Posts

Showing posts from July, 2025

அபிராமிஅந்தாதிபாடல்# - 34

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்# - 34 சிறந்த நிலங்கள் கிடைக்கும் வந்தே  சரணம் புகும்  அடியாருக்கு,  வானுலகம் தந்தே பரிவோடு  தான்போய் இருக்கும்,  சதுர்முகமும் பைந்தேன்  அலங்கல் பருமணி  ஆகமும், பாகமும்  பொன் செந்தேன் மலரும்,  அலர்கதிர் ஞாயிறும்  திங்களுமே பொருள்: அன்னை அபிராமி எதிலெல்லாம் இருக்கிறாள் என்று பட்டர் இப்பாடலில் கூறுகிறார். அவள் லோகமாதா சகலுத்திலும் வியாபித்து இருப்பவள். சிருஷ்டிக்கு அவள் காரண பிந்து. அதனாலேயே பாரதி காக்கைச்  சிறகினிலே நந்தலாலா- நின்றன்  கரியநிறந் தோன்றுதையே  நந்தலாலா;  (கண்ணணை - காளியை) 2. பார்க்கு மரங்கலெல்லாம்  நந்தலாலா - நின்றன் பச்சைநிறந் தோன்றுதையே  (அன்னை மீனாக்ஷி). நந்தலாலா 1. சதுர்முகனின் (பிரம்மா) படைப்புத்தொழில் -  #ஸ்ருஷ்டிகர்த்ரீபிரம்மரூபா#என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது. 2. தேன் சிந்தும் மலர்கள் நிறைந்த மாலை, துளசி, அணிகலன்கள் அணிந்தவரான திருமாலின் மனத்தில் -  அவர் செய்யும் காப்புதொழில் -  #கோப்த்ரீகோவிந்தரூபிணி# என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது. 3. பாகமும்...

கோவிலைநிர்மாணிப்பதற்கான மேலாண்மைகொள்கை#.

Image
 முப்பாட்டன் இராஜராஜன் மற்றும் இராஜேந்திர சோழன் ஏன் கோவிலை மையமாக வைத்து நகரத்தை அமைத்தான்?. #கோவிலைநிர்மாணிப்பதற்கான மேலாண்மைகொள்கை#. #ManagementPrincipleconstructingKovil. மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன்,  கட்டுமான பணிக்கு  அந்த ஊரை சுற்றி உள்ள  கட்டுமான கலைஞர்கள்,  சிற்ப கலைஞர்கள்,  கல் தச்சர்கள்,  கட்டுமான பொருட்களான செங்கல்,  சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர்,  அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க,  ஓவிய கலைஞர்கள்,  இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு,  அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை. கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள்,  குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு…  அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம்,  பண்டம் மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம். கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள்,  அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம்…  இதனால்  கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள். நைவேத்தியம் ...

கர்மா

Image
 சில சில விஷயங்கள் ஏன் நடக்கிறது என்ற கேள்விக்கான பதில். இதை நாள்வரை புரியாமல் இருந்தது தற்போது அதைப்பற்றி பதிவை பதிவிட்டு வருகிறேன் . அதற்கு காரணம் கர்மா என்பதே ஆகும் . கர்மா பற்றியும் பல விஷயங்களை பதிவிட்டு வருகிறேன். தினசரி அம்பாளுக்கும் ,மேருவிற்கும் லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி ,  அபிராமி அந்தாதி மற்றும் தேவிகட்கமாலா பாராயணம் செய்வது வழக்கம். அவ்வாறு நேற்று பூஜை செய்துக் கொண்டு இருக்கும் போது , எனது மச்சினியும் ஷெட்டகரும் கேத்தாரிநாத் முக்திநாத் மற்றும் கைலாஷ் யாத்திரை முடித்து, இன்று எனது வீட்டிற்கு வருகை தந்தனர். அவர்கள் வரும் சமயம் ஆராத்தி காட்டிக்கொண்டு இருந்தேன். அவர்கள் உள்ளே நுழைவதற்கும் கற்பூர ஆராத்தி எடுத்துச் செல்வதற்கும் சரியாக இருந்தது. அவர்கள் வந்த பிறகு தான் தெரிந்தது  அவர்கள் சாலகிரமம் , முக்திநாத் மற்றும் மானசரோவர்  தீர்த்தங்கள் மற்றும் மானசரோவரில் எடுத்த புனித  கல்லை  கொடுப்பதற்காக வந்துள்ளனர் என்று தெரிந்தது. பூஜை முடித்து கற்பூர ஹாரத்தி போது இவை கிடைக்கப்பெற்றேன். பூஜை செய்த போது இவைகள் கிடைக்கப்பெற்றது, நான் செய்த பாக்கியம் என க...

