Posts

Showing posts from October, 2025

பதத்வயப்ரபாஜாலபராக்ருதஸரோருஹா

Image
 #பதத்வயப்ரபாஜாலபராக்ருதஸரோருஹா இதற்கு முந்தைய நாமமான, #நகதீதிதிஸஞ்சன்னநமஜ்ஜனதமோகுணா…’’  என்று நகங்களைப்பற்றி பார்த்தோம். இந்த வர்ணனையில்  இந்த பாதத்தை நமஸ்கரிப்பவன் உடைய தமோகுணம் என்கிற இருட்டை,அறியாமையை ஒளிமயமான அம்பிகையின் கால் நகங்கள் எப்படி நீக்குகிறது என்று பார்த்தோம்.  இந்த நாமமான,  #பதத்வயப்ரபாஜாலபராக்ருதஸரோருஹா…’’  என்கிற இந்த நாமமானது, மொத்தமாக அம்பிகையினுடைய திருவடிகளை சொல்கிறது.  இதற்கு முன்பு அம்பிகையினுடைய கணுக்கால், பாதத்தினுடைய மேற்பரப்பு, நகங்களை தனியாகப் பார்த்தோம்.  இப்படியே ஒவ்வொன்றாக தனித்தனியாக பார்த்துக்  கொண்டே வந்தோம்.  இப்போது,  மொத்தமான திருவடியை இந்த நாமம் வர்ணிக்கின்றது.  இந்த நாமாவினுடைய அர்த்தத்தை பார்ப்பதற்கு முன்பு,  #பதத்வய’’ என்கிற வார்த்தை  அடுத்து வருகிற  #ப்ரபாஜாலா…’’ என்கிற நாமத்தை கொஞ்சம் விட்டுவிடுவோம். #பதத்வயபராக்ருதஸரோருஹா…’’ என்கிற பதத்தை எடுத்துக் கொள்வோம்.  இதில் வருகிற #ஸரோருஹம் எனில் #தாமரை என்று பொருள்.  #பராக்ருஹஸரோருஹா என்று சொன்னால்,  #தாமரையைவிட...

வீஷணங்கள் அம்பாளின் சந்நிதி அமைப்பு

Image
 #முதலாவதுஅமைப்பு     #பத்மவீஷணம்: என்பது,  ஒரு கோவிலில், சிவன் மற்றும் அம்மன் சன்னதிகள் ஒரே திசையை நோக்கி அமைந்திருக்கும் அமைப்பைக் குறிக்கிறது.  இந்த அமைப்பில், சுவாமியும் அம்மனும் ஒரே திசையை நோக்கி அருள் பாலிக்கிறார்கள்.  இது ஆகம சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வகையான அம்மன் சன்னதி அமைப்புகளில் ஒன்றாகும்,  மற்றவை அபிமுக வீஷணம் மற்றும் சமான வீஷணம்.  #உதாரணங்கள்:  #மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிவன் சன்னதிக்கு #வலப்புறமாக அம்மன் சன்னதி அமைந்துள்ளது. #பத்மவீஷணம்: #திருவண்ணாமலையில்  சிவனுக்கு #இடப்புறம் அம்மன் சன்னதி அமைந்துள்ளதும். #லிங்கவீஷணம்:   #பஞ்சதசிமந்திரம்மற்றும்அம்பாள்மூன்றுவிதமானசந்நிதிஅமைப்புகள் முக்கியத்துவம்:  ஆகம சாஸ்திரங்கள் இவ்வாறான அமைப்பை அனுமதிக்கின்றன. சமான வீஷணம் தவிர, இரண்டு வகையான வீஷணங்களும் உள்ளன:  #அபிமுகவீஷணம்:  சுவாமியும் அம்பாளும் எதிரெதிரே பார்த்துக் கொள்ளும் நிலை இது. இது ஒரு அபூர்வமான அமைப்பு மற்றும்  திருக்கடையூர்,  காளஹஸ்தி போன்ற தலங்களில் காணப்படுகிறது. #சம...

