ஆன்மாவைப்பற்றிசிறிதுவிளங்கிக்கொண்டு பகுதி4
#முதலில்ஆன்மாவைப்பற்றிசிறிதுவிளங்கிக்கொண்டுபகுதி4 . பின்னர் மனிதனின் ஆறாம் அறிவு பற்றி ஆராயலாம். ஆன்மா இந்த உயிருடலில் எப்போது இணைந்து கொள்கிறது, உயிருடலில் ஆன்மா வாழும்போது அதன் செயற்பாடு என்ன, எப்போது இந்த ஆன்மாவானது உயிருடலில் இருந்து பிரிந்து செல்கிறது, ஆன்மா எங்கே செல்கிறது என்ற கேள்விகள் எல்லோரிடமும் உண்டு. மனித உடலினுள் ஆன்மா எப்போது புகுந்து கொள்கிறது என்று பார்ப்போமானால் ஒரு தாயின் கர்ப்பப்பையில் இருந்து ஒரு முழு வளர்ச்சியடைந்த சிசு வெளியேறி முதற் சுவாசம் நடைபெறும்போது அதன் உடலினுள் ஆன்மாவானது குடிபுகுந்து கொள்கிறது. அப்போது குழந்தை அழுதவாறு தனது இவ்வுலக சம்சாரத்தினை ஆரம்பிக்கின்றது. அதுவே அக்குழந்தையின் பிறப்பாக நேரம் குறிக்கப்படுகிறது. ஒரு விதையின் கோதை உடைத்து வெளிவரும் தாவர முளை அல்லது ஒரு முட்டையின் கோதை உடைத்து வெளிவரும் மீன் அல்லது பறவையின் குஞ்சுகளுக்கும் இவ்வுதாரணம் பொருந்தும். ஐம் புலன்கள் கொண்டு அறியும் திறன் ஆன்மாவினால் கையாளப்படுகிறது. இப்போது ஒரு உயிருக்கும் ஆன்மாவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் பு...