கர்மா பற்றி எனது ஜோதிட நண்பரின் அனுபவ பதிவு

Image
 கர்மா பற்றி எனது ஜோதிட நண்பர் சதீஸ்குமாரின் அவர்களின் பதிவு. இதில் அவரவர் தனது அனுபவத்தை பதிவாக பதிவிடுகின்றனர். கர்மா என்றால் என்ன,,என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்,,, பிராப்த கர்மா  சஞ்சிதா கர்மா,, போன  ஜென்ம கர்மா  இந்த ஜென்ம கர்மா,,,  அடுத்த ஜென்ம கர்மா,,  இப்படி நிறைய சொல்லலாம்,, ஏனென்றால் நாம் போன ஜென்மத்துலயும்,,,, அடுத்த ஜென்மத்துலயும்,,, என்ன செஞ்சோம் செய்ய போறோம் நமக்கே தெரியாது,, ஆக கர்மா பத்தி எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும்,,,,,, மனித பிறவி எடுத்தால் தப்பு செய்யாமல் வாழ முடியாது என்றே ஆகிவிட்டது,,, பிறவி பெருங்கடல் நீந்தி அடுத்து என்ன பிறவி எடுக்க போறோமோ தெரியாது,,,, ஆனால் மனித பிறவி அரிய பிறவி அந்த பிறவியிலும் நாம் தவறு செய்து கர்மாவை அனுபவிக்கிறோம் என்பதே உண்மை,,, ,ஜோதிடத்தில் கூட 5ஆம் வீடு  பூர்வ புண்ணியம் என்று சொல்வோம் அது கூட பலருக்கும் கெட்டு தான் இருக்கு,,அது போகட்டும்,,, .கர்மா என்றால் நோய் தான், ,நமது ,கர்மவினை தான் நோய் பிறப்பு அல்லவா,, வேறொன்றுமில்லை சனி கர்மா காரஹன், சனி என்றால்  pain வலி,  தண்டனை,,  நம் ...

#அபிராமிஅந்தாதிபாடல்# - 33

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்# - 33 இறக்கும் தருவாயிலும் நல்ல நினைவிருக்கும் இழைக்கும் வினைவழியே, அடும்காலன்  எனை நடுங்க  அழைக்கும் பொழுது   அஞ்சல் என்பாய்,  அத்தர் சித்தமெல்லாம் குழைக்கும் களப  குவிமுலையாமளை  கோமளமே உழைக்கும் பொழுது  உன்னையே அன்னையே  என்பன் ஓடிவந்தே  அத்தர் - சிவபெருமான். சிவபெருமானின் சித்தம் அனைத்தையும் தன்வயத்தில் வைத்திருக்கும்,  சித்தம் எல்லாம் சிவமயமே, அம்பாளின் சித்ததில் இருப்பவர் சிவப்பெருமான். கொங்கை மலை கொண்டிறைவர் வலியநெஞ்சை,  நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி" (42) என்பர்  பின்;  “பாகனகங்குழை வித்த பவித்ர பயோதரி" (தக்க, 74).  யாமளைக் கோமளம்:  “கோமள யாமளைக் கொம்பு” (7). கோமளம்-மெல்லியல், 'கோமலாகாரா',கோமலாங்கி'  (லலிதா, 437, 721), அன்னையே என்பதனோடு சரணம் என்று ஒரு சொல்லை வருவித்து முடிக்க. அன்னையின் அழகை வர்ணிக்கிறார் பட்டர். சந்தனக் குவியல் போன்ற முலைகளை கொண்டிருக்கும் அழகிய இளைய பெண்ணே, நான் செய்த தீவினையால்,  கர்மா என்பதை தீவினை என்கிறார். என் இறுதி காலத்தில்,  கொடிய...