பஞ்சதசிமந்திரம்மற்றும்அம்பாள்மூன்றுவிதமானசந்நிதிஅமைப்புகள்

Image
 #பஞ்சதசிமந்திரம்மற்றும்அம்பாள்மூன்றுவிதமானசந்நிதிஅமைப்புகள் " பஞ்சதசாக்ஷரி மந்திரத்தில் வரும் மூன்று கூடங்களைப் பற்றி மற்றும் கோயில்களில் அம்பாள் சன்னதிகள் அமையும் மூன்று விதமான அமைப்புகள். அம்பாளின் மந்திரங்களில் உள்ள மூன்று கூடங்கள்,  ஞானத்தைப் பெறுவதற்கும்,  மூன்று விதமான பாசங்களிலிருந்தும் விடுபடுவதற்கும் உதவும் என நம்பப்படுகிறது.  மந்திரங்களில், அம்பாள் சன்னதி மூன்று விதமாக அமையலாம்: சவாமியும் அம்பாளும் ஒரே திசையில் இருக்கும் சமான வீஷணம், சுவாமிக்கு வலப்புறம் அம்பாள் இருக்கும் பத்ம வீஷணம்,  மற்றும் சுவாமிக்கு  இடப்புறம் அம்பாள் இருக்கும்  லிங்க வீஷணம் என்பவை அந்த அமைப்புகள் ஆகும். மந்திரத்தில் உள்ள மூன்று கூடங்கள்: பஞ்சதசாக்ஷரி மந்திரம்:  இது அம்பாளின் மந்திரங்களில் ஒன்று, இதில் மூன்று கூடங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பொருள்:  இந்த மூன்று கூடங்களும், மூன்று விதமான பாசங்களிலிருந்தும் விடுதலை பெறவும், ஞானத்தைப் பெறவும் உதவுவதாகக் கருதப்படுகிறது.  கோவிந்த தாமோதர சுவாமிகள் இதை தினமும் மூன்று முறை சொல்லி,  பாசங்களில் இருந்து விட...

பெரியவா எப்படி தடுத்து ஆட்கொண்டார்..?

Image
 இந்தமஹாகவிஞனை,  #தெய்வீகசிந்தனையாளனை…  பெரியவா எப்படி தடுத்து ஆட்கொண்டார்..? என்பதை நாளைய பதிவாக காணலாம். பரம முருக பக்தரான, ஸாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாஸனும், ஒரு படப்பிடிப்பு ஸம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது பயங்கரமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாஸனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்து, ரொம்ப ஸீரியஸ்ஸான நிலையில் மருத்துவமனையில் இருந்தார். பெரியவாளிடம் மிகுந்த பக்தியும் மர்யாதையும் கொண்ட தேவர், ஶிவாஸ்தானம் எனப்படும் ப்ரஹ்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்த பெரியவாளை தர்ஶனம் செய்தார்… ” ஸாமி….! ஷூட்டிங் முடிஞ்சு வரப்போ…. பெரிய ஆக்ஸிடென்ட் ஆயிருச்சு….” என்று சொன்னவுடனேயே,  பெரியவா கேட்ட கேள்வி…….. ” கண்ணதாஸன் எப்டியிருக்கான்?’ அதிர்ந்து போனார் தேவர்! கண்கள் கலங்க, வியப்பும் வருத்தமுமாய்…நா தழுதழுக்கக் கூறினார். “அவர் ஏகப்பட்ட காயத்தோட.. ஆஸ்பத்ரில இருக்காரு.  இன்னும் நெனைவு வரல” தேவரைக் கனிவோடு பார்த்தார் பெரியவா… ‘ஸெரி …கவலைப்படாத!  இந்தா… இந்த விபூதிய…. எடுத்துண்டுபோயி..  அவன் நெத்தில இட்டுட்டு, வாய்...

