Posts

Showing posts from November, 2025

மனதின்) அசுத்தத்தை எவ்வாறு நீக்குவது?

Image
 (மனதின்) அசுத்தத்தை எவ்வாறு நீக்குவது?  நமது அசுத்தம் நமது சொந்த உடல். இந்த உடல் எவ்வாறு உருவானது? அது பாவத்தின் காரணமாகும். நாம் எப்படி அந்தப் பாவத்தைச் செய்தோம்?  நமது உடலின் மற்றும் மனதின் பல்வேறு உறுப்புகளைப் பயன்படுத்தி அதைச் செய்தோம்.  ஒரு கயிற்றின் மீது ஒரு கயிறு சுற்றப்பட்டு அதை அகற்ற வேண்டியிருந்தால், அது எதிர் திசையில் அவிழ்க்கப்பட வேண்டும்.  அதேபோல், கெட்ட செயல்கள் நல்ல செயல்களாலும், பாவங்கள் நல்ல செயல்களாலும் அழிக்கப்பட வேண்டும்.  உடல் மற்றும் மனதின் அவயவங்களால் செய்யப்பட்ட பாவங்கள் அதே உறுப்புகளாலும் மனதாலும் அழிக்கப்பட வேண்டும். அது எவ்வாறு என்ற கேள்வி எழும்?. தர்மம்,  பரோபகாரம்,  மத சடங்குகளைக் கடைப்பிடித்தல், இறைவனின் நாமங்களைச் சொல்வது,  கோயில் வழிபாடு  போன்றவை நல்ல செயல்கள்.  இவை பாவங்களைத் துடைப்பதற்கான உதவிகள்.  இவ்வாறு பாவங்களைத் துடைத்த பிறகு,  நாம் உண்மையான அறிவின் பாதையைப் பின்பற்றி  பேரின்ப நிலையை அடைய வேண்டும். படித்ததில் பிடித்தது

அகிலாண்டேசுவரியின் காதில் இரண்டு தோடுகள்

Image
அகிலாண்டேசுவரியின் காதில் இரண்டு தோடுகள் போட்டிருப்பதன் ரகசியம்...! திருவானைக்காவல் அம்பாள்  ஸ்ரீ அகிலாண்டேசுவரியின் ஒவ்வொரு காதிலும் இரண்டு தோடுகள் இருக்கும் என்பது விசேஷமான அம்சம். பஞ்ச பூதத் தலங்களில் அப்பு(நீர்)தலமாக விளங்குவது திருவானைக்காவல். மூலவர் ஜலகண்டேசுவரராகவும், அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேசுவரி யாகவும் வீற்று இருக்கின்றனர். வராகி அம்சமான அகிலாண்டேசுவரி, ஆரம்ப காலத்தில் உக்கிர மூர்த்தியாகவே இருந்தாள். எனவே, பூஜை செய்பவர்களும்,பக்தர்களும் கோவிலின் உள்ளே செல்லாமல் வாசலில் இருந்தே வழிபாடுகளை நடத்தி வந்தார்கள். இதை அறிந்த ஆதிசங்கரர் மனம் வருந்தினார். உடனே இரண்டு ஸ்ரீசக்கரங்கள் செய்து அதில் அம்மனின் கோபம் இறங்க வேண்டும் என்று வேண்ட, அதன்படியே அம்பாளின் கோபம்  ஸ்ரீ சக்கரத்தில் இறங்கியது. அம்பாள் சாந்த சொரூபியானாள். ஆதி சங்கரர் இந்த இரண்டு ஸ்ரீசக்கரத்தையும் அகிலாண்டேசுவரியின் காதில் தோடுகளாக மாட்டி விட்டார். எனவே,இந்த அம்பாளின் ஒவ்வொரு காதிலும் இரண்டு தோடுகள் இருக்கும் என்பது விசேஷமான அம்சம். ஒன்று சிவச்சக்கரம். மற்றொன்று ஸ்ரீசக்கரம். இந்த சக்கரங்கள் மற்ற அம்பாளின் சந்நிதியில...

தேவியின்தாடங்கமஹிமை

Image
 ஆதிசங்கரபகவத்பாதாள் இந்த தாடங்க மஹிமையைஅறிந்து தான் அம்பாளுக்கு தாடங்கத்தை சாற்றினாரோ #தேவியின்தாடங்கமஹிமை விஷ பயம்,  அகாலம்ருத்யு நிவாரணம் #சௌந்தயலஹரிஸ்லோகம்28 ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய ஜராம்ருத்யு ஹரிணீம் விபத்யந்தே விஶ்வே விதி ஶதமகாத்யா திவிஷத: கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலனா ந ஶம்போஸ் தன்மூலம் தவ ஜனனி தாடங்க மஹிமா                #பொருள் பயங்கரமான மூப்பு, மரணங்களை விலக்குகிற அமிருதத்தை உண்டும்கூட  பிரம்மா இந்திரன் முதலிய எல்லாத் தேவர்களும்  ப்ரளய காலத்தில் அழிகிறார்கள்.  கொடிய விஷத்தை சாப்பிட்ட சிவனுக்கு காலத்தின் முடிவு இல்லை என்றால்  அதன் காரணம் உன்னுடைய காதில் உள்ள தாடங்க மஹிமைதான். பரமசிவனே,  எந்தப் பராசக்தி உனது பாதி சரீரம் உடையவள் ஆகின்றாளோ அவள் உலகனைத்திற்கும் மருந்து.   ருத்திரனாகிய உனக்கும் அவள்தான் மருந்து.  விஷத்தை உண்டும் அவள் அருளால்தான் எங்களுக்காகப் பிழைத்து இருக்கிறாய்.          — ருத்ரம் தேவியினுடைய தாடங்கம் ஸ்ரீசக்கர ரூபமே. ஸ்ரீசக்கரத்தை ஸுவாஸினிகளும்...

