Posts

Showing posts from April, 2026

நீங்கள்_வெறும்_விலங்கு_தானா? #அல்லது #விஸ்வரூபமா?

Image
 நமது முந்தைய பதிவு #அண்டத்தில்உள்ளதுபிண்டத்திலும்ம்உள்ளது. #யார்மஹான்கள்ஆகிறார்கள்?. #யார்மனிதனாகவேஇருக்கிறார்கள்  ?. என்ற கேள்விகான  - பதிலாக அழகான நண்பரின் பதிவு தங்களின் பார்வைக்கு. நிறைய போடுகின்ற பதிவிற்க்கான சான்றுகள் உடனடியாக கிடைக்கின்றன. எல்லாம் அம்பாளின் அருள் என்பது நிதர்சனமான உண்மை. நண்பரின் அழகான பதிவு #நீங்கள்_வெறும்_விலங்கு_தானா?  #அல்லது  #விஸ்வரூபமா? படைப்பின் ரகசியம் தெரிந்தால்  உன் வாழ்க்கை மாறும்!  இயற்கை எனும்  பேராற்றல் இந்த உலகத்தை  நான்கு விதமான கூடாரங்களாகப் பிரித்துள்ளது: 🕊️ பறப்பன  (வானம்) 🐍 ஊர்வன  (பூமி) 🐟 மிதப்பன (நீர்) 🐎 நடப்பன   (நிலம்) இந்த நான்கிற்கும் பொதுவாக இருப்பது 'சிற்றின்ப யோனி'.  தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ள இயற்கை கொடுத்த ஒரு சுழற்சி இது. இதில்  'நடப்பன'  வரிசையில் நீயும் ஒரு விலங்காகவே  வாழ்கிறாய்! 🤷‍♂️ ⚠️ ஆனால்...  உன்னிடம் ஒரு  "மாஸ்டர் கீ" (Master Key) இருக்கிறது! மனிதப்பிறவிக்கு மட்டுமே  கொடுக்கப்பட்ட ரகசிய ஆயுதம்:  "ஐந்தாவது யோனி...

சர்வார்த்தசாதகசக்கரம்

Image
 #சர்வார்த்தசாதகசக்கரம் . இதில் வாசம் செய்யும் 10தேவிகளை வணங்குகிறேன். சர்வசித்திப்பிரதா - எல்லா சாதனைகளையும் அளிப்பவள் சர்வசம்பத்பிரதா - எல்லா செல்வங்களையும் அளிப்பவள். சர்வபியங்கரி -வேண்டும் அனைத்தையும் அளிப்பவள். சர்வமங்களகாரணி - அனைத்து ஐஸ்வர்களுக்கும் முன்னோடியாக இருப்பவள். சர்வகாமப்பிரதே - எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்பவள் சர்வதுக்கவிமோசினி - எல்லாத் துன்பங்களையும் நீக்குபவள். சர்வம்ருத்யப்பிரசமணி - மரணத்தை நீக்குபவள். சர்வவிக்னநிவாரிணி - எல்லாத் தடைகளையும் நீக்குபவள். சர்வாங்கசுந்தரி - ஒவ்வொரு அங்கமும் அழகுடன் திகழ்பவள். சகலசௌபாக்யதாயினி - எல்லா ஆசைகளையும் கொண்டு வருபவர். சர்வார்த்தசாதக சக்கரஸ்வாமினி  - அனைத்து செல்வங்களையும் கொடுப்பதுடன் ,விருப்பங்களை நிறைவேற்றி நல்வழியில் அழைத்துச் செல்பவள். குலோத்தீர்ன யோகினி ஞானத்தை விருத்தி செய்பவள் என்று அழைக்கபடுகிறது. இச்சக்கரத்தின் முத்ராதேவி சர்வோன்மாதினி (அனைவரையும் பித்துப் பிடிக்கச் செய்பவள்) ஆவாள். இந்த ஆவரணத்தில்,லலிதாவின் பிரதான வடிவம்(சக்கரேஸ்வரி த்ரிபுராஶ்ரீ - மூவுலக செல்வங்களை உடையவள். இச்சக்கரத்தின் தேவி ஶ்ரீ மகாமாக...

ஐந்தாம் ஆவரணம்

Image
 ஐந்தாம் ஆவரணம் #சர்வார்த்தசாதகசக்கரம் எல்லா செல்வங்களையும் தரும் சக்கரம்)  10முக்கோணங்களை கொண்டது. இதனை வெளிபத்து கோணங்கள் என்று கூறுவர். இது இவ்வுலக ஆசைகளையும் இலக்குகளையும் நிறைவேற்றுவதையும் வியாதிகளிலிருந்தூ நிவாரணம் பேறுவதையும் குறிக்கும். இது நமக்குத்  தேவையான அறிவு(knowledge)  செல்வம்(wealth) மகிழ்வூட்டும் சக்திகள்(Energies that please us) ஆசீர்வாதங்கள்(Blessings) வேண்டியனதருவது(Granter of desired) கஷ்டங்களை நீக்குவது(Remover of sufferings ) மரணத்தை சமாதானப்படுத்துவது(Appeaser of Death) தடைகளை நீக்குவது(overcome of obstacles) அழகு(Beauty) அதிஷ்டங்கள்(Good fortune) ஆகியவைகளை வழங்கு இடமாகும். அதுவே சர்வார்த்தசாதகசக்கரம். அதில் வாசம் செய்யும் தேவிகள்.

மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை"

Image
 #எனக்குள்எழும்கேள்விகள்# இங்கு பதிக்கின்ற பதிவுகள் என்னுள் எழுகின்ற கேள்வி . அதற்கான பதிலை தேடும்போது, ஏதாவது ஒரு குறிப்பு கிடைக்கும். அந்த குறிப்பைப் பற்றி தேடும்போது அதற்கு ஒரு அர்த்தம் கிடைக்கும். அதற்கான விடையை தேடும்போது அதற்கான விடை , இவ்வாறாக எனது தேடுதல் பணி தொடர்கிறது.  வாழ்க்கை என்பதே ஒரு தேடுதல் பணி தான். காரணம் ரமணர் போன்ற மஹான்களுக்கு #நான் #யார் என்ற தேடுதல் இருந்ததால் தான் அவர்கள் மஹான்கள் ஆனார்கள். உதாரணத்திற்கு 51சக்தி பீடங்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவ்வாறு தேடுதலின் போது.  அது 51சக்தி பீடம் அதை விட குறைவாக அல்லது கூடுதலாக இருக்க கூடாத என்ற எண்ணம். அதற்கான விடையை தேடும் போது நேற்றைய மற்றும் முந்த நாளைய பதிவு உருவானது. நாம் தேட தேட அதற்கான பதிலை ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமம் மூலமாகவே கிடைக்கிறது. காரணம் ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமத்தை திருநாமமாகவே பாராயணம் செய்தால் அது திருநாமாகவே தெரியும். அதே சமயம் அதன் அர்த்தம் தெரிந்து பொருள் புரிந்து பாராயணம் செய்தால் அதன் உள்ளர்ந்த அர்த்தமும் அதில் பொதிந்துள்ள பொருள் மிக ஏராளம். அதை பாராயணம் செய்ய செய்ய அதன் ...

மாத்ருகாவர்ணரூபிணி

Image
 #மாத்ருகாவர்ணரூபிணி மாத்ருகா வர்ண ரூபிணி  (Matruka Varna Roopini) என்பது #லலிதாசஹஸ்ரநாமத்தின்577-வது நாமமாகும்.  இது அன்னை பராசக்தியை, சமஸ்கிருத மொழியின் 51 அக்ஷரங்கள்  (அ முதல் க்ஷ வரை) எனப்படும் மந்திர எழுத்துக்களின் வடிவமாக, பிரபஞ்சத்தின் ஆதார சக்தியாக வணங்கும் பொருளைக் குறிக்கிறது.  முக்கிய விளக்கங்கள்: பொருள்: 'மாத்ருகா' என்றால் எழுத்துக்கள்/அன்னை,  'வர்ண' என்றால் நிறம்/எழுத்து, 'ரூபிணி' என்றால் வடிவத்தைக் கொண்டவள். "அ" முதல் "க்ஷ" வரையிலான எழுத்துக்களைத் தன் வடிவமாகக் கொண்டவள் என்று பொருள். அக்ஷர தேவதை:  51 மாத்ருகா அக்ஷரங்களும் (உயிரெழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்கள்) அன்னை பராசக்தியின் சூட்சும வடிவமாகவே கருதப்படுகின்றன. பிரபஞ்ச ஆதாரம்:  அன்னை எழுத்துக்களாகவும்,  அந்த எழுத்துக்களால் உண்டாகும் மந்திரங்களாகவும், ஞானத்தின் மூலமாகவும் திகழ்கிறாள். மந்த்ர மாத்ருகா: அம்பிகையை எழுத்துக்களால் கோர்க்கப்பட்ட பூ மாலையாக  (மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம்) போற்றுவர்.  ஒவ்வொரு எழுத்தும், சொல்லும், மந்திரமும் அம்பிகையின் சக்தியால் உருவ...

