Posts

Showing posts from April, 2025

ஆசார்யாள் காட்டும் அம்பாள் : பகுதி 2

Image
ஆச்சாரியர் பகவத்பாதாள் பார்வையில் அம்பாள். ஆசார்யாள் காட்டும் அம்பாள் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி) பகுதி 2 தமக்கும்கூட அவளது அநுக்கிரஹம் வேணும் என்று சொல்வதிலிருந்தே, நியாயப்படி பார்த்தால் நமக்கு அதைப் பெற தகுதி இல்லை என்று நினைப்பது ஸ்பஷ்டமாகத் தெரிகிறது.  எந்த யோக்கியதையும் இல்லாமலே உன் அருளைக் கேட்கிறேனம்மா’ என்று சொல்லாமல் சொல்கிறார். ஞானத்திலாகட்டும், பக்தியிலாகட்டும், புத்தியிலாகட்டும்,  வாக்கு வன்மையிலாகட்டும்,  காரிய சக்தியிலாகட்டும், கருணையிலாகட்டும்,  நம் ஆச்சாரியாளைப் போல  பூரண யோக்கியதை உள்ளவர்கள் அவருக்கு முந்தியும் இல்லை, பிந்தியும் இல்லை. அப்படியிருந்தாலும் நமக்கெல்லாம் வழிகாட்டியாக,  நாம் அடக்கத்துடன் எப்படி அம்பாளைப் பிரார்த்திக்க வேண்டும் என்று,  நமக்குச் சொல்லிக் கொடுக்கிற மாதிரி  மாமபி, மமாபி (என்னையும்கூட கடாக்ஷி! எனக்கும்கூட திருவடியைத் தா என்கிறார்). யோக்கியதை இல்லாமல் கேட்கலாமா என்றால் நியாயப்படி அது சரியில்லைதான்.  ஆனால், நிறைய அநியாயங்களைப் பார்க்காமல்,  நல்லதையே செய்துகொண்டிருக்கிற அன்பு மயமான வஸ்துக்களும்...

அனைத்தும்அம்மையும்அப்பனுமே#

Image
 #அனைத்தும்அம்மையும்அப்பனுமே#. இங்கு உலகு என்பது அம்மையும் அப்பனையும் குறிக்கும். காரணம் உடல் அப்பன் ஆனால் உயிர் அம்மையாவள். இவர்கள் இருவரும் இணைந்த இணைவே இந்த உலகு. அம்மை அப்பனுடன் இணைந்து இருந்தால் தான் இந்த உலக இயக்கம் நடக்கும். அம்பாள் தாக்க்ஷாயணியாக அவரித்த போது தக்க்ஷன் செய்த யாகத்தில் சிவப்பெருமானுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை கொடுக்காதாதல்.   அந்த யாக குண்டத்தில் தனது உயிரை மாயித்துக்கொள்கிறாள். இதை அறிந்த சிவப்பெருமான் எரித்த அம்பாளின் உடலை சுமந்து பைத்தியம் பிடித்தார் போல் உலகை சுற்றி வருகிறார். இதனால் உலக ஸ்தம்பித்து விடுகிறது.  இதை அறிந்த மஹாவிஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தால் அம்பாளின் 51 உடல் பாகங்கள் துண்டிக்கபாபட்டு அவை 51இடங்களில் விழுந்தது. அதுவே தற்போது 51சக்தி பீடம் என அழைக்கபடுகிறது. இதன் பிறகு சிவபெருமான் மலைக்குயில் தவத்தில் அமர்கிறார். சிவப்பெருமான் ஹிமவான் மகள் பார்வதியை மணப்பதற்காக.  காமன் மூலம் தவத்தை கலைக்கிறார்கள் தேவர்கள். சிவனின் மூக்கண்ணால் எரிந்த சாம்பலாகிறான் மன்மதன். பிறகு சிவன் மற்றும் பார்வதி திருமணம் நன்கு நடக்கிறது. அம்பாளின் பக...