எது ஞானம் தெளிவது ஞானம் .

Image
எது ஞானம் என்பதை கண்டோம். தெளிவது ஞானம்  எது தெளிவது ஞானம். அறிவு தெளிவது ஞானம். எதுவும் நம்மால் இல்லை, நமக்கு மேல் ஓரு சக்தி உள்ளது என்பது தெளிந்த ஞானம். அந்த தெளிவு இல்லையேல் குழப்பமே. குழப்பம் எப்போது வரும் ,நான் அகந்தை மேல் எழும் போது. தெளிந்த நீரில் அனைத்தும் தெளிவாக இருக்கும். அதுவே குழம்பிய குட்டையானால் எதுவும் தெரியாது. நமது மனமும் அவ்வாறே தெளிந்தால் அது ஞானத்தை பெறலாம். அதுவே தெளிவு இல்லை எனில் அகங்காரம் மேலிடும். உதாரணத்திற்கு photo chemistry ல். Fluorescent பொருளின் மீது வெளிச்ச ஆற்றல் படும்போது. அதில் உள்ள electronகள் ஆற்றலை பெற்று மேல் எழும் அது நிரந்தரம் இல்லை. அந்த வெளிச்ச ஆற்றல் கடந்தால் அது சாதாரண நிலைக்கு திரும்பும். அதை போல் துக்கம் மற்றும் இன்பத்திற்கு நாம் காரணம் இல்லை. எனவே அதை சமமாக ஏற்க்ககும் பக்குவம் வேண்டும் அந்த பக்குவத்திற்கு ஆன்மீகத்தில் ஈடுபட்டால் அது நம்மை தெளிவுப்படுத்தும். அந்த ஞானத்தை பெற நாம் பக்குவபட வேண்டும். அந்த பக்குவத்திற்கு பல துன்பங்ளை அனுபவிக்க வேண்டும். அது எவ்வாறு இரும்பானது மிகவும் வழுவானது. அதை நாம் நினைக்கும் உருவத்திற்கு மாற்ற அதை ந...

ஏழு பிறவிகள்......

Image
 ஏழு பிறவிகள்...... மாமுனிவர் அகத்தியப் பெருமான் கர்ம காண்ட நூலில் கூறியது..... 1--கடவுள் மனிதனாகப் பிறப்பது  2--மனிதன் மனிதனாகப் பிறப்பது  3--மிருகம் மனிதனாகப் பிறப்பது 4--பறவைகள் மனிதனாக பிறப்பது  5--நீர் வாழ்வன மனிதனாகப் பிறப்பது  6--பூச்சிப்புழு மனிதனாகப் பிறப்பது  7--மரம் செடிகள் மனிதனாகப் பிறப்பது இப்படியாக.... 1-- மனிதர்கள் ஏழு வகையாக பிரிக்கப்பட்டு அப்பிறவிகளில் செய்யக்கூடிய பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மாறி மாறி பிறந்தும் இறந்தும் வாழ்கின்றோம். 2--மனிதன் மனிதனாக பிறந்தவர்... நீதி நியாயமாய் வாழ்வார். தான தர்மங்களை செய்வார்.  மரங்களை நடுவார்.  மிருகம் பறவைகளுக்கு பசியினை போக்க வழிவகை செய்வார்.  3--மிருகம் மனிதனாக பிறப்பது...  எந்த நேரமும் உழைப்பான். ஆனால் அதனை சரிவர பயன்படுத்தாமல் வீண் செய்து விடுவார்.  நீதி நியாயம் எதையும் பார்க்காமல் எவர் பொருள் ஆனாலும் எடுப்பார்கள்.  மற்றவர் மனதை துன்புறுத்துவர்.  4--பறவைகள் மனிதனாக பிறப்பவன்....  எப்போதும் உழைக்காமலே அடுத்தவர் பொருளை பறிக்கவே திட்டமிடுவார்.  மிருகம் பறவைக...