கர்மாவை கழிப்பது எவ்வாறு?.

Image
 கர்மாவை  கழிப்பது எவ்வாறு?. ஒருவருடைய கர்மாவை மாற்ற மற்றவருக்கு அதிகாரம் கிடையாது. ஆனால், தொடர்ச்சியான ஜெபங்கள் மற்றும் தவங்கள் மூலம் நீங்கள் முழுமையாக முயற்சித்தால் நிச்சயம் நூறு சதவிதம் கர்மாவை மாற்றி வெற்றி பெறலாம்.  உதாரணம்:  குடி பழக்கம் என்பதும் ஒரு கர்மாவின் செயல் தான்,  நீங்கள் விடுபட முயற்சிக்காத வரை உங்களால் விடுபட முடியாது.  உதாரணம்:  "மந்திரத்தால் மாங்காய் அடிக்க முடியாது"  என்பது பழமொழி அதற்கு அர்த்தம் மந்திரம் பொய் என்பது இல்லை,  மாமரத்தின் மின்காந்த சக்திக்கு  முன் தீய மந்திரத்தின் அழிக்கும் சக்தி வேலை செய்யாது என்பது தான் உண்மை,  அதனால் தான் இன்றும் மாயிலைகளை கோவில்,  யாகம், வீட்டுவாசல் போன்ற  நல்ல விஷயங்களுக்கு தீய சக்தி நெருங்காமல் இருக்க  #ANTIBIOTIC# என்ற பெயரில் பயன்படுத்தபடுகின்றது,  ஆகையால் மாவிலையின் அருகில் தீய மந்திரத்தின் சக்தி 0% ஆகவும், நல்ல மந்திரத்தின் சக்தி 100% ஆகவும் வேலை செய்கின்றது, ஒரு மந்திர வார்த்தைகளால் எவ்வாறு நம் வாழ்க்கையை மாற்றி சந்தோஷத்தை கொடுக்க முடியும். உதாரணம்:...

கர்மாவின் வகைகள்

Image
 கர்மாவின் வகைகள் யாவை இந்து தத்துவத்தில் ஐந்து  வகையான கர்மாக்கள்... அவை நித்ய கர்மா,  நைமித்திக கர்மா,  காம்ய கர்மா,  நிஷித்த கர்மா மற்றும்  பிரயாஷ்சித்த கர்மா -  ஒன்றாக சரியான செயலுக்கான முழுமையான நெறிமுறை மற்றும் ஆன்மீக கட்டமைப்பை உருவாக்குகின்றன.  இந்த வகைப்பாடுகள் பரிந்துரைக்கப்பட்ட கடமைகள், அவ்வப்போது செய்யப்படும் கடமைகள்,  தன்னார்வ ஆசைகள், தவிர்க்க வேண்டிய செயல்கள் மற்றும் பரிகார வழிமுறைகள் மூலம் ஆன்மீக மற்றும் சமூக வாழ்க்கையை வழிநடத்த உதவுகின்றன: நித்ய கர்மா:  என்பது தினசரி கட்டாயக் கடமைகளைக் குறிக்கிறது,  அவை தவறாமல் தவறாமல் செய்யப்பட வேண்டும்.  இவை வேதங்களால் பரிந்துரைக்கப் படுகின்றன மற்றும்  குளியல் (ஸ்நானம்),  காலை மற்றும் மாலை பிரார்த்தனைகள்  (சந்தியாவந்தனம்),  வேதங்களை ஓதுதல்,  மூதாதையர் வழிபாடு,  தீப பிரசாதம்  (ஹோமா) மற்றும்  கடவுள்களை வணங்குதல் (தர்ப்பணம்)  போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது. இந்தக் கடமைகளைப் புறக்கணிப்பது பாவத்திற்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. ந...