மாத்ருகாஅக்ஷ்ரங்கள்

Image
 நேற்றைய பதிவில் 51சக்தி பீடங்கள். இன்றைய பதிவு ஏன் 51சக்திபீடங்கள் அவ்வாறு இல்லாமல் அவை 50 அல்லது 52ஆக இருக்கலாமே என்பதற்கு சான்றாக இன்றும் மற்றும் நாளைய பதிவகள் இருக்கும்.  எதுவும் காரணம் இல்லாமல் நடப்பத்தில்லை எல்லாவற்றிற்க்கும் காரணம் மற்றும் காரியம் உண்டு என்பது நிதர்சனமான உண்மை. #மாத்ருகாஅக்ஷ்ரங்கள்  (Matruka Aksharas) என்பது  சம்ஸ்கிருத மொழியின் #அமுதல்க்ஷ வரையிலான  51 உயிர் மற்றும் மெய் எழுத்துக்களைக் குறிக்கும்.  இவை தேவியின் வாக்குகளாகவும்,  அகண்ட பாரதத்தில் உள்ள 51 சக்தி பீடங்களாகவும் போற்றப் படுகின்றன. சிவபெருமானின் உடுக்கையில் இருந்து தோன்றிய இந்த அட்சரங்கள், மனித உடலில் ஆறு ஆக்ஞா சக்கரங்களில் உள்ள சக்தியை பிரதிபலிக்கின்றன.  மாத்ருகா அட்சரங்கள் 51  (அம் முதல் க்ஷம் வரை): உயிரெழுத்துகள் (16):  அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ரு, ரூ, _லு, _லூ, ஏ, ஐ, ஓ, ஔ, அம், அஹ் மெய்யெழுத்துகள் (35): க-வர்ணம், ச-வர்ணம், ட-வர்ணம், த-வர்ணம், ப-வர்ணம்  (25 எழுத்துக்கள்)  மற்றும்  ய, ர, ல, வ, ஷ, ஸ, ஹ, ள, க்ஷ  முக்கிய தகவல்கள்: அட்சர சுந்தர...

51சக்திபீடம்உருவானவிதம்

Image
 #51சக்திபீடம்உருவானவிதம் தட்சனின் யாகத்தில் சிவனை அவமதித்ததால் கோபமுற்று தாட்சாயிணி (பார்வதி) தீக்குளித்த பின்,  அவரது உடலை சிவன் சுமந்து தாண்டவம் ஆடியபோது,  விஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தால் அந்த உடலை 51 துண்டுகளாக வெட்டினார்.  இந்த உடல் பாகங்கள் இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு இடங்களில் விழுந்து, சக்தி பீடங்களாக மாறின.  51 சக்தி பீடம் உருவான வரலாறு: தாட்சாயிணியின் தியாகம்:  தட்சன் நடத்திய யாகத்தில் சிவபெருமானுக்கு அவமரியாதை செய்ததால், பார்வதி தேவி (தாட்சாயிணி) யாககுண்டத்தில் குதித்து உயிர்நீத்தார். சிவனின் தாண்டவம்:  மனைவி பிரிவால் துயருற்ற சிவன், தாட்சாயிணியின் உடலை சுமந்து கொண்டு பிரபஞ்சம் முழுவதும் தாண்டவம் (அழித்தல் நடனம்) ஆடினார். இதனால் உலகம் அழியும் அபாயம் ஏற்பட்டது. விஷ்ணுவின் தலையீடு:  சிவனின் கோபத்தைத் தணித்து உலகைக் காக்க, மகாவிஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தைப் பயன்படுத்தி, தாட்சாயிணியின் உடலை  51 துண்டுகளாக வெட்டினார். சக்தி பீடங்கள் உருவாக்கம்: தேவியின் உடல் பாகங்கள், ஆபரணங்கள் மற்றும்  ஆடை ஆகியவை இந்திய துணைக்கண்டத்தின்  வ...

ஶ்ரீசக்ரத்தின்நான்காவதுசக்கரம்

Image
 #ஶ்ரீசக்ரத்தின்நான்காவதுசக்கரம் #சர்வசௌபாக்கியதாயகசக்கரம் இதில் 14முக்கோணங்கள்  கீழ் ஏழு ,மேல் ஏழு எனப்படும் பதினான்கு புவனங்களை குறிக்கிறது. 14தேவிகள் அடியிலிருந்து வலமிருந்து இடமாக,அதாவது எதிர்கடிகார திசைகளில் ஓவ்வொரு முக்கோணத்திலும் ஓவ்வொருவராக வாசம் செய்கிறார்கள். இவர்களை நான் வணங்குகிறேன். சர்வசம்க்ஷோபினி தேவி - அனைவரையும் கிளர்தெழச் செய்பவள். சர்வவித்ராவினி தேவி - அனைத்தையும் திரவமாக்குபவள்/வெள்ளத்தில் மூழ்கடிப்பவள். சர்வ ஆகர்ஷினி தேவி - அனைவரையும் கவர்பவள். சர்வாஹ்லாதினி தேவி - அனைவரையும் மகிழ்ப்பவள் சர்வசம்மோஹினி தேவி - அனைவரையும் மயங்கச் செய்பவள். சர்வஸ்தம்பினி தேவி - அனைத்து இயக்கங்களையும் தடுக்கக்கூடியவள். சராவஜ்ரும்பினி தேவி - அனைத்தையும் ரசிப்பவள்/மகிழ்விப்பவள். சர்வவசங்கரி  தேவி - அனைத்தையும் தம் வசம் செய்துக் கொள்பவள். சர்வரஞ்சனி தேவி - அனைத்தும் ரசிப்பவள் சர்வோன்மாதினி - அனைவரையும் தம் வசம் செய்பவள். சர்வார்த்த சாதக தேவி - அனைத்தையும் பூர்த்தி செய்பவள். சர்வசம்பத்திப்பூர்ணி - அனைத்தையும் அனைத்து வகை செல்வங்களால் நிரப்புபவள். சர்வமந்த்ரமயி - அனைத்து மந்திர...