கண்ணதாசன்ஐயாவும் #மஹாபெரியவாவும்.

Image
 #கண்ணதாசன்ஐயாவும் #மஹாபெரியவாவும். நாஸ்திகமும், ஆஸ்திகமும் இணைந்தே இருந்திருக்கிறது. ஆனால்,  தனிப்பட்ட ஒருவன்,  கடவுளை நம்புவதோ,  நம்பாமல் இருப்பதோ அவனுடைய இஷ்டம்.  அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. ஆஸ்திகனாக இருப்பவன், ஒருநாளும் “கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி” என்று தரக் குறைவாக பொது இடங்களில் பேசியதாக இருக்காது. நாஸ்திகத்தால், ஆஸ்திகத்துக்கு கொடுமையான தீங்கிழைக்கத்தான் முடிந்ததே தவிர,  இறைவனை அழிக்க முடியாது! ஆஸ்தீகத்தையும் அழிக்க முடியாது! ஆனால் அரசாங்கம் என்று வரும் போது,  அது நடுநிலை சார்ந்ததாக இருக்க வேண்டும்.  எந்த மதத்தையும் புண்படுத்துவதாக எந்த அரசாங்கமும் செயல்படக் கூடாது. பழமையும், பெருமையும் வாய்ந்த தமிழ்நாட்டில், சேர-சோழ-பாண்டியர்களின் வீரத்தைப் பற்றி நம்புவோம்;  அவர்கள் வானளாவ பிரம்மிக்கும் படியாக கட்டிய கோவில்கள் இறைவனுக்குத்தானே? திவ்ய ப்ரபந்தத்திலேயே திராவிடர் என்ற குறிப்பு இருப்பதை ஏற்றுக் கொள்ளுவோம்;  அதே திவ்ய ப்ரபந்தமும் இறைவனின் புகழை மட்டுந்தானே பாடுகிறது? கண்ணகி இருந்ததாக நம்புவோம். அவளுக்கு சிலை எடுப்போம். ...

பெரியவாளைப்பற்றி, #கவிஞர் #கண்ணதாஸனின்#

Image
 #பெரியவாளைப்பற்றி, #கவிஞர் #கண்ணதாஸனின்# மற்றொரு அழகான காவியம்…. “மனிதாபிமானத்திலிருந்து மத அபிமானம் வரை; விஞ்ஞானத்திலிருந்து  மெய்ஞானம் வரை;  மனித மனோ பாவத்திலிருந்து தெய்வகுணங்கள் வரை  காஞ்சிப் பெரியவர்கள் தொடாத துறை எதுவுமே இல்லை.  அவர் விளக்கிச் சொன்னது போல் வேறு எந்த ஞானியும், மேதையும் விளக்கிச் சொன்னதாகவும் எனக்கு நினைவில்லை. அவரது தனிமை,  கல்வி,  அறிவு,  நுண்மான் நுழைபுலம், தீர்க்கதரிசனம்,  ஒரு தெளிவான பொருளில் கூட, ‘தனது அபிப்ராயம்’ என்ற பணிவான முத்திரை,  இவையெல்லாம் வேறு எவரிடமும் காண முடியாத அம்சங்களாகும். பல இடங்களில், அனுபவப்பட்ட சம்சாரிகள் கூடக் காண முடியாத கருத்துக்களை,  அப்பழுக்கற்ற துறவியான அவர் காண்கிறார். ஜாதியைக் கடந்த ஒரு நியதியை சமமாக போதிக்கிறார்.  அவரது எழுத்துக்களை “கல்கி”யில் படித்தபோது,  அவற்றைத் தொகுத்து புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்தது. அந்த வேலையை வேறு நண்பர்கள் மிக அழகாகச் செய்து வருகிறார்கள். இந்து சமயமும், இந்திய நாடும் அவர்களுக்குக் கடமைப் பட்டிருக்கின்றன. ஒரு மாபெரும...