ஆடி மாத பிறப்பு

Image
 ஆடி மாதத்தை அடிப்படையாக வைத்துதான் பல சுப நிகழ்ச்சிகளை முன்னோர்கள் நடத்தினர்.  ஆடியை கர்க டக மாதம் என்றும் அழைக்கிறார்கள். மாதங்களைப் பொறுத்தவரை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது.  இதில் தஷ்ணாயணம் புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தஷ்ணாயண காலமாகவும்,  தை முதல் ஆனி வரை உத்ராயணம் என பிரிக்கப்பட்டுள்ளது.  சூரியனின் பாவன இயக்கத்தை (வடகிழக்கு, தென்கிழக்கு) வைத்து இது வரையறுக்கப்படுகிறது. தஷ்ணாயணம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும்.  வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்த்ரீகம் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது.  பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான்.  ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது. ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன.  எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர்.  ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து ...

#அபிராமிஅந்தாதிபாடல்-32#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-32# பலன் -  துர்மரணம் வராமல் இருக்கும் ஆசைக்கடலில் அகப்பட்டு,  அருளற்ற அந்தகன்  கைப் பாசத்தில் அல்லல் பட இருந்தேனை,  நின் பாதம் என்னும் வாசக்கமலம்  தலைமேல் வலிய வைத்து  ஆண்டு கொண்ட நேசத்தை  என் சொல்லுவேன்,  ஈசர் பாகத்து நேரிழையே. பொருள்: ஈசனின் ஒரு பாகத்தில் வீற்றிருக்கும் அன்னையே,  ஈசனின் இடப்பாகம் அதாவது வாமபாகம் வீற்றிருக்கும் அன்னை அபிராமி. நான் ஆசை என்னும் பெருங்கடலில் மாட்டிக்கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்தேன்.  ஆசை என்ற சம்சார சாஹரத்தில் தத்திளித்துக்கொண்டு இருக்கிறேன். சேஷாத்ரி சுவாமிகள் கூறியது மாதிரி பிறப்பு எனும் முதல் குச்சியை நட்ட நாம். அந்த குச்சியை எதற்காக எங்கு நடவேண்டும் என தெரியாமல் மனசஞ்சலப்பட்டு கொண்டு இருக்கிறது. கருணையற்ற எமனின் பாசக்கயிற்றில் சிக்கி துன்பம் மிக கொண்டிருந்தேன்.  அதற்கு உன்னிடம் சரணாகதி என்பது ஒரே தீர்வு. அப்போது,   நின் பாதமாகிய தாமரை மலரை  என் தலைமேல் நீயாகவே  (நான் கூப்பிடாமலேயே) வைத்து என்னை ஆண்டுகொண்டாய்.  அப்படிப்பட்ட நின் நேசத்தை நான் என...

