Posts

Showing posts from February, 2025

எதை மாயை?. என்கிறார் ஆச்சாரியர்

Image
 தெய்வத்தின் குரல்:  எதை மாயை?. என்கிறார் ஆச்சாரியர் . மேலும் மாயை என்பது என்ன என்பதுப் பற்றி மஹாபெரியவா அருள்வாக்கு. மாய சக்தி தான் அம்பாள், ஒரு காரியமும் இல்லாமல்,  தன்னைத் தானே அநுபவித்துக் கொண்டிருக்கிற பிரம்மத்தையே #சிவன்##சிவம்#என்று சொல்கிறோம். காரியமில்லாமல், ரூபமில்லாமல், வருணமில்லாமல், குணமில்லாமல் இருக்கிற அந்த சாந்தமயமான பிரம்மத்திலிருந்து தான், இத்தனை காரியங்கள், ரூபங்கள், வர்ணங்கள், குணங்கள் எல்லாம் உண்டாகியிருக்கின்றன.  மாயா சக்தியினால் ஒரே பிரம்மம் இத்தனை உருவங்களும் குணங்களும் உள்ள பிரபஞ்சங்களாகவும், ஜீவ ராசிகளாகவும் தோன்றியிருக்கிறது. ஒன்றான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகக் காட்டுகிற அந்த மாயாசக்தி தான் #அம்பாள்# என்று சொல்லுகிறோம்.  இந்தச் சக்தியால்தான், நாம் எல்லாம் தோன்றியிருக்கிறோம். உண்மையில் நாமும் பிரம்மத்தைத் தவிர வேறு இல்லை.  இந்த ஞானத்தைக் கொடுப்பவள். ஆனால்,நாம் நமது அறியாமையால் அதை வேறாக நினைக்கிறோம். இதற்குக் காரணம், பிரம்ம சக்தியான அம்பாளின் #மாயை#தான்.  அதுவே திரோதானம். இப்படி நம்மை மாயையில் போட்டு எடுப்பது அவளுடைய லீலை....

சிவராத்திரி இரண்டாம் கால அபிஷேகம்

Image
 ஶ்ரீ மஹா லலிதா திரிபுர சுந்தரி உடனுறை  ஜெயந்தீஸ்வரர் ஆலயம் @இராமாவரம் சிவராத்திரி இரண்டாம் கால அபிஷேகம் மற்றும் அதன் விசேஷம் என்ன?  சிவபெருமானின் திருவடியைத் தேடிச் சென்ற மகாவிஷ்ணுவால், ஈசனுக்கு செய்யப்படும் பூஜையாக இது கருதப்படுகிறது.  அப்போது இறைவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படும். பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்து சாத்தப்படும்.  வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்வர்.  வில்வம், தாமரைப் பூவால் அலங்காரம் செய்யப்படும்.  துளசி கொண்டு அர்ச்சிக்கப்படும். நைவேத்தியமாக பாயசம் படைக்கப்படும்.  யஜூர் வேதம்,8-ம் திருமுறையில் கீர்த்தி திருவகவல் ஆகியவை பாராயணம் செய்யப்படும். நல்லெண்ணெய் தீபத்துடன் பூஜை நடைபெறும்.  இந்த கால வேளையில் சிவப்பெருமானை வழிபட்டால், செல்வம் செழித்தோங்கும், திருமாலின் அருளும் கிடைக்கும். சுவாமிக்கு நடைப்பெற்ற அபிஷேக காணொளியின் இணைப்பு https://photos.app.goo.gl/ZKeKatZGCRYARfXv9