#அபிராமிஅந்தாதிபாடல்10#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்10# மோக்ஷம் பெற்று தரும் நின்றும்  இருந்தும்  கிடந்தும்  நடந்தும்  நினைப்பது உன்னை என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் -  எழுதா மறையின் ஒன்றே,  அரும்பொருளே ,  அருளே ,  உமையே,  இமயத்து அன்றும் பிறந்தவளே,  அழியா முக்தி ஆனந்தமே பொருள்: இமயத்தின் புதல்வியே,   எழுதப்படாத (காதால் கேட்கப்பட்டு வழி வழியாய் வந்த) வேதமே,  அதன் பொருளே,  அருளே வடிவான உமையே,  நான்,  நின்றாலும்,  அமர்ந்தாலும்,  படுத்தாலும்,  நடந்தாலும்,  என்றும் நினைப்பது உன்னையே. வணங்குவதும் உன் மலர் பாதங்களையே.  இதனால் எனக்கு  கிடைக்கப்போவது முக்தி.  அதுவே என்றும் அழியாத பரமானந்தம். அம்பாளை  ஹிமகிரி தனயே,  ஹிமகிரி புத்ரி,  ஹிமாச்சல தனயே,  ஹிமாத்ரி சுதே,  என்றெல்லாம் பெரியோர்கள் கீர்த்தனம் செய்துள்ளார்கள். காதால் கேட்டு வழி வழியாய் வந்ததால்,  வேதத்திற்கு ஸ்ருதி  என்று பெயர். இதே போல,  சௌந்தர்ய லஹரி, 27-வது ஸ்லோகத்தில்,  ஸ்ரீ பகவத்பாதாள் கூறுகிறார்: ஜபோ ...

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) பாகம் 7

Image
 தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) பகுதி -7 அத்தனை உசந்தவள் பேரை மண்டையிலடித்த மாதிரி சொல்லக்கூடாதென்றுதான் பாகவத்தில் ஒரு இடத்தில் மட்டும் மறைமுகமாகச் சொல்லி அதோடு விட்டிருக்கிறது என்கிறார்கள். இம்மாதிரி மீனாக்ஷியை ஸஹஸ்ரநாமம், ஸெளந்தரியலஹரி இரண்டிலும் நேராகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லியிருப்ப தாலேயே அவளுக்கு ஏற்றம் கொடுப்பதாகத்தான் ஏற்படுகிறது சரி, 'லலிதா ஸஹஸ்ரநாமம்' மீனாக்ஷியை எங்கே சொல்கிறது?என்ன சொல்கிறது? ஆரம்பத்தில் அம்பாளை வர்ணித்துக் கொண்டு வரும்போது வக்த்ர லக்ஷ்மீ பரீவாஹ சலன் மீநாபலோசநா என்று ஒரு நாமாவைச் சொல்கிறது.  " வக்த்ர லக்ஷ்மீ " என்றால் (அம்பாளுடைய) முககாந்தி.  அது ஒரு பெரிய பிஹவாஹமாக இருக்கிறது, 'பரீவாஹம்'என்றால் பிரவாஹம். இப்படி முக தேஜஸ் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றால் நீர்பெருக்கில் மீன் இருக்க வேண்டுமே! இந்த காந்தி ஸமுத்திரத்தில் எங்கே மீன்? நீண்டு நீண்டு விளங்கும் அம்பாளுடைய நேத்திரம் இருக்கிறதே அதுதான் மீன். லோசனம் என்றால் கண்.  (லோகனம் என்றால் பார்ப்பது. பார்க்கப்படுவதால் தான் 'லோகம்'என்றே பேர். தமிழிலும் 'பார்'என்றால...