கவிஞர்கண்ணதாஸன்கண்ட மஹாபெரியவா

Image
 #கவிஞர்கண்ணதாஸன்கண்ட  #பெரியவா#. படித்ததில் பிடித்தது. நண்பரின் பதிவு. தன் வாழ்க்கையில்,  ஒரு குறைப்பட்ட காலத்துக்கு,  ஹிந்து தர்மத்தையும்,  புராணங்களையும்,  ஶ்ரீ ஆதி ஶங்கராச்சார்யாளையும்,  நம் பெரியவாளையும்,  கண்டபடி விமர்ஸனம் செய்து  வந்த கவிஞர் கண்ணதாஸன்,  பெரியவாளால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டு,  ஸத்யத்தை உணர்ந்த பின்,  எழுதிய ஒரு முன்னுரை…… ” இளம் பிராயத்தினரிடையே கட்டுப்பாட்டையும்,  ஒழுக்கத்தையும் வளர்த்து,  மரணகாலம் வரை அவர்களை உயர்ந்தவர்களாக வாழச் செய்ய,  நம்முடைய மூதாதையர்கள்  எடுத்துக் கொண்ட முயற்சி,  கொஞ்ச நஞ்சமல்ல.  அக்காலத்தில் குருபக்தியினாலும்,  குருகுல வாஸத்தினாலும்,  அறம் நிறைந்த அந்தணர்களாக,  மானிட ஜாதியின் எல்லாப் பிரிவினரும் திகழ்ந்தார்கள்.  பஞ்சமா பாதகங்கள் மிகவும் குறைவாகவே இருந்தன.  சூழ்நிலை,  நிர்பந்தங்களால்,  ஒருவன் தவறு செய்தாலும்,  அந்தத் தவறுக்காக,  வருந்தும் ஸ்வபாவமுடையவனாக இருந்தான். குருவையே கல்லாலடிக்கும் குணக்கேடோ,  இளம...

நான்எனும்அகங்காரம்எப்போதுநம்மில்அடங்கும்

Image
 #நான்எனும்அகங்காரம்எப்போதுநம்மில்அடங்கும் . நான் என்ற எண்ணம் எப்போது  நம் மனதில் எழும்?. எல்லாம் எனக்கு தெரியும் என்ற எண்ணம் இருக்கும் போது. அல்லது கைநிறைய பணம் இருந்து, அதை வைத்து எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் இருக்கும் போது. நம்மில் அகங்காரம் எழும். #மஹான்களுக்கு#இருக்கிற# #எண்ணம்# அவர்களுக்கு #நான்யார்என்கின்ற கேள்வி எழும்?. இரமணருக்கு எழுந்த கேள்வி இதுவே. நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் . அவர்கள் நம்மால் ஒன்றும் நடப்பத்தில்லை . நமக்கு மேல் உள்ள #சக்தி#நம்மை இயக்கிறது எண்ணம் அவள்களிடம் உள்ளது. அதனால் அவர்களுக்கு அவ்வாறு கேள்வி எழுக்கிறது. ஆனால் நாம் நம்மால் தான் எல்லாம் நடக்கிற என்ற எண்ணத்தால், அதனால் நமக்கு அகங்காரம் தலைக்கு ஏறிக்கிறது. இவை அனைத்தும் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவம். எனக்கு எப்போது தெளிவு வந்தது. முன்பே குறிப்பிட்டது போல் 2018ல் வாழ்க்கையில் ஒரு சரிவு. அப்போது ஆன்மீகத்தை நோக்கிய பயணம். அந்த ஆன்மீக பயணத்தில் உட்பட்டபோது இந்த தெளிவு வந்தது. இதை தான் மஹான்கள் உன்னில் ஆன்மீகம் வந்ததால் அதை நீ உணர்ந்தால்.நான் எதற்கும் காரணம் இல்லை,நான் ஒரு  கருவி என்னை...