எது ஞானம்

Image
 எது ஞானம் ?. தெளிவது ஞானம்,அந்த தெளிவை கொடுப்பவர்கள் குருமார்கள் குருவாகிய மஹாபெரியவா அருளுரை " பிராணன் போனதை நீ பார்த்தாயா? "- பெரியவா ( ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் உடலின் எந்த உறுப்ப்புக்களிலும்  காணவில்லையே!   எப்படி நம்புவது? என்று கேட்ட டாக்டர் ரங்காச்சாரிக்கு பெரியவாளின்  பதில் மேலே) சொன்னவர்-திரு கணேச சர்மா டாக்டர்:  ஸ்வாமி,  நான் நூற்றுக்கணக்கான அறுவை சிகிச்சை செய்துள்ளேன்.  ஆனால் தாங்கள் கூறும் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் உடலின்  எந்த உறுப்ப்புக்களிலும் காணவில்லையே!  எப்படி நம்புவது? பெரியவா:  ஒன்று கேட்கிறேன். பதில் சொல்.  நீ செய்த அறுவை சிகிச்சைகளில் பலரைக் காப்பாற்றி இருக்கலாம். சிலர் மரணம் அடைந்தும் இருக்கலாம்.  மரணம் அடைந்ததும் நீ என்ன சொல்வாய்? டாக்டர்:  என்ன செய்வது?  பிராணன் போய்விட்டது. அவ்வளவுதான். என்று  சொல்லுவேன். பெரியவா: பிறகு? டாக்டர்: இன்னாரின் பிராணன் போய்விட்டது என்று மரணச்  சான்றிதழ்  கொடுப்பேன். பெரியவா:  பிராணன் போனதை நீ பார்த்தாயா? சரி.  அறுவை சிகிச்சை...

ஹிந்து சனாதன தர்மம் கூறிய நான்கு நிலைகள்.

Image
ஹிந்து சனாதன தர்மம் கூறிய நான்கு நிலைகள். ப்ரம்மசர்யம் க்ரஹஸ்தம் வானப்ரத்ஸம் சந்நியாசம் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகியவை மனித வாழ்க்கையின் நான்கு முக்கிய நோக்கங்கள் (புருஷார்த்தங்கள்) ஆகும்.  தர்மம் என்பது கடமை மற்றும் ஒழுக்கமான வாழ்வு;  அர்த்தம் என்பது செல்வம் மற்றும் பொருள்;  காமம் என்பது ஆசைகள் மற்றும் இன்பம்;  மோட்சம் என்பது இந்த ஆசைகள் மற்றும் துன்பங்களில் இருந்து விடுபடும் இறுதி விடுதலை.  இவை அனைத்தும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்,  இவை ஒன்றோடொன்று இணக்கமாகப் பின்பற்றப்பட வேண்டும்.  இவைகளை இதன் மூலமாக பெறவேண்டும் என்கிறது அவை தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் ப்ரம்சர்யத்தின் போது குருவின் மூலமாக தர்மத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும். எதற்கு எது தர்மம்/அதை அவ்வாறு கடைபிடிப்பது/அதன் வழியில் எவ்வாறு செல்வதை ஈட்டுவது. அதற்காக தான் அடுத்ததாக  #அர்த்தததை# வைத்தனர். தர்ம வழியில் பணத்தை ஈட்டுவது. அதன்பிறகு காமம்-என்பது ஆசை . அதைதான் க்ரஹஸ்தம் என்றனர். திருமணத்தை முடித்து தர்ம வழியில் வாழ்க்கையை நடத்துவது. புத்தரின் வரிகள் ஆசையே துன்பத்திற்கு காரணம். அ...

அம்பாள் எங்கு /எந்த ரூபத்தில் இருக்கிறாள்.

Image
 கடந்த சில தினங்களாக அம்பாளின் சொரூபம் பற்றிய பதிவை கண்டோம். அம்பாள் எங்கு /எந்த ரூபத்தில் இருக்கிறாள். அவள் சகல வியாபினி/அவள் எல்லாவற்றிலும் வியாபித்து இருக்கிறாள். காரணம் அவள் லோகமாதா/லோகஜனனி. அவள் பஞ்ச பூதங்களாக இருக்கிறாள். அதற்கு உதாரணம் நாம் விடும் மூச்சு காற்று அதுவே இந்த உடலுக்கு ஆதாரம். உடல் சிவன் என்றால் உயிர் ஆகிய ஆத்மா அம்பாள். இவற்றின் இணைவே அர்த்தநாதீஸ்வரர் தத்துவம். இதில் எது உயர்ந்தது,ஒன்று இல்லாமல் ஒன்று இருந்தால் அது பிரயோஜனம் இல்லை. அதே மாதிரி பரபிரம்மம் அதற்கு அசைவு இல்லை. அதனுள் உள்ள சக்தியாகிய அம்பாள் அதை சலனபடுத்தி லோக சிருஷ்டிக்கு உதவிக்கிறாள். அதனாள் அவள் சிருஷ்டி கர்தா. அவளே சப்தம் ஆகிறாள்.  எவ்வாறு மொழியும் அதன் பொருளும் முக்யமோ.  அதை போல் சிவனும் சக்தியும் முக்யம். ப்ரயள காலத்தில் இவை அனைத்தும் அதனுள் அடக்கம். காரணம் எங்கிருந்து பிறந்ததோ அல்லது ஜனித்ததோ அங்கேயே ஐக்கியம் ஆகிறது. இதுவே  லோக இயக்கம் ஜனனம் மரணம். இதைதான் ஆச்சாரியர்  புனரபி ஜனனம் புரனபி மரணம். அது எது வரை அதன் கர்மா கழியும் வரை. அது கெட்ட கர்மவோ அல்லது நல்ல கர்மாவோ அது வரை...