அம்பாளின் முக வர்ணணை. மோக்ஷ ப்ராப்தி

Image
 பகுதி 94. அம்பாளின் முக வர்ணணை. மோக்ஷ ப்ராப்தி Moniksha (Liberation) #லலிதாசஹஸ்ரநாமம்# #முகசந்த்ரகளங்காபம்ருகநாபிவிசேஷகா#.  ( मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका )  (நிலவில் உள்ள கறைகள்போல அன்னையின் முக விலாஸத்தில் கஸ்தூரி திலகம் இருக்கிறது) நிலவின் முகத்தில் இருக்கும் களங்கம் என்பது நிலவிற்கு குறையே அல்ல!  அவை அன்னையின் பாதிமதி போன்ற நுதலில் விளங்கும் கஸ்தூரித் திலகம்போல் என்கிறது நாமம்.  இது சொல்லவரும் உள்ளுரைக் கருத்தை,  நெற்றித்திலகம் பெண்களுக்கு வலிமை தருவதென்று அவர்களுக்குக் குறிப்பால் கூறுவதாகக் கொள்ளவேண்டுமோ? நிலவின் களங்கம் நிமலை வதனத்(து) இலங்கும் நுதலில் எழிற்போல் – திலகம் வலமென அன்னை மகளிருக் கெல்லாம் குலமுறைக் கூறலென்று கொள் #சாருசந்த்ரகலாதரா# அம்பாள் வேறு   அரன் வேறா.  இரண்டும் ஒன்றே.  ஒன்றே இரண்டும்.  எனவே அவளும்  பிறை சூடி.   அவள் அவரது வாமபாகத்தால் உமையொரு பாகன் வாம பாகாள் அர்த்தநாதீஸ்வரர். இவை அனைத்தும் ஒன்றில் ஒன்று அடக்கம். ஒன்றானவன் உருவில் இரண்டானவன். #சாரு#என்ற சந்திர ஒளி.   #சந்த்ரநிபா# ல...

நீயே கதி ஈஸ்வரி சிவ காமி தயா சாகரி -

Image
 நீயே கதி ஈஸ்வரி  சிவ காமி தயா சாகரி -  எனக்கு (நீயே கதி ஈஸ்வரி) லலிதா சஹஸ்ர நாமம் உணர்த்தும் மூன்றுப் பொருள். ஞாதுரு = காண்பவன் => ஆன்மா /  ஞானம் = பெறும் அறிவு => சிவ ஞானம் ஞேயம் = காணப்படும் பொருள் =>அம்பாள் ஞான, ஞேய ஸ்வருபிணீ அறிவும், அறியப்படும் பொருளுமாக இருப்பவள்,  அல்லது அறிவால் அறியப்படும் பொருள் ) அன்னையே  அறிவும்,  அறியப்படும் பொருளாகவும் இருப்பவள்  என்று பொருள் கொள்ளலாம்.  அதாவது அவற்றுள் பேதமில்லை என்று பொருளாகிறது.  ஆனால் த்ரிபுடியாக ,  ஞான, ஞாத்ரு, ஞேய என்று மூன்றாகவும் பார்த்து,  அவை மூன்றுமே அன்னையாக இருப்பதால் அபேதமானவை என்றும் நிறுவியிருக்கிறோம்;  இந்த நாமத்தை ஞானத்தினால் அறியப்படும் பொருளாக இருப்பவள் என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும். அறிவால் அறியும் அறிவின் உருவும் அறியும் அறிவுமாம் அன்னை – அறிய அறிவும் அவளும் அபேதம் அவளை அறிவோம் அடிகள் அடைந்து அறிவு,  அறிந்து கொள்பவன்,  அறியப்படு பொருள் என்று எந்த பாகுபாடும் இல்லை. கனவற்ற தூக்கம் நமக்கு 'நான்' என்ற உணர்வைத் தாண்டி ஒரு எல்லையற்ற ஆ...

#பஞ்சப்ரேதாஸநாஸீநா# #பஞ்சப்ரமஸ்வரூபிநீ#

Image
 நாளைய சௌந்தயலஹரி 92வது ஸ்லோகத்திற்கான பதிவுக்கு முன்பே அம்பாள் அதே கோலத்தில் காட்சி தந்தாள். #பஞ்சப்ரேதாஸநாஸீநா# #பஞ்சப்ரமஸ்வரூபிநீ# சில விஷயங்கள் நமது மனதிற்கு இதமானதாகவுமும் மிகவும் வருடுவதற்காகவும் இருக்கும். அவ்வாறான நிகழ்வே இன்றைய நிகழ்வு. தீடீரென காலை எனது நண்பரை சந்திப்பதற்கான ஏற்பாடு.  அவரை சந்திப்பதற்கான மாலை அவரது இல்லம் நோக்கி பயணம். ஆனால் இன்று சங்கடஹர சதுர்த்தி வீட்டில் அருகில் விநாயகருக்கு கைங்கர்யம் செய்யவில்லையே என்று வருத்தம். நண்பரின் வீட்டை நெருங்கும் போது மஹாதிரிபுரசுந்திரி ஆலயம். அம்பாளை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம். எனது நண்பர் மாலையில் திறப்பார்களா என சந்தேகம் என கூறினார். அதற்கு அவரிடம் அம்பாள் நிச்சயம் எனக்கு தரிசனம் கொடுப்பார் என பதில் அளித்தேன். அவ்வாறு நண்பரை சந்தித்து திரும்பி வரும்போது . கோவிலில் வாசலில் பூக்காரி நீ சரியான நேரத்திற்கு வந்துள்ளீர்கள். ஐயரு அம்பாள் சன்னதியை திறந்துக் கொண்டுள்ளார் என பதில் அளிக்கிறார். அவளிடம் செவ்வரளி பூ வாங்கிக் கொண்டு சந்நிதியை நெருங்கும் போது. கோவில் ஐயர் என்னிடம் இன்று சங்கடஹர சதுர்த்தி பிள்ளையாருக்கு அபிஷேகம்...