சர்வசௌபாக்கியதியகசக்கரம்

Image
 நான்காம் ஆவரணம் #சர்வசௌபாக்கியதியகசக்கரம் சர்வ சௌபாக்கியதாயக - எல்லா அதிஷ்டங்களையும் தரும் - சக்கரம் - 14முக்கேணங்கள் கொண்டது. இதில் இரு பெரிய முக்கோணங்கள் உள்ளன.  இதில் மேல் நோக்கி முக்கோணம் ஆண்மையின் ஆற்றலான சிவனையும் கீழாநோக்கியுள்ளது பெணாமையின் ஆற்றலான சக்தியையும் குறிக்கும். மேலும் இவை தன்னக்கத்தே வேளிபுறமான 14முக்கோணங்கள் கொண்டதாகவும் உள்ளன. இது சுபங்களையும், அதிஷ்டங்களையும் அருளுவதைக் குறிக்கும். இந்த முக்கோணங்கள் நம் ஆசைகளை நிறைவேற்றவும், வாழ்க்கை ஆனந்தமயமாக இருக்க நாம் கைவிட வேண்டிய அல்லது முற்றிலும் ஒதுக்க வேண்டியவற்றைக் குறிக்கின்றன. கிளர்ச்சி(Rebellion) கவர்ச்சி(attraction) உற்சாகம்(Delight) மாயை(Liberation) அவசரகதியின்மை/கட்டுப்பாடு(control) ஆனந்தம்(Pleasure) போதை(Intoxication) ஆசையின் சாதனைகள்(Accomplishments of desire) ஆடம்பரம்(Luxury) மந்திரம்(Mantra) இருமையை அழித்தல் (Destruction of duality) ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கிறது.  இதிலுள்ள தெய்வங்கள் தங்களின் ஆசியால் இயற்கையை நம்முடன் ஒருங்கிணைந்து நமக்கு உகந்ததாக மாற்றுவதால் நம்மை நம் எதிரிகளிடமிருந்து பாதுகா...

அண்டமேபிண்டம்

Image
நேற்றைய பதிவில் #அண்டமேபிண்டம் என கண்டோம். அது எவ்வாறு ?. ஶ்ரீசக்ரத்தில் மொத்தம்  ஓம்பது கோணம். அதில் 5கோணம் கீழ் நோக்கியும்  மற்றும்  4முக்கோணம் மேல் நோக்கியும் காணப்படும். அதில் கீழ்நோக்கி ஐந்து முக்கோணம் காமசக்தி/யோனி சக்தியும் எனவும் மேல்நோக்கி சக்தி  ஞானசக்தி/சிவனோடு சக்தியை குறிக்கும். இவைகளின் இணைவே  #சிவசக்திஐக்கிய சொரூபமாக  ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம 999திருநாமம் குறிக்கிறது. #சிவசக்தையக்கியசொரூபிணி. அதுவே பிந்து ஸ்தானம். ஶ்ரீசக்ரத்தின் மையப்பகுதி. அம்பாள்  நமது உடலில் குண்டலி சக்தியாக மூலதாரத்தில் பிறப்பு உறுப்பு பின்புறம் மூலாதாரத்தில் உறங்கிறாள் என ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமம் கூறுகிறது. அந்த மூலாதாரத்தில் உள்ள குண்டலி சக்தி மேல் எழுப்பி ஆறு சக்கரங்களை கடந்து சஹஸ்ராத்தை அடையும் போது சிவனுடன் சக்தி ஐக்கியம் ஆகிறாள் என்கிறது ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமம். எப்போது சிவனுடன் சக்தி ஐக்கியம் ஆகிறாளோ அப்போது அவர்களுக்குள் ஆனந்த பெருக்கடுக்கும் என்கிறது புராணங்கள். இதற்கு உதாரணமாக #செங்கனூரில் அமைந்து இருக்கும் சிவன் கோவிலில் வீற்றிருக்கும் #அம்பாளுக்கு #மூன்று மாதங்களு...