மஹாப்ரளய சாக்ஷிணீ =

Image
நேற்றைய பதிவில் பட்டரின் அபிராமி அந்தாதி 56பாடலில். ஒன்றா அரும்பி பலவாய் விரிந்து. இங்கு எது ஒன்றாய் அரும்பியது அதுவே பரபிரம்மம் . அதுவே சாக்தத்தின் படி சக்தி சொரூபம். அதுவே ஆதிபராசக்தி. பரபிரம்மத்தின் சக்தி வெளிபாடே ஆதிசக்தி. அது சக்தி சொரூபமே இதற்கு மூலம்  காமேஸ்வரன் காமேஸ்வரி இணைவே  இது எதற்காக லோக சிருஷ்டிகாக. சிருஷ்டி இல்லையென்றால் உலகில் எதுவும் இல்லை. இதைதான் சங்கரபகவத் பாதாள்  அமிர்தம் சாப்பிட பிரம்மன் /விஷ்ணு/தேவேந்திரன் முதலானோர் ப்ரயள காலத்தில் ஒன்றம் இல்லாமல் போனார்கள். ஆனால் ஆலகால விஷத்தை சாப்பிட ருத்ரன் மட்டும் எவ்வாறு உன்னோட இருந்தார் என்ற கேள்வியை எழுப்பி இருப்பார்  இதை தான் ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமம் மஹாப்ரளய சாக்ஷிணீ = பிரபஞ்சத்தின் ஒடுக்கத்தை காணும் சாக்ஷியாக  (ஒரே சாக்ஷியாக)  விளங்குபவள் * ப்ரயளக்காலத்தில் ருத்ரன் ஆடும் ருத்ரதாண்டவத்திற்கு சாக்ஷியாக அம்பாள் விளங்குகிறாள். ச்ருஷ்டி போது இருவர் மட்டும் உள்ளனர் . அதே போல் ப்ரளய காலத்தில் இருவர் மட்டும் உள்ளனர். எனவே அதுவே ஆரம்பம் அதுவே முடிவும் கூட. பிரபஞ்சத்தின் துவக்கமும் ஒடுக்கமும் நியதிப்படி...

#அபிராமிஅந்தாதி56வதுபாடல்

Image
 #அபிராமிஅந்தாதி56வதுபாடல் ஒன்றாய் அரும்பி  பலவாய் விரிந்து  இவ்வுலகு எங்குமாய் நின்றாள்  அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே பொன்றாது  நின்று புரிகின்றவாறிப் பொருள் அறிவார் அன்று ஆலிலையில்  துயின்ற பெம்மானும்  எம் ஐயனுமே. அபிராமி என்பது யார்?  அந்த மாபொருள் என்ன?  இதை யாரேனும் விளக்க முடியுமா? விளக்க முற்படுகிறாற் பட்டர் இங்கே. அவள் ஒன்றாய் இருக்கிறாள்.  எதில் ஒன்றாய் இருக்கிறாள்  #அவளேஆதிபராசக்தி. #அவளேலோகரக்க்ஷி #அவளேஜகத் ஜனனி எங்கு காணப்படும் பொருளும் அவளே. பின்னர்,  அவளே,  உலகில் உள்ள அனைத்து பொருள்களாகவும் விரிந்து  பரந்து காணப்படுகிறாள். #அவளேமுப்பெருந்தேவி# லெக்ஷ்மி சரஸ்வதி பார்வதி #அவளேமுப்பிரம்மாக்கள் பிரம்மா விஷ்ணு சிவன் இதை தான் ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம்  #பஞ்சப்ரேதசனா என்கிறது. #பஞ்சப்ரேதங்கள்:  பிரம்மா, விஷ்ணு, ஈஸ்வரன், அடுத்த நிலை மறைத்தல் மற்றும் அருளுதல் ருத்ரா மற்றும் சதாசிவன் ஆகிய ஐந்து தெய்வங்களைக் குறிக்கிறது.  'ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து' என்ற தொடர்,  நமக்கு,...