பூமி லாபம் தனலாபம் Buying of lands ,

Image
 பகுதி 91. பூமி லாபம் தனலாபம் Buying of lands , obtaining riches,patronage and mass support  லலிதா சஹஸ்ர நாமம் ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல். #லலிதாசஹஸ்ரநாமம்# #மராலீமந்தகமா# அம்பாளின் சிலம்பு ஒளிப்பொருந்திய இரத்தின கற்களால் ஆனது. ஸிஜ்ஞாநமணிமஞ்ஜீரமண்டித ஶ்ரீபதாம்பூஜா ரத்தினக் கணுக்கால்களால் அலங்கரிக்கப்பட்ட அவளுடைய தாமரை போன்ற பாதங்கள் இனிமையான ஒலிகளை உருவாக்குகின்றன. அவள் விலைமதிப்பற்ற ரத்தினங்களால் ஆன  கொலுசுகளை அணிந்திருக்கிறாள்.  42 முதல் 46 வரையிலான ஐந்து நாமங்கள் அவளுடைய பாதங்களைப் பற்றி மட்டுமே விவரிக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.  அவளுடைய பாதங்கள் மட்டும் இவ்வளவு விவரிக்கப்படும் போது, ​​ அவளுடைய சக்திவாய்ந்த வடிவத்தைப் பற்றி யோசிப்பது கூட புரிந்துகொள்ள முடியாதது. அவளுடைய பிரகாஷ விமர்சன மஹா மாயா ஸ்வரூபிணி வடிவத்தைப் பற்றி ஈர்க்க வாக் தேவிகளால் இது செய்யப்பட்டுள்ளது #சௌந்தயலஹரி# தேவியின் நடையழகு தேவியின் நடையழகு பூமி லாபம், தன லாபம் பதந்யாஸ க்ரீடாபரிசய மிவாரப்து மனஸ: ஸ்கலந்தஸ் தே கேலம் பவனகலஹம்ஸா ந ஜஹதி| அதஸ்தே...

ஸிந்தூராருணவிக்ரஹாம்

Image
 #ஸிந்தூராருணவிக்ரஹாம் # அம்பாளின் முகவிராந்தம் புலி தன் உணவுகாக இறையைத் தேடும் போது அதன் முகமானது சிவந்து அதன் கோர பற்கள் மூலம் இறையைத் தேடும் அதன் முகமானது  உக்கிர சூரியன் போல் இருக்கும். அது புலி இரண்டு நாளான  குட்டி ஒரு இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு எடுத்து செல்லும் போது  அதே புலி தனது தனது பல்லால் அதற்கு வலி இல்லாமல் எடுத்து செல்லும். ஒரு மிருகத்திற்கு வித்தியாசம் நம்மை பெற்று லோகமாதாவிற்கு இருவேறுப்பட்ட முகம் இருப்பத்தில் என்ன சந்தேகம். இந்த முகத்தை தான் ஆதிசங்கரர் அம்பாளை  உத்யத்பானு ஸஹஸ்ர கோடி ஸதிர்ஸாம் என்று அம்பாளின் முகத்தை குறிப்பிடுகிறார். ஆயிரம் சூரியன் உதிக்கும் போது எவ்வளவு பிரகாசம் அவ்வளவு பிரகாசம் என்கிறார். அபிராமி பட்டரும் தானும் சாமனியபட்டவன் இல்லை என்பதை தனது முதல் பாடலில் உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகமுடையாய்  என ஆரம்பிக்கிறார். அம்பாளின் நெற்றியில் இருக்கும் திலகம் எப்படி இருக்கிறதாம் காலையில் உதிக்கின்ற காலை சூரியன் எப்படி இளம்சிவப்பாக இருக்குமோ அதை போல் அவளது நெற்றி திலகம் இருக்கிறதாம் என அபிராமி பட்டர் தனது முதல் பாடலில் வெளி...