அண்டமேபிண்டம்அதுஎவ்வாறு

Image
 #அண்டமேபிண்டம்அதுஎவ்வாறு ?. அண்டத்தில் எது உள்ளதோ அது பிண்டத்திலும் உள்ளது. அண்டத்தில் மேலே ஆகாயம் கீழே பூமி இடைபட்ட பகுதியில்  நீர் நெருப்பு மற்றும் காற்று. பிண்டத்தில் நமது  தலை ஆகாயம் கால் பூமி இடைபட்ட பகுதி  நீர்  அதற்கு மேலே நெருப்பு  அதற்கு மேலே காற்று. பிண்டத்தில் எதை நிறைக்கிறோமோ அது அண்டத்தில் பிரதிபலித்து  அதாவது  பிரபஞ்சத்தில் பிரதிபலித்து அது செயாலாகிறது. இதை தான் எண்ணமே செயலாக உருபெறுகிறது. இதை தான் வேதத்தில்  #ததாஸ்துததாஸ்து என்கிறார்கள். ததாஸ்து (Tathastu) என்பது #அப்படியேஆகட்டும்"  அல்லது  #விரும்பியதுகிடைக்கட்டும்"  என்று பொருள்படும்  ஒரு சக்திவாய்ந்த சமஸ்கிருத வார்த்தையாகும்.  இது ஒரு #ஆசீர்வாதம்  அல்லது  இறைவனின் ஒப்புதலைக் குறிக்கிறது;  நல்ல விஷயங்களை எப்போதும்  பேச வேண்டும்,  அதுவே வாழ்க்கையில் நடக்கும் என்பதை இது உணர்த்துகிறது. ததாஸ்து-வின் முக்கிய அம்சங்கள்: பொருள்:  'ததா' (அப்படியே) +  'அஸ்து' (ஆகட்டும்). பயன்பாடு:  மந்திரங்கள்  அல்லது  பிரார்த...

சர்வ சம்க்ஷோபன

Image
மூன்றாவது ஆவரணம்/சக்கரம் மூன்றாவது ஆவரணம்(நிலை/அடைப்பு). சர்வ சம்க்ஷோபன   (அனைத்தும் கிளர்ச்சியூட்டும்) சக்கரம் - எட்டு தாமரை இதழ் கொண்ட வட்ட வடிவமானது. இந்த 8இதழ்களுடன் கூடிய தாமரையானது,ஆன்மீக விழிப்புணர்வின் ஆரம்ப நிலையைக் குறிப்பதுடன் நம் செயல்களைக் கட்டுபடுத்துகிறது. இது  பேச்சு(speech) எதையும் உள்வாங்குதல்(Grasping). இயக்கம் (movement) வெளியேற்றுதல்(Excreton). மகிழ்வுருதல்(Enjoyment) கவர்ச்சி(Attraction). புரட்சி(Revolution) சமநிலை(Equanimity) ஆகிய நம் செயல்களைக் கட்டுபடுத்துக்கிறது. இதிலுள்ள  தேவிகள் மூலதெய்வமான லலிதா பரமேஸ்வரியின் சக்தி/ஆயுதங்களான சாட்டை,அங்குசம்,வில் மற்றும் 5அம்புகள்க் குறிக்கின்றன. இதில் 8தேவிகளை வணங்குகிறேன். அனங்ககுசுமே - அங்கமற்ற கண்ணுக்குத் தெரியாத ஸ்வரூபம். அனங்கமேகலே - எல்லையற்றவள் அனங்கமதனே - எல்லையற்ற மகிழ்ச்சியுடையவள் அனங்கமதனாதூதரே.- எல்லையற்ற அன்புடையவள் அனங்கரேகே - எல்லையற்ற அளவீடு உடையவள் அனங்கவேகினி - எல்லையற்ற ஆற்றல் படைத்தவள் அனங்காங்குசே - எல்லையற்ற கட்டுப்பாடுடையவள்

சர்வாசபரிபூரக சக்கரம்

Image
 ஶ்ரீசக்ரத்தின் இரண்டாவது சக்கரம். #ஶ்ரீசக்ரத்தின்இரண்டாவதுசக்கரம். #சர்வாசபரிபூரக (எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும்) சக்கரம் -16 தாமரை இதழ்கள் கொண்ட வட்டம். இந்த ஆவரணம் நமது நம்பிக்கைகள் மற்றும் ஆசைகள் பூர்த்தியாவதையும்,எதிர்பார்ப்புகளையும் அடையவும்,வாழ்க்கை சமநிலையாக இருப்பதைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதிலுள்ள 16தத்துவங்களாவன நம் உடல் சம்பந்தபட்ட 5ஞானேநாதிரியங்களும் ,5கர்மேந்திரியங்களும்(மொத்தம்10),பஞ்சபூதங்களும்(5) இவையனைத்தையும் வழி நடத்தும் நம் மனதும் ஆகும். நாம் வாழாவில் நிறைவுடன் இருக்க,இவை உதவுக்கின்றன. இச்சக்கரத்தில் வாசம் செய்யும் 16தேவிகளை வணங்கிறேன். காமகர்க்ஷினி -  போரார்வத்தின் சக்தியைக் கவர்பவள்/காம சக்தி/இனபெருக்கம் வளர்ப்பவள். புத்தியாகர்ஷனி - பாகுபாடு/முடிவு எடுக்கும் திறனை ஈர்ப்பவள். அஹங்காராகர்கர்ஷினி - அகந்தையின் சக்தியைக் கவர்பவள். சப்தாகர்ஷினி - நல்ல ஒலியால் கவரப்படுவள்/ஓசை கேட்கும் திறனை ஈர்ப்பவள். ஸ்பர்ஷர்கர்ஷினி - நல்ல தொடுதலால் ஈர்க்கபடுபவள்/தொடும் சக்தியை ஈர்ப்பவள். ரூபாகர்ஷனி - நல்ல உருவத்தாதல் கவரப்படுப்பவள்/உருவ/பார்வை சக்தியை ஈர்ப்பவள். ரஸாகர்...