பாதாரவிந்தத்தில் சரணாகதி?

Image
எவ்வாறு அம்பாள் பாதாரவிந்தத்தில் சரணாகதி? சில விஷயங்கள் காலகடந்து தான் தெரிகிறது.  அவ்வாறான ஒன்று தான் அம்பாளுடன் எனக்கு ஏற்பட்ட பிணைப்பு. முன்பு பதிவிட்டது போல் 2004-2005 ஆண்டு குலத்தெய்வம் வழிபாடு . அது எனது 32வயதில் தரிசனம். இது முடிந்த பிறகு  அம்பாள் உபசாகர் ஒருவர் மூலம் எங்கள் வீட்டில் பதினாறு விளக்குகளில் அம்பாளை ஆவாஹணம் செய்து துர்கா ஸப்தசதி பாராயணம் நடந்தது. அந்த காலகட்டத்தில் இதைப்பற்றிய நான் அதிகம் அறியாத காலகட்டம் சப்தசதி பாராயணம் முடிந்த பிறகு அம்பாள் உபாசகர் பூஜையில் வைத்து வழிபட்ட ஶ்ரீலலிதா திரிபுர சுந்திரியின் திருவுருவ படம்  எங்கள் வீட்டிற்கு வந்து அடைந்தாள்.   அவரின் உபதேசம் தினமும் ஶ்ரீலலிதாசஹஸ்ர நாம பாராயண செய்யச் சொல்லி அறிவுரைச் செய்தார். இது முடிந்து கிட்டத்தட்ட 2014வாக்கில் என மனைவியின் அறிவுறுத்தலின் படி ஸ்வாமிக்கான பூஜைகள் தினம்தோறும் ஆரம்பித்த காலகட்டம். தீடீரென்று 2018ல் வாழக்கையில் ஒரு தடுமாற்றம் அப்போது எந்த வழியில் செல்லலாம் என நினைத்தப்போது. நான் தீர்மானித்தது ஆன்மீக வழியில் செல்லாம் என்ற எண்ணம் எனது மனதில் உதயமானது. அப்போது தான் ஶ...

செங்கனூர் மஹாதேவர் மற்றும் பகவதியும்

Image
 கடந்த இரு தினங்களாக செங்கனூர் பகவதி பற்றிய பதிவு. ஏனென்றால் எத்தனை பேருக்கு இந்த கோவில்  தெரியும் என்று தெரியவில்லை. ஆனால் சபரிமலை செல்பவர்கள் இங்கு இறங்கி தான் பம்பைக்குச் செல்வர். அம்பாள் எங்களுக்கு அடிமை காவு தெய்வம் என்றாலும்.  எனது அப்பாவுக்கு அது பற்றி எதுவும் தெரியவில்லை.  ஆனால் எனது ஜாகத்தை கணித்த வள்ளுவன். அவர்கள் எங்கள் ஊர்ப் பக்கம் மிகவும் பிரசித்திப் பெற்றவர்கள் ஜாதகம் கணிப்பத்தில் கைதேறியவர்கள். அவ்வாறு எனது ஜாதகத்தை கணித்த போது, அவர் சொன்னது எனது ஜாதகத்தில் ஒரு பெண்தெய்வம் தெரிக்கிறது என்று.  எனது அம்மாவின் முயற்சியில் அவர்களுக்கு தெரிந்த ஜோசியரிடம் சோழிப் பிரசன்னம் போட்டுப்பார்த்த போது தெரியவந்தது அம்பாள் சிறிய உருவமாக செங்கனூர் பக்கம் இருக்கிறாள் என்ற தெரிய வந்தது. எனது முறையாவது அம்பாளை தரிசிக்க வேண்டும் என்று செங்கனூர் நோக்கி பயணம் 2004-2005 வாக்கில். செங்கனூர் சென்று அங்கு ஒரு தங்கும் அறை எடுத்து குளித்துவிட்டு செல்லாம் என்ற எண்ணம். அம்பாள் கோவில் எங்கு என இருக்கிறது என்று  விசாரித்தால் அது செங்கனூரில் இருந்து 12கிமீ தொலைவில் இருக்கிற என...