அம்பாளின் முகாரவிந்தம் இருவித வர்ணணை ஏன்?.

Image
 அம்பாளின் முகாரவிந்தம் இருவித வர்ணணை ஏன்?. லலிதா சஹஸ்ர நாமம் அம்பாளுக்கு ஆயிரம் நாமங்கள் மட்டும் தானா என்ன?. அவள்  நாமரூபா எல்லா வார்த்தைகளும் அவளிடமிருந்து தான் உருவாகினது தானே. உத்யத்பானு ஸ்கஸ்பரா என்ற நாமத்தை காணலாம். #அம்பாளுடையமுகாரவிந்தம்#. அம்பிகையின் முகத்தை வர்ணிக்குமா எல்லோரும் இதை கையாண்டு இருக்கிறார்கள். அம்பாளுடைய முகாரவிந்தம் எப்படி இருக்கும் தெரியுமா?. ஆயிரம் சூரியர்கள் விடிகாலையில் உதிக்கும் போது அதன் கிரணங்கள் எப்படி சிவப்பு வர்ணமாக இருகாகுமோ அப்படி இருக்குமாம். பின்னர் வேறு இடத்தில் அவளது முகம் சரஸ் சந்திர நிபானனா சரத்காலத்தில் உதிக்கும் குளுமைப் பொருந்திய சந்திரனைப் போல் இருக்குமாம். இதென்ன எப்படி சூரியனைப் போலும் சந்திரனைப் போலும் இருக்குமா ஒருவரது முகம். ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக உள்ளதே. மகிஷாசுரன் மதுகைடபன் போன்ற அசுரர்களை வதைக்கும் போது உக்கிரமாக சிவந்து உத்யத்பானு ஸ்காஸாராபாவாக இருக்கும். அபிராமி பட்டர் போன்ற அடியார்களை காக்கும் போது ஸரஸ்சந்திர நிபானனாவாக இருக்கும்.

மலரடியை நாடும் உயிர் வண்டு. Removal of charms and enchantments by enemies.

Image
 பகுதி 90 துர்மந்திர சேதனம் Removal of charms and enchantments by enemies. கிட்டத்தட்ட 89 ஸ்லோகங்களை வர்ணிக்க காரணம் ஆச்சாரியார் தன்னை முழ சரணாகதி அம்பாளின் திருபாதங்களில் அடைவதற்காக தான். அனைவரும் சென்று அடைய வேண்டியது இதை தான்.  அதாவது இறைவனது சரணை இருக்கப் பற்றிக்கொள்வது. அதற்காக தான் இத்தனை தலை முதல் பாத வர்ணணை. லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி  ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல். #லலிதாசஹஸ்ரநாமம்# வாஞ்சிதார்த ப்ராதாயிநீ வாஞ்சிதார்த்த ப்ரதாயினி என்பது, பக்தர்களின் இச்சைகளை நிறைவேற்றும் அம்சம் கொண்டவர். #வாஞ்சிதார்த்த# என்றால்  இச்சை, விருப்பம், ஆசை என்று பொருள்.  ப்ரதாயின் என்றால் வழங்குதல் என்று பொருள்.  #மஹாலக்ஷ்மி# மந்திரத்தில், #வாஞ்சிதார்த்தப்ரதாயினி# என்ற சொல் இடம்பெற்றுள்ளது.  #பக்தசௌபாக்யதாயிநீ# வாஞ்சிதார்த்த =  இச்சை - விருப்பம்-  ஆசை ப்ரதாயின் = வழங்குதல்  வாஞ்சிதார்த்த ப்ரதாயினீ; =  (பக்தர்களின்) அபிலாஷைகளை பூர்த்தி செய்பவள்  #வந்தாருஜநவத்ஸலா# வணங்கும் பக்தர்களிடம் வாக்ஸல்யம் உள்ளவள் #சௌந்தயலஹ...