குரு என்பவர் யார்,

Image
 குரு என்பவர் யார், அவர் நம்மை எவ்வாறு செம்மைபடுத்துவார். சிஷ்யன் என்பவர் யார் என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.  குருவில் முக்கியமானவர் பலர் பார்த்தனுக்கு சாரதியாக இருந்து வழிநடத்திய பகவான் கிருஷ்ணர் சங்கரபகவத்பாதாளுக்கு புலயன் உருவில் வந்து எதை விலகச் சொல்லிகிறாய். இந்த அழியும் உடலை அல்லது அழியா நிலையில் உள்ளே இருக்கும் ஆன்மாவையா என கேள்வி எழுப்பி நல்வழி படுத்திய சிவன்பெருமான். மற்றொருவர் சுட்ட பழம் வேண்டுமா அல்லது சுடாத பழம் வேண்டுமா என ஔவையிடம் கேள்வியை எழுப்பிய ஔவைக்கு உண்மையை உணர்த்திய முருகபெருமான். இவர்களே குருசீடனுக்கு உதாரணமாக உள்ளவர்கள். குருவும் சீடனும் ஒரு மெழுகுவர்த்தி மற்றும் அதன் சுடரைப் போல ஒன்றுதான்.  சீடன் தீவிர ஆர்வமுள்ளவனாக இல்லாவிட்டால், அவனை சீடன் என்று அழைக்க முடியாது.  ஒரு குரு அன்பும் தன்னலம் அற்றவனாகவும் இல்லாவிட்டால்,  அவனை குரு என்று அழைக்க முடியாது.  உண்மை மட்டுமே யதார்த்தத்தை உருவாக்குகிறது, பொய்யை அல்ல. குரு என்பவர் ஞானம், அறிவு மற்றும் வழிகாட்டுதலை வழங்கும் ஒரு நபர். சிஷ்யன் அல்லது சீடர் என்பவர் குருவிடம் இருந்து கற்றுக்கொள்...

#அபிராமிஅந்தாதிபாடல்-31#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-31# பலன்:  மறுபிறவியில் இன்பம் அளிக்கும் உமையும்  உமையொரு பாகனும்  ஏக உருவில்  வந்திங்கு எமையும்  தமக்கு அன்பு  செய்யவைத்தார்,  இனி எண்ணுதற்கு சமையங்களும்  இல்லை, ஈன்றெடுப்பாள்  ஒரு தாயும் இல்லை அமையும்  அமையுறு தோளியர்  மேல் வைத்த ஆசையுமே பொருள்: அன்னை அபிராமி,  அவள் மறுபாகமான சிவ பெருமான், இருவரும் ஒரே உருவில், அர்த்தநாரீஸ்வர ரூபம் கொண்டு என் முன் வந்து, உமையொருபாகன் என்னை தங்களுக்கு தொண்டு செய்ய வைத்தார்கள்.  இதுவே பெரும் பாக்கியம்.  இதற்கு மேல் எனக்கு எண்ண வேறொன்றுமில்லை.  நான் வணங்கும் தெய்வம்  அன்னை அபிராமி.  என் சமயபக்ஷம் சாக்தம்  #அவர்ஒருதெய்வவழிபாட்டை# குறிப்பிடுகிறார் (சக்தி வழிபாடு,  அம்பாள் உபாசனை). அன்னை அபிராமி எனக்கு உன்னையன்றி வேறு தாயும் மற்றும் அன்னையும் இல்லை. இவர் அனைத்து பெண்களையும் அம்பாளாக அதாவது அன்னையாக பார்பதால்,வேறு எண்ணம் தோன்றுவதில்லை. இது சக்தி உபாசனையில் மிக உயர்ந்த தத்துவம். இவ்வாறு எண்ணுவதால் மூங்கில் நிற தோளுடைய மற்ற பெண்கள் மேலும் எ...

தேவியின் திருவடி தியானம். 2

Image
 தேவியின் திருவடி தியானம். தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)-2 முதல்படி பாராயணம்;  அதற்கப்புறம் ஜபம்;  பின்பு தியானம் பண்ணுவது.  அப்படி தியானம் பண்ணும் போது,  ‘பராசக்தி!  இந்த உடம்பிலிருந்து உயிர் போகும் தருணத்தில் நான் உன்னையே தியானம் பண்ணிக்கொண்டு உன்னிடமே மீண்டும் சேர்ந்து விடும்படியாக அநுக்கிரகம் செய்ய வேண்டும்’ என்று பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.  இப்படி ஒவ்வொரு நாளும் அவளுடைய சரணாரவிந்தத்தைப் பிரார்த்தித்து வேண்டிக்கொண்டால், உயிர் போகும் தருணத்திலும் அவனுடைய கடாக்ஷத்தினால் அவளுடைய தியானம் வரும். இந்த உடல் போனபின் இன்னோர் உடல் வராமல் அவளிடம் இரண்டறக் கலந்து சம்ஸாரத்திலிருந்து விடுபட்டுப் பேரானந்த மயமாகி விடலாம். தேவியும் குருவும் ஒன்றே.  எனவே இருவரது திருவடியும் ஒன்றே.  குரு பாதுகையும் தேவி பாதுகையும் ஒன்றே.  குரு பாதுகையை சந்திர மண்டலத்தில் தியானம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம். அமிருதம் சந்திரனிலிருந்தே பொழிவதாக சாஸ்திரம். சூரியன் சுயமான பிரகாசத்தை உடையவனாக இருக்கலாம்.  நமக்கு அவன் ஒளி கொடுக்கிறான். என்றாலும்,  அவனால் ...