அம்பாளுடையவர்ணம்

Image
 #அம்பாளுடையவர்ணம் ,  ஸ்ரீ சக்ரத்திலே ஹிரண்யவர்ணாம் என்றுதானே சொல்லியிருக்கு"*- பெரியவா     அப்பய்ய குப்புசாமி என்பவர் 1974ம் ஆண்டில் ஒரு நாள்  பெரியவாளை காஞ்சியில் தரிசித்தபோது,  பெரியவா அவரிடம் "பகவத் பாதாசார்யாள் இயற்றிய ஸௌந்தர்யலஹரியை அதற்கான சமஸ்கிருத உரைகளுடன் இந்தி, தமிழ், ஆங்கிலப் பொருள் விளக்கம், மற்றும் அதன் பிரயோகம் இவைகளுடன் யந்திரம் முதலான தகவல்களுடன் பிரசுரிக்க வேண்டும் என்றும் இப்போதுதான் நீ ரிடையர் ஆயிட்டியே, இதைப் பண்ணேன் என்று சொன்னார்.  மாம்பலத்திலே இதுக்கு முன்னாலே கணேஷ் அண்ட் கோ போட்ட இதுமாதிரியான புஸ்தகம் இப்போ கிடைக்கலையாம்" என்றார் பெரியவா. "எனக்கு இதைச் செய்ய சமஸ்கிருத ஞானம் இல்லையே" என்று இவர் தயங்கினார். "உனக்கிருக்கிற ஞானம் போதும், திருச்சிராப்பள்ளியிலே நிறைய பண்டிதர்கள் இருக்கா அவாளைக் கேட்டுக்கோ" என்று பெரிய பொறுப்பிற்கு அருட்கட்டளையிட்டு அனுப்பிவிட்டார். இரண்டு ஆண்டுகள் திரு குப்புசாமி முயன்று பல நூல் நிலையங் களுக்குக் கடிதம் எழுதி சௌந்தர்யலஹரியின் உரைகளின் பிரதியைப் பெற்றும்,  பல சமஸ்கிருத வித்வான்களின் உதவியோட...

அபிராமி அந்தாதி பாடல்கள்

Image
அபிராமி அந்தாதி பாடல்கள் கணபதி காப்பு தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே. 100 பாடல்களும், அதன் ஆன்மிக பயன்களும் ஞானமும் நல் வித்தையும் பெற உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே பிரிந்தவர் ஒன்று சேர துணையும் தொழுந்தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங் கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங்குசமும் கையில் அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே குடும்பக்கவலையிலிருந்து விடுபட அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்து கொண்டு செறிந்தேன்! உனது திருவடிக்கே திருவே வெருவிப் பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால் மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே உயர்பதவிகளை அடைய மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல் பனித...

சௌந்தயலஹரி 54வது ஸ்லோகம்.

Image
 சௌந்தயலஹரி 54வது ஸ்லோகம். பவித்ரீகர்த்தும் ந: பசுபதிபராதீனஹதயே  தயாமித்ரைர்நேத்ரைரருணத்வலஷ்யாமருசிபி: .  னத ஷோணோ கங்கா தபனதனயேதி த்ருவமமும்  த்ரயாணாம் தீர்த்தானாமுபநயசி சம்பேதமனகம் . சௌந்தர்ய லஹரி 54-வது ஸ்லோகம், தேவியின் கண்களை மூன்று புண்ணிய நதிகளின் (கங்கை, யமுனை, சோனை) சங்கமத்திற்கு ஒப்பிட்டு,  அந்த கருணைக்கண்கள் பக்தர்களின் பாவங்களைப் போக்கி புனிதப்படுத்துவதாக விவரிக்கிறது. சிவனிடம் மனதை நிலைநிறுத்திய அம்பிகையே!  உமது சிவந்த, வெண்மையான,  கரிய கண்களின் பார்வை,  சோணை, கங்கை, யமுனை சங்கமம் போல, எம்மை புனிதமாக்குகிறது.  படைப்புத் தொழில் புரியும் பிரம்மா,  காக்கும் விஷ்ணு,  அழிக்கும் ருத்ரன் ஆகியோரைத்  தன் வசப்படுத்திய சிவபெருமானின் இதயத்தில் இருப்பவளே! உன் கருணைமிக்க கண்கள்  மூவகை நிறங்களைக் (சிவப்பு-சோணை,  வெள்ளை-கங்கை,  கருப்பு-யமுனை)  கொண்டு, அந்த மூன்று புனித நதிகளின் சங்கமம் போலக் காட்சி தருகின்றன.  கங்கை, யமுனை, சோனை நதிகளில் நீராடினால் பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை.  அதேபோல், உமது திருக்...