இந்து மதம் அல்லது சனாதன தர்மம்

Image
 இந்து மதம் அல்லது சனாதன தர்மம் மனித வாழ்க்கையின் நிலைகளை நான்காகப் பிரிக்கிறது,  அவை ஆஸ்ரமங்கள் என்று அழைக்கப்படுகின்றன:  1. பிரம்மச்சாரியா  (மாணவர் வாழ்க்கை) -  கற்றல் மற்றும் சுய ஒழுக்கத்திற்கான அர்ப்பணிப்பு. 2. கிருஹஸ்தா  (வீட்டு வாழ்க்கை) -  உலகக் கடமைகளை நிறைவேற்றுதல், சம்பாதித்தல், குடும்பம் மற்றும் சமூக பங்களிப்பு. 3. வனபிரஸ்தம் (வன வாழ்க்கை) -  பொருள் ஈடுபாட்டிலிருந்து படிப்படியாக விலகுதல். 4. சன்யாசம் (துறவு) -  முழுமையான பற்றின்மை மற்றும் ஆன்மீக நாட்டம். நமது உறுப்பினர்களில் ஒருவர் சமீபத்தில் நிலை 4 மற்றும் ஒருவேளை நிலை 3 ஆகியவை இன்றைய யுகத்தில் இன்னும் பொருத்தமானவையா என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.  நிச்சயமாக முதல் இரண்டு நிலைகள் தொடர்ந்து பொருத்தமானவை, ஆனால் வன வாழ்க்கை மற்றும் முறையான துறவு பற்றி என்ன? அந்த இரண்டையும் படிப்போம்:  1) வனபிரஸ்தம் -  உண்மையில் இதன் பொருள் காட்டில் வாழ்க்கையை நடத்த பின் வாங்குவதாகும்.  மனுஸ்மிருதி 6.2 கூறுகிறது: “ஒரு மனிதன் தன் தோல் சுருக்கமாகவும்,  தலைமுடி வெண்மையாகவும், ...

ஸ்ரீதர அய்யாவாள் கார்த்திகை அமாவாசை

Image
 கார்த்திகை அமாவாசை அன்று, திருவிசைநல்லூரில் உள்ள  ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் ஒரு புனித கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக நம்பப்படுகிறது.  இது ஒரு புனிதமான நிகழ்வாகக் கருதப்படுகிறது,  மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நீர்நிலையில் நீராட வருகிறார்கள்.. கார்த்திகை அமாவாசை: கார்த்திகை மாதத்தின் அமாவாசை திதி அன்று இந்த நிகழ்வு நடக்கிறது. இடம்:  கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் இந்த புனித கிணறு உள்ளது. நம்பிக்கை:  சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர அய்யாவாள் தனது பக்தர்களைக் காப்பதற்காக இந்த கிணற்றில் கங்கையை வரவழைத்ததாக ஐதீகம் கூறுகிறது. பக்தி:  இந்த புனித நீராடலை மேற்கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வருகிறார்கள்.  திருவிசநல்லூர், கும்பகோணம் ஆந்திர தேசத்தில் ராஜமகேந்திரம் என்கிற நகரத்தில் பிரம்மராயர்கள் என்றும் அமாத்ய குலத்தவர் என்றும் புகழ்பெற்ற பிராமணர்கள் இருந்தனர்.  இவர்கள் பிராமணர்களுக்குரிய வேத வேதாந்தங்கள்  மட்டுமல்லாது ராஜநீதி, தனுர் வேதம், சேனா சதுரங்கம், சிற்ப சாஸ்திரம் முதலியவற்றை படித்தும் ...

அவளுடைய அநுக்கிரகத்தால் மகா கவியாகப் பரிணமித்த காளிதாஸர்

Image
 தெய்வத்தின் குரல் பாகம்-5. அவளுடைய அநுக்கிரகத்தால் மகா கவியாகப் பரிணமித்த காளிதாஸர் அவளை ஸர்வ வாணாத்மிகே, ஸர்வ மந்த்ராத்மிகே என்று ‘ சியாமளா தண்டகத்தில்’ ஸ்துதி செய்கிறார்.  ‘வர்ணம்’ என்றால் ‘நிறம்’ என்று நினைப்பீர்கள்.’வர்ணம்’ என்றால் ‘அக்ஷரம்’ என்று அர்த்தம்.  ஒலி வடிவான அக்ஷரங்களும்,  ஒளி வடிவமான ரூபங்களும் ஒரே மூலத்திலிருந்து வந்தவைதான். அவை ஒன்றுக்கொன்று நிரம்ப நெருக்கமான சம்பந்தம் உடையவை ஸயன்ஸ் நிபுணர்கள்கூட இந்த ஒற்றுமையைச் சொல்கிறார்கள். ஜலக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்த்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகளைப் (vibration) பொறுத்து ஜலத்தின் மேலே மிதக்கிற லேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்தன.  நாதத்துக்கே ரூபம் கொடுக்கற சக்தி இருக்கிறது என்று இதனால் தெரிகிறது. ஒரு பெரிய அலை மடிந்து மடிந்து சிறு சிறு அலைகளாகி அடங்குகிற மாதிரிச் சில சப்தங்கள் இருக்கின்றன.  இதை ‘வீசிதரங்கம்’ என்பார்கள். ஒரே கொப்புளிப்பில் பலவாகத் தெறிப்பதுபோல் விழுகிற சப்தங்களை ‘முகுளம்’ என்பார்கள். இப்படிப் பலவகைப்பட்ட சப்தங்களையெல்லாம் ஐம்பத்தொரு அக்ஷரங்களாகப் பிரித்...