ஐம்பத்து ஒன்றும் அன்னை பராசக்தியும்

Image
 ஐம்பத்து ஒன்றும் அன்னை பராசக்தியும் இந்பதிவில் மந்த்ர ரூபமாக,  51 மாத்ருகா அக்ஷரங்களாக இருக்கும் அன்னை நமது உடலில் எங்கெல்லாம் வாசம் செய்கிறாள். என்றும் இன்றைய இந்தியாவில் எங்கு இந்த 51 சக்தி பீடங்கள் இருக்கின்றன என்றும் பார்க்கலாம். சம்ஸ்கிருதத்தில் மாத்ருகா அக்ஷரங்கள் 51.  உலகில் இருக்கும் சகல மந்த்ரங்களுக்கும், வேத-வேதாந்த சாஸ்திரங்களுக்கும் தாய் போன்றவை. இந்த 51 அக்ஷரங்கள். அதனால்தான் இவற்றிற்கு மாத்ருகா அக்ஷரங்கள் என்று பெயரே.  இவை எந்த அக்ஷரங்கள் என்பதெல்லாம் சம்ஸ்கிருதம் படித்தால் தெரிந்து கொள்ளலாம். முன்னர் சொன்ன 51 பீடங்கள் இந்த 51 அக்ஷரங்கள் தோன்றிய காலத்திலேயே தோன்றியது என்றும், இதனாலேயே ஆதி பீஜாக்ஷர பீடங்கள் என்றும் வழங்கப்படுவதும் உண்டு. அண்டத்தில் இருப்பதெல்லாம் பிண்டத்திலும் உண்டு.  இந்த 51 அக்ஷரங்களும் நம் உடலில் ஆறாதாரங்களில் (ஆறு ஆதாரங்கள்) இருக்கின்றன.  இவை முறையே,  மூலாதாரத்தில் 4,  சுவாதிஷ்டானத்தில் 6, மணிபூரகத்தில் 10,  அநாகதத்தில் 12,  விசுக்தியில் 16,  ஆக்ஞையில் 2,  நெற்றிக் கண் பகுதியில் சூக்ஷ்மமாக 1,...

மூத்தவளே யாருக்கு மூத்தவள் யாருக்கு இளையவள்

Image
 ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ 🙏🏾!   ஓம் நமஹ சிவாய!🙏🏾 ஸந்ஹாரிணீ ருத்ரரூபா திரோஸ்நகரீஶ்வரீ ।ஸாஶிவாயநுக்ரஹதா பஞ்சக்த்யபராயணா  அபிராமி அந்தாதி மூத்தவளே என்றும் மூவாமுகுந்தற் கிளையவளே மாத்தவளே உன்னை அன்ற மற்றோர்தெய்வம் வந்திப்பதே. உலகம் பதினான்கையும் திருவருளால் ஈன்றோய், அவ்வாறு அருள் கொண்டு ஈன்றது போலவே  அவற்றைப் பாதுகாத்தோய்,   பின்னர் அவற்றைச்  சங்காரம் செய்வோய்,  விடத்தையுடைய நீலகண்டப் பெருமானுக்கு முன் பிறந்தோய்,  மூப்பை அடையாத திருமாலுக்குத் தங்கையே,  பெரிய தவத்தையுடையவளே, அடியேன் உன்னையே தெய்வமாக வழிபடுவதன்றி  வேறு ஒரு தெய்வத்தை வழிபடுவது ஆகுமா? ஆக்கல் முதலிய முத்தொழிலுக்கும் மூல காரணமாயிருத்தல் பற்றிப பூத்தவளே, காத்தவளே; கரந்தவளே என்றார்.  "ஈரேழ் புவனமும் பூத்தவுந்திக் கொங்கிவர் பூங்குழலாள்" (75)  எனஎன்பர் பின். பூத்தவண்ணம் என்ற உவமை,  அருள் பெருகிப் பூத்தவாறே அருள் பெருகிக் காத்தாய் என்பதைப் புலப்படுத்தியது (பயன்).  பிரமன் முதலிய மூவரிடத்தும் இருந்த முத்தொழிலையும் இயற்றுபவள் அம்பிகை யென்றவாறு; லலிதாம்பிகையின் திர...