#அபிராமிஅந்தாதிபாடல்9#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்9# #அனைத்தும்வசமாகும்# கருத்தன எந்தை தன் கண்ணன  வண்ண கனகவெற்பின் பெருத்தன,  பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர் திருத்தன பாரமும்,  ஆரமும்,  செங்கை சிலையும்,  அம்பும், முருத்தன மூரலும்,  நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே என் தந்தை சிவபெருமானின் கருத்திலும்,  கண்ணிலும் என்றும் நிலைத்து இருப்பது,  நீயே அபிராமி தாயே தங்க குன்றுகள் போன்ற நின் திருமார்பகங்கள். அதிலிருந்து வந்த அன்பு ததும்பிய அந்த முலை பாலினை,  நீ அழுத பிள்ளைக்கு  (சீர்காழியில், ஞானசம்பந்தருக்கு) கொடுத்தாய். உடனே அப்பிள்ளை பாடல்கள் பல புனைந்தது.  அத்தகைய அருளை வழங்கியது, நின் முலைப்பால். உன் அன்பு அளவே இல்லாதது. அம்பாளின் தாயுள்ள கொண்ட கருணையை விளக்குகிறார். அதனால் உனது மார்பகங்கள் பாரமாய் இருக்கிறது.  அத்தகைய மார்பும்,  அதில் நீ அணியும் ஆரமும் (மாலை), பெண்கள் அணியும் மாலைக்கு ஆரம்  என்று பெயர். உன் சிவந்த கையில் இருக்கும் வில்லும், அம்பும்,  உன் சிவந்த இதழில் தவழும் குறுநகையும்,  மொத்தத்தில் நீயும் வந்து என் முன் ...

தெய்வ தத்துவம் ; பகுதி 5

Image
 தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) பகுதி -5 தெய்வ தத்துவம் ;  தெய்வங்கள் அப்போதுதான் தீக்ஷிதர் இந்த 'ஆனந்த ஸாகர ஸ்தவ'த்தைப் பாட ஆரம்பித்தார்.  பரம துக்கமான ஒரு ஸந்தர்ப்பத்தில் லோக ஜனங்களின் ப்ரதிநிதியாக துக்கத்தோடு ப்ரலாபிக்கும்போதே உள்ளூர அம்பாளுடைய அருள் என்கிற ஆனந்த ஸாகரத்தில் மிதந்துகொண்டு பாடினார்.  கர்மம், பக்தி, ஞானம் முதலான எல்லாவற்றுக்கும் மேலாக  'அவள் விட்ட வழி'என்று பிரபத்தி (சரணாகதி) பண்ணுவதையே அதிலே விசேஷமாகச் சொல்லியிருக்கும்.  அம்பாளை எதிரே வைத்துக்கொண்டு பேசுகிற மாதிரி இருக்கும். திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிரு க்கலாம் போல ஒரு இடத்தில், " சரணம் ப்ரபத்யே மீனாக்ஷி விச்வ ஜநநீம் ; ஜநநீம் மமைவ "என்று வரும் (ஸ்லோ 32)  'ஸகல லோக மாதா எனக்குங்கூட மாதா'என்று விநயமாகச் சொல்கிறார். 'அவளே கதி என்று சரண் அடைகிறேன்'என்கிறார். நூறுக்கு மேல் ஸ்லோகமுள்ள இந்த ஸ்துதியில் முதல் பாதியில் இப்படி பிரபத்தி தர்மத்தை விளக்கவிட்டு,  ஸெளந்தர்ய லஹரி'யில்  முதல் பாதியில் சாக்த தத்வங்களைச் சொல்லிவிட்டு  இரண்டாம் பாதியில் தேவியைக் கேசாதிபாதம் வர்ண...