அம்பாளுடைய அப்படிப்பட்ட ரூபம் எப்படி இருக்கும்?

Image
 தெய்வத்தின் குரல் பாகம்-4. அம்பாளுடைய அப்படிப்பட்ட ரூபம் எப்படி இருக்கும்? சாதாரணமாக,  பத்துப் பேருக்கு, நூறு பேருக்கு அன்னதானம் செய்கிற ஒரு நல்ல ஜீவனின் முகத்தைப் பார்த்தால், அதில் எத்தனை அன்பு சொட்டுகிறது? அன்னதானம் செய்து,  பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது, அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பாருங்கள். அந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் எவ்வளவு அன்பு சொட்டுகிறது? சாப்பிடுகிறவனைவிட சாப்பாடு போட்டவனுக்குத்தான் ஆனந்தம் அதிகம் இருக்கிறது.  ஒரு பத்து பேர் அல்லது நூறு பேருக்கு மட்டும் ஒரே ஒரு வேளை சோறு போடுகிறவனிடமே இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கின்றன. மகா பாபங்களைச் செய்து – காரியத்தில் செய்யாவிட்டாலும், மனஸினால் மகா பாபங்களை நினைத்து, ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடாநு கோடி ஜீவன்களுக்கும், கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணேசுவரியான அம்பாள்தான். அவளுடைய அன்பையும், அதனால் உண்டான ஆனந்த ஸ்வரூபத்தையும் நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. அம்பாள் ஸெளந்தரியஸ்வரூபம் என்கிறார்கள்.  அவளைப் பற...

காற்று அநேகமாக எங்கே செல்ல முடிகிறது.

Image
 தெய்வத்தின் குரல்-3. காற்று அநேகமாக எங்கே செல்ல முடிகிறது.  அதற்கு ரூபம் இருக்கிறதோ? அம்பாளோ அதைவிட சூக்ஷ்மம்.  காற்று இல்லாத சூனியத்தை (vaccum)கா கூட உண்டாக்குகிறார்கள். ஆனால் அவள் இல்லாத இடம் இல்லை.  மனசு, எண்ணம் இதற்குள்ளும் இருக்கிறாள்.  அப்படியானால் அவளுக்கு எப்படி உருவம் இருக்க முடியும்? ஆனால் இது நம் சாமானிய நிலையில் மனசுக்கு ஹிதமாக இல்லை. அவளிடமிருந்து நாம் வந்தோம் என்பதால் அவள் அம்மாவும் நாம் குழந்தைகளும் மாதிரி.  அம்மா ஒருத்தி இருக்கிறாள் என்று குழந்தைக்குத் தெரிந்து விட்டால் மட்டும் அது சந்தோஷப்படுமா? அவள் இருந்தால் மட்டும் போதாது, அவளைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் என்று ஆசைப்படும். அவள் எல்லா ரூபமாகவும் இருக்கிறாள் என்று நம்மால்  உணர முடியவில்லை.  அருவமாகவே அவளைத் தியானிக்க நமக்குப் பக்குவம் போதவில்லை. இப்படிப்பட்ட நமக்காகவே,  நாம் அன்பு செய்வதற்காகவே,  அவள் இப்போது காருண்யமும் லாவண்யமும் ஒரு ரூபமாகித் திவ்விய மங்கள விக்கிரகமாக வருகிறாள்.  ரூபமில்லாத நெய்யை நன்றாகக் குளிர வைத்தால் பாளம் பாளமாகப் பெயர்த்து எடுக்கிற மா...

அம்பாளுடைய ஸ்வரூபம் என்ன என்றால்?.

Image
 தெய்வத்தின் குரல்-2 அம்பாளுடைய ஸ்வரூபம் என்ன என்றால்?. நாம் பார்க்கிற அத்தனை உருவங்களும்தான்.  உருவங்கள் மட்டுமில்லை. எண்ணங்கள்,  காரியங்கள் எல்லாமும் அவள்தான்.  அவளின்றி நம்  சரீரம், மனசு,  உயிர்  எதுவுமில்லை.  ‘சரீரம் த்வம் சம்போ:–  நீ பரமேசுவரனின் சரீரமாயிருக்கிறாய்’  என்று சௌந்தரிய லஹரியில் சொல்கிற ஆசார்யாள்  அடுத்த ஸ்லோகத்தில்  நீதான் சூக்ஷ்மமான மனதாய் இருக்கிறாய் என்கிறார்.  அந்த மூலமான மனஸிலிருந்து, சூக்ஷ்மமான ஆகாசம் உண்டாகிறது. அது மேலும் மேலும் ஸ்தூலமாகி, காற்று,  அக்னி,  ஜலம்,  மண்  எல்லாம் வந்தன.  இதெல்லாமும் நீதான் என்கிறார்.  நீ இல்லாமல்  வேறு வஸ்து எதுவுமே  இல்லை என்கிறார்;  த்வயி பரிணதாயாம் நஹி பரம். ‘சம்பு’ என்ற உயிருக்கு  நீ சரீரம் என்று சொன்னாலும்,  உயிர், உடல் என்ற பேதமில்லாமல் ஒன்றாக இருந்ததும் நீதான். நீயே தான் விசுவம் என்கிற சரீரமாகப் பரிணமித்தாய் –  த்வம் ஏவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விச்வ வபுஷா. இங்கே நம் சங்கராசாரியார் சொல்வது,  ‘உலகம்...

