அபிராமிஅந்தாதிபாடல்-51
#அபிராமிஅந்தாதிபாடல்-51 அரணம் பொருள் என்று அருள் ஒன்றும் இலாத அசுரர் தங்கள் முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார் மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே பொருள் அருள் ஒன்று இல்லாத அசுரர் - க்ரோதமே உருவான, அன்பு என்பது தங்களிடத்தே ஓரு சிறிதளவும் இல்லாத அரக்கர்கள், தங்களின் திரிபுரமே என்றும் நிலையானது என்று இருந்துவந்தனர். அந்த திரிபுரத்தை தனது அம்புகளால் எரித்து அழித்த சிவபெருமானும், முகுந்தனான விஷ்ணுவும், தொழும் அன்னையே, உன் பாதமே துணை என்று எந்நாளும் தொழும் உன் அடியார்களின் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியை அறுத்து, அவர்கள் மீண்டும் இவ்வுலகில் பிறாவத வரத்தை தந்தருள்வாய். பாபநாசம் சிவன் என்னும் மகான், தனது லதாங்கி ராக பாடலில், பிறவா வரம் தாரும் பெம்மானே பிறவா வரம் தாரும் - பிறந்தாலும் நின் திருவடி மறவா வரம் தாரும் - மாநிலமீதில் பிறவா வரம் தாரும். என்று உருகி பாடியிருப்பார். அப்பர் சுவாமிகள், நடராஜ பெருமானின் குனித்த புருவத்தினையும், கொவ...