சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
#சதாசிவம்
சத் மற்றும் சித் இணைந்தால் அதுவே
#சச்சிதானந்தம்.
சத்+சித்+ஆனந்தம்.
சித் என்பது தான் பரம்பொருள்
அதோடு #சத் தாகிய #அம்பாள் இணைந்தால் அது #ஆனந்த பெருக்கெடுக்கும்.
அதுவே தான் #மூலாதாரத்தில் #குண்டலியாக உறங்கும் #அம்பாள் மேலெழும் போது, ஆறு சக்கரங்களை
கடந்து சஹஸ்ஹாரத்தில் #சதாசிவனுடன் இணையும் பொழுது ஆனந்த பெருக்கடுக்கும் என்கிறது ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமம்.
இதை தான் உலகத்தில் மையப்புள்ளியாகிய
சிதம்பரம் = சித் அம்பலம் மறுவி சிதம்பரம்.
அங்கு தான் நடராஜன் நடம் ஆடுகிறான்.
சித் என்பது நமது உடம்பாகிய சித்தத்தில் அவன் ஆடுகிறான்.
உறைகின்ற நின் திருக்கோயில்:
நீ உறையும் உன்னுடைய கோயில் எது?
நின் கேள்வர் ஒரு பக்கமோ:
உன் கணவராகிய சிவபெருமான் இருக்கும் இடமா?
(பார்வதி தேவியான அபிராமி, சிவனுக்கு இடப்பாகம் அமர்ந்திருப்பதால்)
இதை தான் திருவருட்செல்வர் திரைப்படத்தில்.
#சித்தமெல்லாம் எனக்கு #சிவமயமே இறைவா…
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை…
அத்தன் இல்லாமல் அந்த சிவன் இல்லாமல் இந்த அம்மை இல்லை.
அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை…
அந்த அம்மையில்லாமல் இந்தப்பிள்ளை இல்லை…
லோகமாதாவாகிய அம்பாள் இல்லாமல் இந்த பிள்ளையாகிய அப்பர் என பாடி இருப்பார்.
சகலும் அம்மை மற்றும் அப்பனின் இணைவே தான் என்கிறது இந்த பாடல்.

Comments
Post a Comment