விஸ்வ குரு என்பதற்கு இவையே சான்று

Image
 நாம் உலகிற்கிற்கு முன்னோடி அனைத்து துறையிலும் அதாவது  விஸ்வ குரு என்பதற்கு இவையே சான்று. அவர்கள் எதையும் நாங்கள் செய்தோம் என்று உலகிற்கு பறைசாற்றவில்லை. மாறாக யாருக்கு தேவையோ அவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும் என விட்டுச் சென்றுள்ளனர் நமது மூதாதையர். அதனால் நாம் மற்ற தேசங்களுக்கு முன்னோடியாக திகழ்த்துள்ளோம். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் நாம ஏன் கையேந்த வேண்டும் அயல்நாட்டில் என்ற நிலையில் நாம் மூன்னோர்கள் நம்மை வைத்துள்ளனர்.  🇮🇳சிறந்த கண்டுபிடிப்புகள்🇮🇳  🇮🇳இந்தியாவின் சிறந்த பண்டைய விஞ்ஞானிகளில் 10 பேர்🇮🇳  1. மகரிஷி சுஷ்ருதா -  உலகின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர்  2. கனடா - ஜான் டால்டனுக்கு  2500 ஆண்டுகளுக்கு முன்பே அணுக்களின் கோட்பாட்டை உருவாக்குகிறது  3.பையின் மதிப்பை நிர்ணயித்தல் மற்றும் பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பு போன்ற. பல கணிதக் கருத்துக்கள் சிறந்த கணிதவியலாளரும்வானியலாளருமான #ஆர்யபட்டாவுக்கு#க் காரணம்.  4#நாகார்ஜுனா# உலோகவியலின் ஆரம்பகால ஆதரவாளர்களில் ஒருவர்   5. #பிதாகரஸ்#”  தேற்றம் - பித்தகோரஸ் தேற்றம்...

ஸகல ரோக நிவர்த்தி. Relief from all diseases

Image
 பகுதி 89. ஸகல ரோக நிவர்த்தி Relief from all diseases  லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல். #லலிதாசஹஸ்ரநாமம்# #நகதீதிஸஞ்சந்நநமஜ்ஜநதமோகுணா# நகதீதி ஸஞ்சந்ந நமஜ்ஜந தமோகுணா --  அம்பாளின் கை விரல்  நகங்கள் செய்யும் சேவையை என்னவென்று சொல்வது.   நமது மனதின்  இருளை   (தமோ குணத்தை) போக்கும்   ஒளி வீசுபவை .   அப்படி பளபளவென்று  கண்ணாடி மாதிரி ஜொலிக்கும்  நகங்கள். #சௌந்தயலஹரி# கரகமலங்களை குவியச்செய்யும் நகச்சந்திர்கள். (ஸகல ரோவநிவர்த்தி). "நகைர்நாகஸ்ரீணாம் காரகமலாஸங்கோச்சஷஷிபிஹி தாரூணாம் திவ்யாநாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ! ஃபாலாநி ஸ்வஹஸ்தேப்யஹ கிசலயகராக்ரேண ததாதாம் தரித்ரேப்யோ பத்ரம் ஶ்ரியமநிஷாமாஹ்நாய ததாதௌ!" "ஓ! சண்டி!  தேலலோகத்தில் உள்ள கற்பகம் முதலான வ்ருஷங்கள் தங்களுடைய துளிராகிய கைகளினால் ஸ்வர்கலோகத்தில் சகல சம்பத்துடன் இருக்கும் தேவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுக்கின்றன. உன்னுடைய பாதங்களோ தரித்தர்களுக்கு சிறந்த ஐஸ்வர்யாத்தை அளிக்கவல்லது.  இதனால்தானோ உன்னுடைய பா...

அம்பாளுக்கு அப்படியே என்ன ஒரு ப்ரேமை அப்பன் மேல்.

Image
 அம்பாளுக்கு அப்படியே என்ன ஒரு ப்ரேமை அப்பன் மேல். குழையத் தழுவிய கொன்றையந்தார் கமழ் ‘கொங்கை வல்லி’ என்று பாடுகிறார் அபிராமி பட்டர்.  அதனால்  உருவாகிய தலம் இது. நகரேஷு காஞ்சி’ என்கிறார், கவிகாளிதாசர்.  (நகரங்களுள் சிறந்தது காஞ்சி என்று பொருள்படும்.) ஆற்றுப் பூவரசு எனப்படும் காஞ்சி மரங்கள் நிறைந்த ஊர் ஆதலாலும், ஊரின் அரசியாக விளங்கும் அன்னை காமாட்சியின் இடையிலுள்ள ‘காஞ்சி’ எனும் ஆபரணத்தின் பெயராலும், #நிலையாமை#எனும் பொருளில், நிலையற்ற இவ்வுலகில் நிலைத்திருப்பது பரம்பொருள் மட்டுமே என்று அன்னை உலகிற்கு உணர்த்தியதாலும் #காஞ்சிபுரம்# என்ற பெயர் ஏற்பட்டது என்பர். 🌹தழுவக் குழைந்த நாதர் என்றும்  அழைப்பர் ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி🌹 சிவனார் அன்னையை நோக்கி,  ‘‘என் வலக் கண்ணும் இடக் கண்ணும் சூரிய சந்திரர்களாக ஒளி கொடுப்பதால் உலகம் சக்திமயமாகும் போதும் அதன் உயிராயிருப்பது நானே’’ என்றார்.  இதைச் சோதிக்க எண்ணி அம்பிகை  விளையாட்டாக ஐயனின் பின்னால்  நின்று அவரது இருகண்களையும் தன் கைகளினால் மூடினாள். உலகமே இருண்டுபோய்ப்  படைப்புத் தொழிலும் நின்று போயிற்ற...

