ஆன்மீகம் என்பது என்ன?.
ஆன்மீகம் என்பது என்ன?. ஆன்மீகம் என்பது ஆன்மாவை மேம்படுத்தல். ஆன்மாவை மேம்படுத்தல் என்பது இறைவனை நோக்கிய பயணமா?. ஆன்மீகம் எதைப்பற்றி பேசுகிறது. ஆன்மீகம் என்பது ஆன்மவைப் பற்றியது. அதன் தன்மையைப் பற்றியது. அதன் தன்மை படி நாம் வாழுகிறோமா என்பதைப் பற்றியது என டாக்டர் உ.வே. வெங்கடேசன் அழகாக தனது உபன்யாசத்தில் விளக்குகிறார். இது மூன்றும் உள்ளடக்கியதே ஆன்மீகம் என்கிறார். இதை சங்கரபகவத் பாதாள் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தின் மூலம் விளக்கலாம். பகவத்பாதாள் தனது சிஷ்யக்களுடன் கங்கை கரையில் ஸ்தானத்தை முடித்து வரும்வழியில் அவர்களுக்கு குறுக்கே ஒரு புலயையன் நாய்களுடன் வருகிறான். அந்த புலையனை பார்த்த ஶ்ரீசங்கர பகவத் பாதாள் அவரை விலகச் சொல்கிறார். அதற்கு அந்த புலையன் இந்த அழியும் தேகத்தை நகரச் சொல்லுகிறாயா அல்லது இந்த அழியாத ஆன்மாவை நகரச் சொல்கிறாயா என கேள்வி எழுப்புவார். மேலும் நீ எழுப்பிய கேள்வி உனது அத்வைத தத்துவத்திற்கு நேர் எதிரானது எனவும் சுட்டிக்காட்டுவார். நாம் ஞானத்தை யாரிடமிருந்தும் பெறலாம், தான் இன்னும் பக்குவபடவில்லை என உணர்ந்த பகவத் பாதாள் அவரது காலில் சாஷ்டங்கம...