சௌந்தயலஹரி 53வது ஸ்லோகம்

Image
 சௌந்தயலஹரி 53வது ஸ்லோகம் . இந்த ஸ்லோகமும் அடுத்து வருகிற இரு ஸ்லோகங்களும் அம்பாளின் நேத்ர த்ரிவர்ண அழகை விவரிக்கிறது. இந்த பதிவு என்ன காரணம். ஶ்ரீசக்ரத்தின் முதலாவது சக்கரத்தில் மூன்று சக்கரங்கள் என பதிவிட்டு இருந்தேன். அதில் குறிப்பிட்ட வர்ணங்கள் போல் அம்பாளின் நேத்ரங்களும் த்ரி வர்ணங்கள் என ஆதிசங்கர பகவத்பாதாள் சௌந்தயலஹரி ஸ்லோகம் 53 மற்றும் 54வது ஸ்லோகங்களில் குறிப்பிடுகிறார். அதன் தொடர்பை விளக்கவே இந்த இரு ஸ்லோகங்களின் பொருளுரை. #சகலகாரியங்களும்வெற்றிபெற. தீபம் ஏற்றி நல்லது கெட்டது தெரிய பரகாச மாக தீபம் எரிந்தால் நல்லது. பீஜம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் விபக்த-த்ரைவர்ண்யம் வ்யதிகரித-லீலாஞ்ஜந-தயா விபாதி த்வந்நேத்ர-த்ரிதய-மித-மீஸாந-தயிதே புந: ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிண ஹரி-ருத்ரா-நுபரதாந் ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணாநாம் த்ரய்மிவ முக்குணங்கள் படைத்த கண்கள்- தேவி தோன்ற, உலகையாள  (தமிழ்) வரிவிழிச்  செம்மை  வெண்மை  வனப்புறு கருமை மூன்றும் எரிதெறு கற்ப காலத்து  இறந்த முப்பொருளும் தோன்றும் கருஎனக் குணங்கள்  மூன்றின் காரணம் என்னப் பெற்றால் அரு மறைப் பொருளே உன்றன் அ...

10முத்ராதேவிகள்

Image
முதலாவது சக்கரத்தின் உள்புற சக்கரத்தில் உறையும் சக்திகள். #ஶ்ரீதேவிகட்கமாலாஸ்தோத்திரம். தாமசக்குணத்தைக் குறிக்கும் உள்புற மஞ்சள் நிற சதுரத்தின் உறையும் #10முத்ராதேவிகளை வணங்குங்கிறேன். சர்வ ஸம்க்ஷோபினி -எல்லாவற்றையும் கிளறுகிறவள்/அனைவரையும் கிளர்தெழச் செய்பவள். சர்வவித்ராவினி - அனைத்தையும் கரைப்பவள். சர்வகர்ஷினி - அனைத்தையும் கவர்பவள். சர்வசங்கரி - அனைத்தையும் கட்டுபடுத்துபவள். சர்வோன்மாதினி - அனைவரையும் பித்துப் பிடிக்கச் செய்பவளா. சர்வமஹாங்குசே - அனைவருக்கும் பெருநதெய்வமாக இருப்பவள். சர்வகேசரி - விண்வெளியில் பயணிப்பவள். சர்வபீஜே - அனைத்துக்கும் வித்தானவள்/மூலமாக இருப்பவள். சர்வயோனி - படைப்பின் இருப்பிடமாக(கருப்பையாக) இருப்பவள். #கர்பரக்ஷாம்பிகை. சர்வ த்ரிகண்டே தேவி - அனைத்தையும் மூன்றாகப் பிரிப்பவள். த்ரைலோக்ய மோகன சக்ர சுவாமினி - விழிப்பு,உறக்கம், கனவு ஆகிய மூவுலக சக்கரத்தின் தலைவியாக இருப்பவள். பிரகடயோகினி - யோகத்தில் நிபுனத்துவம் பெற்றவள்; தடைகள் இல்லாமல் தன்னை வெளிபடுத்துபவள். இச்சக்கரத்தின் முத்ரா தேவி சர்வசம்க்ஷோபினி (எல்லாவற்றையும் கிளறுகிறவள்/அனைவரையும் கிளர்ந்தெழச் செய்பவள்...