ஶ்ரீமாதா

Image
 இது நாள் வரை அம்பாளின் பலவிதமான சொரூபகஙள், ரூப வர்ணணை மற்றும் அம்பாள் எப்படி பட்டவள் என்ற பதிவைக் கண்டோம். எல்லாவற்றிற்கும் மூலம் அவள். அது எவ்வாறு படைத்தலுக்கு பிரம்மன் அதுக்கு துணை பிரம்மி காத்தலுக்கு விஷ்ணு அதற்கு துணை வைஷ்ணவி அழித்தலுக்கு அது அழித்தல் இல்லை அதாவது ஒன்றிலிருந்து மற்றொன்றை உருவாக்குதல். அதை ருத்ரன் செய்கிறான் அதற்கு துணை ரௌத்ரி. அடுத்தது மறைத்தல்  எதை மறைத்தல், எது தேவையோ அதை கொடுத்து மற்றவற்றை மறைத்தல். அதற்கு ஈஸ்வரன் அதற்கு துணை ஈஸ்வரி கடைசியாக அனுகிரஹம் அதற்கு சதாசிவன் அதற்கு துணை சதாசிவாகுடும்பினி. இவ்வாறு ஐந்துத்தொழிலுக்கு அவள் துணைப்புரிக்கிறாள். அவளே ப்ரயள காலத்தில் சதாசிவன் ஆடும் நடனத்திற்கு சாட்சியாக இருக்கிறாள். அதனால் அவள் மஹாப்ரளய சாக்ஷிணி. இதை தவிர தன்னைப்பற்றிய ரூபசொருபங்களை படைப்பதற்கு வாக்தேவிகள் மூலம் லலிதா சஹஸ்ர நாமத்தை படைத்தாள். நமது கணவனின் சொரூபமான சங்கரனை அதாவது சங்கர பகவத்பாதாளை படைத்து அவள் மூலம்  சமஸ்கிருத க்ரந்தமான  சௌந்தயலஹரி சிவானந்தலஹரி போன்ற பல க்ரந்தகளை படைக்க வைத்தல். தனது பக்தனான அபிராமி பட்டர் மூலம்  அவரின் ...

ஸர்வ துக்க நிவர்த்தி. Freedom from troubles

Image
 பகுதி 88. ஸர்வ துக்க நிவர்த்தி Freedom from troubles  லலிதா சஹஸ்ர நாமத்திற்கு சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல். #லலிதாசஹஸ்ரநாமம்# #கூர்மப்ருஷ்டஜயிஷ்ணுப்ரபாதாந்விதா# அவளது இரண்டு அடி வளைவுகள் ஆமையின் பின்புறத்தை (ஓடு) விட வடிவமாகவும் குவிந்ததாகவும் இருக்கும். அவளது பாத வளைவு ஆமை ஓட்டை விட அழகாகவும் வடிவமாகவும் இருக்கிறது.  ஆனால் சங்கரர் தனது பாதங்களை கடினமான ஆமை ஓடுகளுடன் ஒப்பிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார்.  சௌ88 கூறுகிறது  "உங்கள் கால்களின் கால்விரல்கள் தான் இந்த பிரபஞ்சத்தை நிலைநிறுத்துகிறது  (அவர் முழு பாதங்களையும் ஒப்பிடவில்லை,  அவர் கால்விரல்களைப் பற்றி மட்டுமே கூறுகிறார்).  சிவபெருமான் உங்கள் பாதங்களின் மென்மையை அறிந்தவர் அதனால் தான் உங்கள் திருமணத்தின் போது உங்கள் பாதங்களை மிகுந்த கவனத்துடன் பிடித்தார்.  இவ்வளவு மென்மையான பாதங்களை ஆமை ஓட்டின் பாதத்துடன் ஒப்பிட அவர்களுக்கு (ஒருவேளை வாக் தேவி)  எவ்வளவு தைரியம்?”.  #சௌந்தர்யலஹரி# பதம் தே கீர்த்தினாம் ப்ரபதாமபதாம் தேவி விபதாம் கதம் நிதாம் சத்பிஹ் கத்தினகாம...