அம்பாளின் ஸ்வரூபம் :

Image
 தெய்வத்தின்குரல் பாகம் -1 அம்பாளின் ஸ்வரூபம் :  “நீ தான் பரமேசுவரன் சரீரம்”  என்று  ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் அம்பிகையைப் பார்த்துச் சொல்கிறார்.  சரீரத்திற்குள் உயிர் இருக்கிறது.  பல சரீரங்களுக்குள் பல உயிர்கள் இருக்கின்றன.  இத்தனை உயிர்களுக்கெல்லாமும் உயிராக ஒரே மூல வஸ்துதான் இருக்கிறது.  அந்த மூல வஸ்துவான பிரம்மம்தான் பரமேசுவரன் என்றால்,  அதன் இத்தனை தோற்றங்களுமே பராசக்தி.  இது அவ்வளவும் அதற்குச் சரீரமாகவும்,  அது இவற்றுக்குப் பிராணனாகவும் இருக்கிறது.  பிரபஞ்சம், அதிலுள்ள ஜீவராசிகள் அவற்றின் மனசு, புத்தி, சித்தம், அகங்காரம் எல்லாம் பரமேசுவரன் என்ற உயிருக்குச் சரீரம் மாதிரி.  இது அத்தனையும் ஸாக்ஷாத் அம்பாள்தான்.  உடலும் உயிரும் மாதிரி பிரம்மமும் பிரம்ம சக்தியும் பிரியாமல் இருக்கின்றன.  உடலில் எல்லா இடங்களிலும் உயிர் ஓடுகிற மாதிரி பராசக்திக்குள் முழுக்க பிரம்ம தத்வமேதான் நிறைந்திருக்கிறது.  அந்த பிரம்மத்துக்கே ஒர் உடம்பு கொடுத்துப் பரமேசுவரன் என்று வைத்தால்,  அந்த உடம்புக்குச் சாத்திய கவசமாக இருக்கிறவள...

சாக்தம் அம்பாள் வழிபாடு

Image
 நமது பாரம்பரியம் சாக்தம் என்பது அம்பாள் வழிபாடேயாகும். சாக்தம் என்பது ஒவ்வொரு பெண் வடிவம் உயிருள்ள பெண் தெய்வம்.  இந்தியாவில் மட்டும் தான் உயிருள்ள ஒரு பெண்ணை சக்தியின் வடிவமாக #கன்யா பூஜை அல்லது #சுகாஸினி பூஜை என்று வணங்கி வழிபடு கின்றனர். ஆதிசங்கரருக்கு முன்னால்  காளி வழிபாடு வெகுவாக நரர்களை, மிருகங்களை பலியிடுதல் என இருந்துவந்தது.  காளி மிகவும் உக்ரமானவள் என நம்பப்பட்டது.  ஆதி சங்கரர் தேவியினை அன்புள்ளவளாக விளக்கி  ஸ்ரீ சக்கரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடும் முறையினை வகுத்துக் கொடுத்தார்.  தற்சமயம் இந்த முறைதான் நடைமுறையில் உள்ளது. தாய் உலகம் அனைத்திற்கும் அன்னை என்பதில் இருகருத்துக்கு சிறிதேனும் இடமில்லை.  தேவி பாகவதம் தேவிதான் முழுமையான பராசக்தி என்கிறது. தேவி அவள் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் படைத்தார்.  தன்னுடைய ஸத்வ, ரஜஸ், தமஸ் அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில்  சரஸ்வதி, லஷ்மி, பார்வதி ஆகிய மூவரையும் படைத்தார்.  இந்த மூவரையும் மூன்று கடவுளர்கட்கும் அவரவர் படைப்பு முதலான தொழிலினை செம்மையாய் செய்ய அனுசரணையாக இருப்பதற்க...

மனிதனாக பிறந்தவர்கள் செய்யவேண்டிய கைங்கர்யங்கள் எவை?.

Image
 மனிதனாக பிறந்தவர்கள் செய்யவேண்டிய கைங்கர்யங்கள் எவை?. பகவத் கைங்கர்யம் என்பது இறைவனுக்குச் சேவை செய்வதாகும்.  இது பகவானுக்குப் பணிபுரிவதைக் குறிக்கிறது.  இது மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:  பகவத் கைங்கர்யம்  (இறைவனுக்குச் சேவை செய்தல்),  பாகவத கைங்கர்யம்  (இறைவனின் அடியார்களுக்குச் சேவை செய்தல்), மற்றும்  ஆசார்ய கைங்கர்யம்  (ஆன்மீக குருவுக்குச் சேவை செய்தல்).  இந்தச் சேவைகள் மனம், வாக்கு அல்லது உடல் ஆகியவற்றின் மூலம் செய்யப்படலாம்.  பகவத் கைங்கர்யம்  (இறைவனுக்குச் சேவை) இறைவனுக்கு உகந்த செயல்களில் ஈடுபடுவது. கோயில்களைப் பராமரித்தல், பூஜை செய்தல், பக்தியுடன் இறைவனைப் போற்றுதல் போன்றவை இதில் அடங்கும். பாகவத கைங்கர்யம் (அடியார்களுக்குச் சேவை) இறைவனின் அடியார்கள் அல்லது பாகவதர்களுக்கு உதவுதல். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது, அவர்களுடன் ஆன்மீக உரையாடல்களில் ஈடுபடுவது ஆகியவை இதில் அடங்கும். ஆசார்ய கைங்கர்யம் (குருவுக்குச் சேவை) ஆன்மீக குருமார்களுக்குச் சேவை செய்தல், அவர்களின் வழிகாட்டுதலின்படி நடப்பது, அவர்களுக்குத் ...

