துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits
பகுதி 85. துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல். #லலிதாசஹஸ்ரநாமம்# ஸிஞ்ஜாநமணி மஞ்ஜீரமண்டிதா ஶ்ரீபாதாம்புஜா அழகிய ஒளிரும் இரத்தினங்களால் ஆன சிலம்புகளை அணிந்த கால்களை உடையவள். ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா தாமரைப் போன்ற மென்மையான கால்களை உடையவள். தாமரைக்கும் அம்பிகையின் திருவடிக்கும் என்ன ஒப்புமை எனில், தாமரை மென்மையானது. அம்பிகையின் திருவடியும் மென்மையானது. தாமரை வாசம் மிகுந்தது. அம்பிகையின் திருவடியும் வாசம் மிகுந்தது. தாமரை குளத்தில் பூக்கக் கூடியது. அம்பிகையினுடைய திருவடி பக்தனுடைய மனம் என்கிற குளத்தில் பூக்கக் கூடியது. ஸ்வாதீநவல்லபா ஸ்வதீனா வல்லபா = அவர் தனது அன்பான சிவனை சாராதவர், அதாவது (அவரது சுதந்திர விருப்பத்தில் இருப்பவர்) * ஸ்வாதீனா = சுய-நிலை /சுயாதீனமான / இலவச விருப்பமுள்ள வல்லபா = காதலன் அல்லது கணவர் - பிரியமானவர் அங்க என்றால் உடல். சில அறிஞர்கள் அங்காவை மடி என்று குறிப்பிட்டு "சிவனின் மடியில் அமர...

Comments
Post a Comment