் அவரது தவத்தை கலைக்க தேவர்கள் மன்மதனின் உதவியை நாடினார். மன்மதன் தனது மலர் அம்புகள் மூலம் சிவனின் தவத்தை கலைத்தான். அதில் வெகுண்ட சிவப்பெருமான் தனது நெற்றி கண்மூலமாக மன்மதனை சாம்பலாக்கினான். பிறகு நடைப்பெற்ற சிவபெருமான் மற்றும் ...