பெண்ணின் மூன்று சக்திகள்

Image
 பெண்ணின் மூன்று சக்திகள் அதுவே அம்பாளின் சக்தியும் கூட யோகசக்தி போகச்தி வீரசக்தி அம்பாள் 3 வடிவங்களில் வழிபடப்படுகிறாள் •வீரசக்தி •யோகசக்தி •போகசக்தி வீரசக்தி: ஆதிசக்தி காமாக்ஷி பரபட்டாரிகா இங்கு வீரசக்தியாக வணங்கப்படுகிறாள். அவள் பரமேசுவரனின் தாயார். அவள் அனைத்தையும் கடந்து ஒரு உன்னத சக்தியாக தனித்து நிற்கிறாள். அனைத்து சைவ ஆலயங்களிலும் காமகோஸ்த நாச்சியார் மற்றும் கோவில்களில் தனி சன்னதியும் சதுர்பூஜ உற்சவ விக்ரஹமும் கொண்டவர். யோகசக்தி: ஆதிசக்தியிலிருந்து பிரிந்த யோகசக்தி சிவனுடன் கலந்து உலகை இயக்குகிறாள். அவள் யோகசக்தி அவள் சிவனிடமிருந்து பிரிக்க முடியாத சக்தி மற்றும் சிவனுடன் எப்போதும் வழிபடப்படுகிறாள். அவள் லிங்கத்தின் ஆவுடையில் அழைக்கப்பட்டு வழிபடப்படுகிறாள் போகசக்தி பின்பு யோக ஆற்றல் மாறுகிறது,பின்னர் அது உந்து சக்தியாக மாறி,  தாய் வடிவமாக உலகின் ஆசைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.  இந்த வடிவம் போகசக்தி என்று அழைக்கப்படுகிறது.  அவள் பரமேஸ்வரனின் மனைவியாக பார்க்கப்படுகிறாள் அவள் சிவன் சன்னதியில் ஒரு விக்ரஹமாகவும்  ஒரு த்விபூஜ உற்சவ விக்ரஹமாகவும் காணப...

ஊழி முதல்வன்/

Image
ஊழி முதல்வன்/  ஏகன் அநேகன் இறைவன் ... #ஊழிமுதல்வன்" என்பது பிரளய காலத்தின் போது உலகில் உயிர்களைப் படைத்து, காத்து, அழிக்கும் கடவுளைக் குறிக்கும்.  இது பொதுவாக சிவபெருமானையும், வைணவத்தில் திருமாலையும் குறிக்கிறது.  திருப்பாடல்களில், மழைக் காலங்களில் பெரும் ஆழிமழைக்குத் தெய்வத்தை அழைக்கும் போது, "ஊழி முதல்வன் உருவம்போல்" என்று கருமையாகக் குறிப்பிடப்படுகிறது,  மேலும் திருமாலின் பன்றி உருவமும் ஊழி முதல்வன் என குறிப்பிடப் படுகிறது.   "ஊழி முதல்வன்" என்பதன்  விளக்கம் படைப்பு, காப்பு, அழித்தல்:  "ஊழி" என்பது ஒரு யுகத்தின் முடிவைக் குறிக்கிறது.  அந்த யுகம் முடிவடையும் காலத்தில், பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும். இந்த சுழற்சியில், உயிர்களைப் படைத்து, காத்து, அழிக்கும் முதல்வன் எனப் பொருள்.  திருமால்: கீரந்தையார் குறிப்பிட்டுள்ளபடி,  திருமால் பன்றி உருவில் தோன்றி, ஊழிக் காலத்தின் போது உலகம் அழியும் போது, மண்ணுலகத்தையும் வானுலகத்தையும் காப்பவர். சிவபெருமான்:  "ஊழி முதல்வன் ஏகன் அநேகன் இறைவன்" என சிவபெருமானைக் குறிக்கும் பாடல்களும் உள்ளன. தி...