அபிராமி அந்தாதி தரும் 100 பலன்கள்

Image
 அபிராமி அந்தாதி தரும் 100 பலன்கள் : #அபிராமிஅந்தாதி  தரும் 100 பலன்கள் : 1. ஞானமும் நல்வித்தையும் கிடைக்கும். 2. பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். 3. குடும்ப பிரச்சனைகள் நீங்கும். 4. உயர் பதவிகள் கிடைக்கும். 5. மனக்கவலை தீரும். 6. மந்திர சித்தி உண்டாகும் 7. மலை போன்ற துன்பமும் பனி போல் விலகும் 8. உலக பற்றுகள் நீங்கி பக்தி பெருகும் 9. அனைத்தும் கிடைக்கும் 10. மோட்சம் கிடைக்கும் 11. இல்வாழ்க்கையில் இன்பம் ஏற்படும் 12. தியானத்தில் உயர்ந்த நிலையை பெறலாம் 13. வைராக்கிய நிலை உண்டாகும் 14.தலைமை பொறுப்பு கிடைக்கும் 15. பெரும் செல்வமும் பேரின்பமும் கிடைக்கும் 16. முக்காலத்தையும் உணரும் திறன் கிடைக்கும் 17. கன்னி பெண்களுக்கு நல்ல வரன் அமையும் 18. மரண பயம் நீங்கும் 19. பேரின்ப நிலை ஏற்படும் 20. வீடு, நிலம் உள்ளிட்ட செல்வங்கள் கிடைக்கும் 21. அம்பிகையை வழிபடாத பாவம் நீங்கும் 22. மறுபிறவி இல்லாத நிலை கிடைக்கும் 23. எப்போதும் மகிழ்ச்சி கிடைக்கும் 24. நோய்கள் நீங்கும் 25. நினைத்த காரியம் கைகூடும் 26. செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும் 27. மனநோய் நீங்கும் 28. இம்மையிலும் மறுமையிலும் இன்...

மாத்ருகா தேவிகள்

Image
 ஶ்ரீசக்ரத்தின் முதலாவது சக்கரத்தின் நடுவில் உள்ள சக்கரம். #ஶ்ரீதேவிகட்கமாலாஸ்தோத்திரம்  நடுவில் உள்ள ரஜோ குணத்தை குறிக்கும் சிவப்பு நிற சதுரத்தில் உள்ள #மாத்ருகா தேவிகளை வணங்கிறேன். ப்ராஹமி - பிரம்மிவின் சக்தியாக விளங்குபவள். மாகேஸ்வரி - சிவனின் சக்தியாக விளங்குபவள். கௌமாரி - சுப்ரமண்ய சக்தியாக விளங்குபவள். வைஷ்ணவி - விஷ்ணுவின் சக்தியாக விளங்குபவள். வாராஹி - வராஹத்தின் சக்தியாக விளங்குபவள். மாகேந்திரி - தேவந்திரனின் சக்தி, சொர்க்கத்தின் கடவுளாக விளங்குபவள். சாமுண்டா - சண்டனையும் முண்டனையும் கொன்ற தெய்வம். மஹாலெக்ஷ்மி - இலட்சுமி தேவி

10சித்தி தேவதகளை

Image
 ஶ்ரீசக்ரத்தின்முதலாவது சக்கரம் முதலாவது அடுக்கு. ஶ்ரீதேவிகட்கமாலா ஸ்தோத்திரம் #ஶ்ரீதேவிகட்கமாலாஸ்தோத்திரம்  #சாத்வீககுணத்தைக் குறிக்கும் வெள்ளைசுவரைக் காக்கும்  10சித்தி தேவதகளை வணங்கிறேன்.. 1.அணிமாசித்தே - கண்ணுக்குத் தேரியாதவராக மாறும் சக்தி படைத்தவள். 2 .லஹிமாசித்தே - ஒளியாகி பறந்து செல்லும் சக்தி படைத்தவள். 3.மஹிமாசித்தே - தன் உடலின் அளவை கூட்டவோ குறைக்கவோ வல்லவள். 4.ஈசித்வசித்தே - படைப்புக் கட்டுபாட்டைக் கொண்டவள். 5.வசித்வசித்தே - வசீகரமான கட்டளையிடக்கூடியவள். 6.ப்ரகாம்யசித்தே- தன் ஆசைகளை அனைத்தையும் உணரக்கூடியவள். 7.புக்தி சித்தே - விரும்பிய அனைத்தையும் அனுப்பவிக்ககூடியவள். 8.இச்சாசித்தே - அனைத்தையும் விரும்புபவள். 9.ப்ராப்சித்தே - விரும்பிய அனைத்தையும் ஆடையக்கூடியவள். 10.ஸர்வகாமசித்தே - எல்லா ஆசைகளையும் நமக்கு நிறைவேற்றுபவள்.