#அபிராமிஅந்தாதிபாடல் -30#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல் -30# பலன்:  தொடரும் துன்பம் நீங்கும் அன்றே தடுத்து  என்னை ஆண்டு கொண்டாய், கொண்டது அல்ல  என்கை நன்றே, உனக்கு?  இனி நான்  என் செயினும்,  நடுக்கடலுள் சென்றே விழினும்,  கரை ஏற்றுகை நின் திருவுளமோ ஒன்றே,  பல உருவே,  அருவே என் உமையவளே. பொருள்: அன்னையே,  என்னை அன்றொரு நாளே,  நான் பாவங்கள் செய்வதற்கு முன்பே,  தடுத்து ஆட்கொண்டாய்.  அவ்வாறு செய்யவில்லை என்றால் அது உனக்கு நல்லதாகாது. ஏனென்றால்,  கருணையே உருவான உமையவள் நீ.  இனி நான் என்ன செய்தாலும் சரி, பாவங்கள் செய்து நடுக்கடலில் வீழ்ந்தாலும்,  என்னை கரை எற்ற வேண்டியது உன் திருவுள்ளத்தின் பொறுப்பு.  ஒரு உருவமாகவும்,  அவளே ஆதிபராசக்தி பல உருவமாகவும்,  அதிலிருந்து தோன்றிய பிரம்மா/விஷ்ணு/சிவன் சரஸ்வதி/லெக்ஷ்மி/பார்வதி இவை அனைத்தும் நீ உருவமே இல்லாமலும்  லிங்கமும் ஆவுடையுமான அர்த்தநாரீஸ்வரர் தத்துவம் காட்சி அளிக்கும் அன்னையே  அனைத்துமும் நீ என பட்டர் அம்மையை நோக்கி தன்னை ஆட்கொள்ளுமாறு கோரிக்கை வைக்கிறார். அபிராமி அன்னையே ...

சகலுமும் கிருஷ்ர்ணர்ப்பம்

Image
 இங்கு சகலத்திலும் பகவன் வியாபித்து இருக்கிறான். இதை தான் அர்ஜீனனுக்கு கீதை உபதேசம் செய்யும் போது இவ்வாறு கூறுகிறார். போர் புரிய மனம் வராமல் திகைத்துத் தன்னைச் சரணடைந்த அர்ஜுனனை நோக்கிக் கண்ணன் உரைக்கின்றான்:- “அர்ஜுனா,  நீ வருந்துவது முற்றிலும் தவறு.  எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி வருந்துகின்றாயா?  அல்லது  அவர்களின் உடலைப் பற்றி வருந்துகின்றாயா இரண்டும் சரியல்ல.  ஆன்மா என்றும் அழிவற்றது.  அதைக் கத்தியால் வெட்டவும், தீயினால் எரிக்கவும் முடியாது.  உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது. நீ அழிக்காவிடினும் அது தானே அழிய வேண்டியதுதான். ஆன்மாவுக்கு ஓருடல் அழிந்ததும், மற்றோருடல் தானே வந்து சேரும். ஆன்மாவின் இயற்கையை எண்ணி உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீரவேண்டும். அச்செயல்களைச் செய்யுங்கால்,  நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம்.  அதுவும் ஈசுவரப் பிரீதிக்காகவே என்று எண்ணிச் செய்.  இதனால் ஆத்மஞானம் பெருகி, அதில் நிலைபெற்று நற்கதி அடைவாய்.  ஈசுவர பிரீதியைத் தவிர மற்ற பலனைக் கோரினால் சம்சாரக்கட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது...

