அபிராமிஅந்தாதிபாடல்2#
#அபிராமிஅந்தாதிபாடல்2# துணையும் தொழும் தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்டவேரும் பனிமலர்ப்பூங்கணையும் கருப்புச் சிலையும் மென்பாசாங் குசமும் கையில் அணையும் திரிபுர சுந்தரி ஆவதறிந்தனமே. தனது உயிருக்கு ஆபத்து என்ற போதிலும் அவருடைய சிந்தனை அம்பாளின் மீது இருந்த அசைக்கமுடியாத பற்றால் வந்து விழுந்த வார்த்தைகள் இவை. அதன் பொருள். அபிராமி அன்னையே எனது துணை, பின் வரும் பாடலில் (விழிக்கு துணை - அபிராமிவல்லி) நான் தொழும் தெய்வம், என்னை பெற்ற தாயும் அவளே. (அவளே லோகமாதா என்கிறார்) அவளே வேதம், (அவளே வேதமாதவான காயத்ரி) அதன் கிளை, வேர் அனைத்தும். (உபநிடதங்கள் மற்றும் காவியங்கள் அனைத்தும் அவளே என்கிறார்). தன் நான்கு கரங்களில், மலர்களால் ஆன அம்பு, கரும்பினால் ஆன வில், மென்மையான பாசம் (கயிறு) [இதிலும் மென்மை. அன்னையின் கருணை. சொற்ப விஷயங்களில் பற்று வைக்காதே, என பக்தனை மெல்லிய கயிற்றினால் கட்டுகிறாள்.] அங்குசம் ஆகியவற்றை கொண்டுள்ள திரிபுரசுந்தரி என்ற அன்னை அபிராமியை அறிந்து கொண்டே...