அன்பும் காருண்யம் மிக்கவுள். அம்பாள் அவள் ஶ்ரீமாதா

Image
 அம்பாள் எப்படி பட்டவள் என்ற பதிவை கடந்த நான்கு நாட்களாக கண்டோம். அவள் அன்பும் காருண்யம் மிக்கவுள். காருண்யத்தால் லாவண்யம் மிக்கவள். இதை எனக்கு உணர்த்தவே கடந்த வாரம் பூர்ண மஹாமேரு டிரஸ்டில் வருமாறு அழைப்பு வந்ததோ என தோன்றுகிறது. காரணம் அது ஶ்ரீநகரம் அம்பாள் வாசம் செய்யும் இடம். ஆதரவற்றோர்களுக்கு இரு விஷயம் மிக முக்யம் ஒன்று மன நிறைவு. அங்கு அது ஏராளமாக இருக்கிறது. மற்றொன்று பசிக்கும்போது உணவு அது அவர்களுக்கு வயிறு நிறைய கிடைக்கிறது. காரணம் அங்கு அன்னை என்பவள் தனது குழந்தைகள் எவ்வாறு காப்பாலோ அவ்வாறு  மாதிரியான ஒரு சுழல். அதை அங்கே உள்ளவர்களின் உள்ளங்களில் காண முடிந்தது. இந்த பதிவை நான் பதிய ஆரம்பிக்கும்போது அதை நான் உணரவேண்டும் என்பதற்காக. கடந்த வாரம் அவ்வில்லம் நோக்கிய பயணம். ஓம் ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ ஶ்ரீமத்ஸிம்ஹாஸனேச்வரீ சிதக்னி குண்ட ஸம்பூதா தேவகார்ய ஸமுத்யதா. ஸ்ரீமாதா என்றால் எல்லையில்லாக் கருணையுடைய தாய்.  "ஸ்ரீ' என்பதற்கு அழகு, பெருமை, மகிமை, செல்வம், லட்சுமி என்னும் பொருள்களோடு விஷம் என்ற பொருளும் உண்டு.  தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட விஷத்தால் ...

அம்பாள் : எப்படிபட்டவள் - 4. நிறைவு பகுதி

Image
  அம்பாள் : எப்படிபட்டவள் - 4 அழகு – அன்புகளின் முழுமை :  தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி). அதுதான் அப்பா, அம்பாள் ரூபம்! காருண்யம் தானப்பா லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒரு அழகல்ல. கொஞ்சம் கோபம் வரட்டும், அழுகை வரட்டும். அப்போது கண்ணாடியில் நம் மூஞ்சி தட்டுப் பட்டால் நமக்கே பார்க்கப் பிடிக்கவில்லை.  துளி ஜ்வரம் வந்தால் சரீர அழகு போய்விடுகிறது.  கோபம், அழுகை, நோய், நொடி எதுவுமில்லாமல் அன்பே உருவாயிருக்கிற அம்பாளுடைய சரீரமொன்றுதான் நிஜ அழகு. ஆனதால் நம் கல்பனையில் அன்பை எத்தனை உத்க்ருஷ்டமாக [உயர்வாக] உருவமாக்கிப் பார்க்கமுடிகிறதோ அப்படிப் பாரப்பா!  அதுதான் அம்பாள் ரூபம் என்று வைத்துக்கொள். ”சாந்தமாக இருக்கிற பிரம்மத்தின் அத்தனை சக்தியும்தான் அம்பாள் என்று சொல்லிவிட்டு,  அதை அன்பு என்று மட்டும் ஏன் விசேஷித்துச் சொல்ல வேண்டும்! லோகத்தில்  கஷ்டம்,  த்வேஷம்,  பயம் எல்லாம் இருக்கிறதென்றால் இதெல்லாமும் பரமாத்ம சக்தியிலிருந்து வருவதுதானே? பின்னே அதை – அவளை – அன்பாக மட்டும் எப்படிச் சொல்வது?” அது ஸரி, ஆனால் லோகத்தில் தாயன்பு,  ஸஹோதர பாசம்,  ஸ்நேஹ...