#அபிராமிஅந்தாதிபாடல்-29#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-29# பலன்: எல்லா சித்திகளும் பெறலாம் சித்தியும், சித்தி தரும் தெய்வமும் ஆகி,  திகழும் பராசத்தியும்,  சத்தி தழைக்கும்  சிவமும்,  தவம் முயல்வார் முத்தியும்,  முத்திக்கு வித்தும்,  வித்தாகி முளைத்தெழுந்த புத்தியும்,  புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே. பொருள்: 8 சித்திகள் -  அஷ்ட மஹா சித்திகள்: 1. அணிமா - அணு போன்ற சிறிய உருவம் கொள்ளுதல் 2. மஹிமா - பெரிய உருவம் கொள்ளுதல் 3. கரிமா - மிக கணமான சரீரம் கொள்ளுதல் 4. லஹிமா - மிக மெல்லிய சரீரம் கொள்ளுதல் 5. ப்ராப்தி - எல்லா இடத்திற்கும் தடையின்றி சஞ்சரித்தல் 6 . ப்ராகாம்யம் - நினைத்தவற்றை பெறுதல் 7. ஈசத்வம் - அனைத்திற்கும் தலைவனாக இருத்தல். 8. வசித்வம் - அனைத்தையும் தன்வயப்படுத்துதல் இந்த 8 சித்திகளாகவும்,  இதனை அருளும் தெய்வமாகவும், பராசக்தியாகவும்,  அவளே ஆதிபராசக்தி அவளிமிடருந்து அனைத்தும் உருவாக்கம். அந்த சக்தியால் தழைத்திருக்கும் சிவமாகவும்,  சக்தி இல்லையேல் சிவமில்லை  சிவமில்லையேல் சக்தி இல்லை தவம் செய்வோர்  பெரும் முக்தியாகவும்,  முக்திக்கு வ...

அன்னைத் தெய்வம் : 2

Image
 அன்னைத் தெய்வம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி) எல்லாரையும் தழுவும் பரம மதுரமான அன்பு நமக்கு வரும். தெய்வங்களும், அவதார புருஷர்களும், மகான்களும்கூட அம்பாளை உபாஸித்து அநுக்கிரகம் பெற்றிருக்கிறார்கள்.  ஆதிசங்கர பகவத்பாதர்களும், காளிதாஸனும் அவளுடைய அநுக்கிரகத்தாலேயே விசேஷ வாக்குச் சக்தி பெற்றார்கள். திருஞானசம்பந்தருக்கு, அவளது க்ஷீரமே திவ்வியப் புலமை தந்தது. எல்லாவித இகபர நலன்களும் தருகிற அம்பிகை, விசேஷமாக வாக்குவன்மையை அருளுகிறாள். ஏனெனில், அவளே அக்ஷர ஸ்வரூபமானவள். நம் உடலின் மேல் சதையைச் சிறிது கீறிவிட்டால் – வெளியில் நாம் எத்தனை அழகாக இருந்தாலும் – உள்ளே அருவருப்புத் தருகிற வஸ்துக்களையே பார்க்கிறோம். பரமாத்மா அம்பாளாக வருகிறபோது, தரித்த சரீரமோ கருணா மயமானது. அம்பிகையாக வரும்போது, பரமாத்மா ஐம்பத்தொரு அக்ஷரங்களையே சரீரமாகத் தரித்துக் கொண்டு வருகிறது. அதனால்தான் தேவீ உபாஸகர்கள் விசேஷ வாக்கு வன்மை பெறுகிறார்கள். லோகம் முழுவதற்கும், காலம் முழுவதற்கும் தாயாக இருந்து அநுக்கிரகம் செய்கிற பராசக்தியின் கடாக்ஷம் எப்படிப்பட்டவனையும் கைதூக்கி ரக்ஷிக்கும். அந்த அம்பிகையை நாம் அன்போடு திய...