செங்கனூர் பகவதி கோவில்

Image
முந்தைய நாள் பதிவில் குறிப்பிட்டது போல் செங்கனூர் பகவதி கோவில் பற்றிய பதிவு. பதிவு இரண்டு கோவிலின் தோற்றம் இவ்வளவு கதைகள் பின்னனியில் இருந்தாலும் பகவதியின் கருணை எல்லையற்றது. வேண்டுவோருக்கு வரம் தரும்  வரத முத்திரையுடனும் அஞ்சியோருக்கு அபயம்  அளிக்கும் அபய முத்திரையுடனும் தேவி காட்சி தருகிறாள் கோவிலில்  கணேசர்,  நீலக்ரீவன்,  சண்டீசன்,  கிருஷ்ணர் மூர்த்திகளும் உள்ளனர்.  வடக்குப் பக்கத்தில் ஊட்டுப் புரா  என்னும் டைனிங் ஹால் இருக்கிறது; கோவில் மதிலுக்கு வெளியே சக்தி குண்டம் தீர்த்தம் இருக்கிறது. கோவில் வளாகத்தில் நிறைய  அரச மரங்கள் இருக்கின்றன.  மேல நடா அரச மரம் பேயோட்டுமிடமாக இருக்கிறது; சோட்டாணிக்கரா போலவே அந்த அரச மரத்தில் ஆணி அடித்தால் மன நோய் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்தக் கோவிலில் தினமும் புஷ்பாஞ்சலி செய்வதும் குறிப்பிட்ட நாட்கள் பஜனை செய்வதும் நினைத்தை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையும்  இருக்கிறது.. மாத விடாயை எப்படி அறிகிறார்கள் ? #தேவியின்விக்கிரகம்பஞ்சலோகம் என்னும் ஐம்பொன்னால் FIVE METAL ALLOY ஆனது.  இதில் மாத விலக்கு ...

#அபிராமிஅந்தாதி53வதுபாடல்

Image
 #அபிராமிஅந்தாதி53வதுபாடல் சின்னஞ் சிறிய மருங்கினில்  சாத்திய செய்ய பட்டும் பென்னம் பெரிய முலையும்,  முத்தாரமும்,  பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழலும்,  கண் மூன்றும்,  கருத்தில் வைத்துத் தன்னந்தனி இருப்பார்க்கு,  இது போலும்  தவம் இல்லையே. ஏ, அபிராமி!  மென்மையான இடையில்,  செம்மையான பட்டணிந்தவளே! அழகிய பெரிய முலைகளில் முத்தாரம் அணிந்தவளே!  வண்டுகள் மொய்க்கும் பிச்சிப்பூவைக் கன்னங்கரிய குழலில் சூடியவளே!  ஆகிய மூன்று திருக்கண்களை உடையவளே! உன்னுடைய இந்த அழகையெல்லாம் கருத்திலே கொண்டு தியானித்திருக்கும் அடியார்களுக்கு இதைவிடச் சிறந்த தவம் ஏதுமில்லை. தன்னந்தனியிருப்பார்க்கு  இது போலும் தவமில்லையே சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும் -  உன் சின்னஞ்சிறிய இடையில் அணிந்திருக்கும் சிவந்த பட்டாடையையும் பென்னம்பெரிய முலையும் -  உன் பெரிய முலைகளையும் முத்தாரமும் -  அந்த முலையின் மேல் இருக்கும் வெண் முத்து மாலையையும் பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழலும் -  பிச்சிப்பூ சூடியிருக்கும் கரிய கூந்தலும் 'சின்னஞ்சிறு பெண் ப...