ஊழி என்பதற்கான விளக்கம்

Image
 ஊழி என்பதற்கான விளக்கத்தை பார்த்தோம். அந்த ஊழிக்கு முதல்வன் யார் என்பதை பின்பு காணலாம். இந்த எந்தொரு பேதமில்லை அவரவர் யாரை வணங்குங்கிறார்களோ அவனே ஊழி முதல்வன். ஆனாலும் இவை அனைத்தும் ஒன்றில் அடக்கம். அதுவே பரம்பொருள் ,அதிலிருந்து  லோகசிருஷ்டியின் போது வெளிபட்டதே இவை அனைத்தும் என்பதை உணர வேண்டும். "ஊழி" என்பதன் பொருள் காலம், யுகத்தின் முடிவு, அல்லது நீண்ட காலம் ஆகும். இது பொதுவாக உலக அழிவு காலம் அல்லது கடல் பெருகி உலகம் அழியும் காலம் ஆகியவற்றைக் குறிக்கிறது. மேலும், இது தலைவிதி, விதி, மற்றும் விசும்பும் அல்லது சேரும் செயல் போன்ற பொருள்களையும் குறிக்கலாம்.  காலம்:  "ஊழி" என்பது ஒரு கால அளவீட்டைக் குறிக்கிறது. உலக அழிவு:  யுகத்தின் முடிவில் ஏற்படும் பேரழிவுகளைக் குறிக்க, குறிப்பாகப் பெரிய அலைகளால் உலகம் அழியும் காலத்தை "ஊழி" அல்லது "ஊழிக்காலம்" என்கிறோம். நீண்ட காலம்: "நெடுங்காலம்" என்ற பொருளிலும் இதை பயன்படுத்தலாம். தலைவிதி:  "ஊழ்" என்ற சொல், பிறப்பிலேயே எழுதப்பட்ட விதி அல்லது தலைவிதியைக் குறிக்கப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது...

பதத்வயப்ரபாஜாலபராக்ருதஸரோருஹாரு-3

Image
 #பதத்வயப்ரபாஜாலபராக்ருதஸரோருஹாரு-3 இன்னொரு விஷயத்தையும் பார்ப்போம்.  கொஞ்சம் திவ்விய பிரபந்தத்தையும் பார்ப்போம்.  சோளிங்கர் என்கிற க்ஷேத்ரத்தில் நரசிம்மரை சேவிக்கும்போது, ஆழ்வார் அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே என்று பாடுகின்றார். இந்த அக்காரக் கனி என்பதற்கு விளக்கம் கொடுக்கக் கூடிய ஆச்சார்யார்கள் என்ன சொல்கிறார்கள் எனில்,  ஒரு கனியானது இனிமையாக இருந்து பார்த்திருப்போம். ஆனால், ஆழ்வார் என்ன சொல்கிறார் எனில், நாம் வெல்லத்தை எடுத்து அந்த வெல்லமே ஒரு விதையாகி அந்த விதையை நாம் பூமியில் புதைத்து அந்த வெல்லப் பாகிலேயே தண்ணீர் ஊற்றி, அந்த வெல்லமே ஒரு மரமாக முளைத்து அந்த வெல்ல மரத்திலேயே வெல்லமாக ஒரு பழம் வருமாம்.  சாறு மட்டும் இருக்கக்கூடிய வெல்லமாகிய ஒரு பழம் வருமாம். இப்போது அந்தப் பழம் எப்படி இனிப்பாக இருக்குமோ, அதுபோல, பெருமாள் என்று பாடுகின்றார். சரி, அதை எதற்கு இங்கு சொல்ல வேண்டுமெனில்,  ப்ரபாஜாலம் என்று சொல்கிறோம் அல்லவா.  அந்த ஒளி கொடுக்கக்கூடிய திருவடித் தாமரை என்று சொல்கிறோம் அல்லவா…  இப்போது ஒளியையே எடுத்து ஒளியே ஒரு தாமரையாகி அந்த ஒளிம...

பதத்வயப்ரபாஜாலபராக்ருதஸரோருஹாரு

Image
 #பதத்வயப்ரபாஜாலபராக்ருதஸரோருஹாரு அந்த ஒரு படி மேலே இருக்கிறது என்பதை இன்று பதிவாக காணலாம்.  இதுவரைக்கும் நாம் இரண்டையும் ஒப்பீடு செய்து கொண்டே வந்தோம். ஆனால்,  அது எந்த இடத்தில், எப்படி தாமரையை விட ஒரு படி மேலே இருக்கிறதெனில்,  தாமரை சூரியனைப் பார்த்து மலருகிறது அல்லவா!  சூரியனின் ஒளி பட்டால் தாமரை மலருகின்றது.  சூரியனின் ஒளிபட்டு சூரியனைப் பார்த்து தாமரை மலருகின்றது அவ்வளவுதான்.  ஆனால், அம்பிகையின் திருவடி தாமரையாக இருக்கிறது.  ஆனால், சூரியனைப் பார்த்து மலருகிற தாமரையாக இல்லை.  சூரியனே இறங்கி வந்து தாமரையானால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது,  அம்பாளின் திருவடி.  அதனால்தான் #ப்ரபாஜாலம் காண்பிக்கின்றது.  சூரியனுடைய ஒளியைப் பெற்று மலரும் தாமரை தானாக ஒளி வீச முடியாது.  தாமரைக்கு ஒளி வீசக்கூடிய தன்மை கிடையாது.  ஒளியைப் பெற்று மலரக் கூடிய தன்மைதான் உண்டு.  இரவு நேரமானால்,  தாமரை மீண்டும் கூம்பிவிடும்.  இருளில் நம்மால் தாமரையை பார்க்க முடியாது.  ஏனெனில், தாமரைக்கு என்று  ஒளி கிடையாது. ஆனால்,...