#அபிராமிஅந்தாதிபாடல்-28

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-28 பலன்: இம்மை, மறுமை இவைகளில் இன்பம் அளிக்கும் சொல்லும்  பொருளும் என,  நடமாடும் துணைவருடன் புல்லும்,  பரிமள பூங்கொடியே,  நின் புது மலர் தாள் அல்லும் பகலும்  தொழுமவர்க்கே  அழியா அரசும், செல்லும்  தவநெறியும்,  சிவலோகமும்  சித்திக்குமே பொருள்: சொல்லையும்  பொருளையும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாது.  ஒருமொழிக்கு சொல்லும் அதன் அர்த்தமும் முக்யம். மொழி தெரிந்து அதற்கு அர்த்தம் தெரியவில்லை எனில் அந்த மொழி தெரிந்து எந்த பிரஜோனமும் இல்லை. அதுபோல,  சிவபெருமானோடு கூடி நடம் புரியும் அன்னையே,  இரண்டர கலந்த உமையொருபாகன் சிதம்பரம் நடராஜரையும் மற்றும் சிவகாமசுந்தரியை குறிப்பிடுக்கிறார். #சிவகாமிஆடவந்தால்நடராஜர்# நடமாடி பார்க்கட்டுமே வாசம் வீசும் பூங்கொடி நீ.  அம்பாள் இளம் பூங்கொடி போன்றவள். உன் பாதங்கள்,  அன்றலர்ந்த புது மலர்கள்.  இதனை இரவு பகல் பாராது யார் துதிக்கிறார்களோ,  அவர்களுக்கு இப்பிறவி இன்பமாக அரச போகமும்,  இவ்வுலகை விட்டு நீங்கி முக்தி அடையும் வழியாக தவ நெறியும்,  ப...

#சகலும்உணர்ந்தவள்அம்பாள்#

Image
 #சகலும்உணர்ந்தவள்அம்பாள்# பொதுவாக எந்த காரியத்தை யார் மூலம் நடத்திக்கொள்ளலாம் என்பதை தீர்மானிப்பது அம்பாள். அவ்வாறே வாக்தேவிகளை அழைத்து தனது சிறப்புகளை வரிசைப்படுத்தச் சொல்லி உருவானதே லலிதா சஹஸ்ரநாமம்.  தன்னை பெருமையாக சொல்லுவதற்காக அல்ல.  அதை உலகறிய செய்வதே அன்னையின் நோக்கம். உருவான சஹஸ்ர நாமம் ,அது அவ்வாறாக இருந்தால் உபயோகமும் இல்லை.  அதனால் கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவரை அழைத்து. தனது பரமபக்தையான லோபமுத்ரையின் கணவனான கூருமுனி அகத்தியருக்கு உபதேசிக்கச் சொன்னவள் அம்பாள். இங்கு லோபமுத்ரையாள் அகத்தியருக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. அவ்வாறு உருவான சஹஸ்ர நாமத்திற்கு,சமஸ்கிருத பாஷ்யத்தை சங்கர பகவத்பாதாள் மூலம் நிறைவேற்றினால் அம்பாள். இருக்கிற சமஸ்கிருத பாஷ்யமான சௌந்தர்யலஹரிக்கு தமிழ் பாஷ்யத்தை,  அதாவது அபிராமி அந்தாதியை அபிராமி பட்டர் மூலம் திருவிளையாடலை நடத்தி உலக்கிற்கு தந்தவள் அம்பாள். எந்தெந்த காலகட்டங்களில் யார் மூலம் எதை நடத்திக் கொள்ளலாம் என்பதை நன்கு தெரியும் அம்பாளுக்கு. தற்போது என் மூலமாக தன்னைப் பற்றிய நிறைய விஷங்களை பதிய வைக்கிறாள் என...