நவராத்தியில் வழிபடும் மற்ற ஐந்து துர்கைகள்.

Image
 நவராத்தியில் வழிபடும் மற்ற ஐந்து துர்கைகள். 05.#ஸ்கந்தமாதா (Skandamata) (சமசுகிருதம்:स्कन्दमाता)  ஸ்கந்தன் எனும் கார்த்திகேயனின்தாயும், பார்வதியின் அம்சமான நவ துர்கைகளில் #ஐந்தாமவர். நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாளில் பக்தர்களால் ஸ்கந்தமாதா வழிபடப்படுகிறார். 06.#காத்யாயனி (Katyayani)  என்பது இந்து மதத்தில் நவராத்திரி கொண்டாட்டங்களில் துர்கா வழிபாட்டின் போது #ஆறாவது நாளில் வழிபடப்படும் சக்தியின் வடிவமாகும்.  காத்யாயனியின் வடிவம் நான்கு அல்லது பத்து அல்லது பதினெட்டு கைகளால் சித்தரிக்கப்படலாம்.  இது அமரகோசம் என்ற சமஸ்கிருத அகராதியில் தேவி ஆதி பராசக்திக்கு வழங்கப்பட்ட இரண்டாவது பெயர் ஆகும்.  இந்த அகராதியில் தேவி பார்வதியின் மற்ற பெயர்களாக  #உமா#காத்யாயனி#கவுரி#காளி##ஹைமாவதி#ஈஸ்வரி# போன்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. புராணங்களில் சீதா தேவியார் மற்றும் ருக்மணி ஆகியோரால் தங்களின் கணவரின் நலனுக்காக வேண்டப்பட்ட பெண் தெய்வமாக காத்யாயனி இருக்கிறார். 06.#காளராத்திரி (Kalaratri) (சமசுகிருதம்:कालरात्रि)  பார்வதியின் அம்சமான நவ துர்கைகளில் ஒருவர். இத்தாய் தெய...

இந்த வருட நவராத்திரி பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது.

Image
இந்த வருட நவராத்திரி பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. காரணம் இது நாள் வரை ஶ்ரீலலிதா திரிபுரசுந்தரியின் திருவரு படத்திற்கு ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமத்தை பாராயணம் செய்ய வைத்த அம்பாள். இந்த வருடம் ஶ்ரீமஹாமேரு மற்றும்  ஶ்ரீ சக்கர அதாவது தேவிகட்கமாலா ஸ்லோகத்தில் கூறியது போல ஒவ்வொரு ஆவாவரணத்திலும் உரிய தேவதைகள் அடங்கிய   திருவுருவ படத்திற்கு ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமத்தை பாராயணம் செய்யும் பாக்யத்தைக் கொடுத்தாள். மேலும் நாம் செய்த பாராயணத்தை ஏற்றுக்கொண்டால் என்பதற்கு உதாரணமாக பல சுமங்கலி பெண்கள் தாம்பூலம் பெற்றுக் கொண்டனர். அதில் மிகமுக்யம் ஒரு சுமங்கலி வெள்ளியன்று மாமி தாம்பூலம் கொடுக்கங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள் நம்ம வீட்டிற்கு நீங்கள் கூப்பிட்டா வரவேண்டும்.  எனக்கு வரவேண்டும் என தோன்றியது அதனால் நான் வந்தேன் என்ற பதில் வந்தது. தினமும் குங்குமத்தால் சஹஸ்ரநாம பாராயணம் செய்ய வைத்தவள்.  நேற்று செவ்வாயன்று மாதுளை மொட்டால் அர்ச்சனை செய்ய வைத்தாள். அதை தான் அவள் ஏற்று கொண்டால் என்பதற்கு உதாரணம்.  மாதுளை மொட்டை எனது மனைவியிடம் காட்டிய போது.  அதை அவள் பிரசாதம் எண்ணி வாயி...