கண்ணதாசன்ஐயாவும் #மஹாபெரியவாவும்.
#கண்ணதாசன்ஐயாவும் #மஹாபெரியவாவும்.
நாஸ்திகமும், ஆஸ்திகமும் இணைந்தே இருந்திருக்கிறது.
ஆனால்,
தனிப்பட்ட ஒருவன்,
கடவுளை நம்புவதோ,
நம்பாமல் இருப்பதோ அவனுடைய இஷ்டம்.
அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.
ஆஸ்திகனாக இருப்பவன்,
ஒருநாளும் “கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி” என்று தரக் குறைவாக பொது இடங்களில் பேசியதாக இருக்காது.
நாஸ்திகத்தால், ஆஸ்திகத்துக்கு கொடுமையான தீங்கிழைக்கத்தான் முடிந்ததே தவிர,
இறைவனை அழிக்க முடியாது!
ஆஸ்தீகத்தையும் அழிக்க முடியாது!
ஆனால் அரசாங்கம் என்று வரும் போது,
அது நடுநிலை சார்ந்ததாக இருக்க வேண்டும்.
எந்த மதத்தையும் புண்படுத்துவதாக எந்த அரசாங்கமும் செயல்படக் கூடாது.
பழமையும், பெருமையும் வாய்ந்த தமிழ்நாட்டில்,
சேர-சோழ-பாண்டியர்களின் வீரத்தைப் பற்றி நம்புவோம்;
அவர்கள் வானளாவ பிரம்மிக்கும் படியாக கட்டிய கோவில்கள் இறைவனுக்குத்தானே?
திவ்ய ப்ரபந்தத்திலேயே திராவிடர் என்ற குறிப்பு இருப்பதை ஏற்றுக் கொள்ளுவோம்;
அதே திவ்ய ப்ரபந்தமும் இறைவனின் புகழை மட்டுந்தானே பாடுகிறது?
கண்ணகி இருந்ததாக நம்புவோம். அவளுக்கு சிலை எடுப்போம்.
அப்படியானால் மதுரையை எரித்த ஶக்தியாக கண்ணகியை, தெய்வமாகத்தானே வணங்குகின்றனர்?
உருவ வழிபாடு உள்ள ஹிந்து மதத்தை கேலி செய்வோம்;
பிள்ளையார் சிலைகளை காட்டுமிராண்டித்தனமாக உடைப்போம்.
அப்படியானால், தங்கள் தலைவர்களுக்கு மட்டும் சிலை வைத்து மாலை போட்டு வணங்கத்தானே செய்கிறார்கள்?
#இந்தமஹாகவிஞனை,
#தெய்வீகசிந்தனையாளனை…
பெரியவா எப்படி தடுத்து ஆட்கொண்டார்..? என்பதை
நாளைய பதிவாக காணலாம்.

Comments
Post a Comment