அபிராமிஅந்தாதிபாடல்#8#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்#8# பற்றுகள் நீங்கும், பக்தி பெருகும் சுந்தரி,  எந்தை துணைவி,  என் பாசத்தொடரை எல்லாம் வந்தரி,  சிந்தூர வண்ணத்தினாள், மகிடன் தலை மேல் அந்தரி,  நீலி,  அழியாத கன்னிகை,  ஆரணத்தோன் கந்தரி கைத்தலத்தாள்,  மலர்தாள்  என் கருத்தனவன சுந்தரி - அழகி எந்தை - என் தந்தை - சிவா பெருமான்  (அபிராமி பட்டர், சிவனை தன் தந்தை என்று கூறுகிறார்) துணைவி - சிவனின் மனைவி அதாவது, அன்னை அபிராமி, பேரழகு கொண்டவள். அவள் என் தந்தை சிவனின் மனைவி. எனது பாசத்தொடர்கள் அனைத்தையும்  வந்து அரித்து விடுவாள் - அரித்து என்றால், அழித்து என்று பொருள் கொள்ள வேண்டும். சிந்தூர நிறத்தினாள். இளம்சிவப்பு நிறத்து மேனியுடையவள் அகந்தை நிறைந்த மகிடனின்  (மஹிஷாசுரன்)  தலை மேல் நின்று, அவனை  (அவன் கர்வத்தை) அழித்தவள். நீல நிற சரீரம் கொண்டவள். அதனால் நீலி என்று அழைக்கப்பெற்றவள். அழிவே இல்லாத கன்னிகை  (கன்னியா குமரி அம்மன்). பிரம்ம கபாலத்தை தன் மலர்க்கரங்களில் ஏந்தியவள்.  (பரம சிவன், பிரம்மனின் கர்வத்தை அழிப்பதற்காக,  பிரம்மனின் 5 தலைகளில், ...

தெய்வ தத்துவம் ; பகுதி 3

Image
 தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) பகுதி - 3. தெய்வ தத்துவம் ;  தெய்வங்கள் காஞ்சீ மண்டலத்தில் ஈஸ்வரன் கோவில்கள் எதிலும் அம்பாள் ஸந்நதியே இல்லாமல் இருக்கிறது. அதற்கு எதிர்வெட்டாக அம்பாள் மட்டும் ஈஸ்வரன் இல்லாமல் காமாக்ஷி கோவிலில் இருக்கிறாள்!அதனால் அதைக் காமாக்ஷியம்மன் கோவில் என்பதில் ஆச்சரியமில்லை.  சைவாகமங்களின்படி ஈஸ்வரனின் ஆலயமாகவே உள்ள மதுரையில் 'மீனாக்ஷியம்மன் கோவில்'என்று பெயர் ஏற்பட்டிருப்பதுதான் விசேஷம்! ஜம்புகேச்வரத்தில் அகிலேண்டச்வரி ஆலயம் என்று சொல்கிற வழக்கம் இருந்தாலும்,  ஊருக்கே 'ஜம்புகேச்வரம்'என்பதாக ஸ்வாமி பெயர்தான் ஏற்பட்டி ருக்கிறது! மீனாக்ஷியை ஆதி காலத்திலிருந்து அநேக மஹான்களும் கவிகளும் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார்கள். #ச்யாமளாதண்டகம்# என்று காளிதாஸன் செய்திருக்கிற பிரஸித்த ஸ்துதியில் சொன்ன ச்யாமளர்தான் மீனாக்ஷி.  ச்யாமளா,  மாதங்கி,  மந்த்ரிணி  என்றெல்லாமே மந்திர தந்திர சாஸ்த்ரங்களில் மீனாக்ஷிக்குப் பேர். ஸங்கீதத்துக்கு அதிதேவதையாக எப்போதும் மாணிக்க வீணையை மீட்டிக் கொண்டிருக்கிறவள் அவள். கானாம்ருதத்தாலேயே மோக்ஷ அம்ருதத்தை ஸாதி...

தெய்வங்கள் பகுதி -2.

Image
 தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) பகுதி -2. தெய்வ தத்துவம் ;  தெய்வங்கள் நான் ராமேச்வரத்திலிருந்தபோது, "த்வாதசாந்தம்"என்று ஒருவர் வந்திருந்தார்.  அவருடைய தகப்பனார் பிள்ளை பிறக்கணுமென்று மதுரையில் ப்ரார்த்தனை பண்ணி அவர் பிறந்திருந்தாராம்.  அதனால் அவருக்கு ஊர்ப் பேரே வைத்துவிட்டார்கள் -  சிதம்பரம், பழநி, திருமலை என்றெல்லாம் வைக்கிற மாதிரி.  நான் பக்கத்திலிருந்த பண்டிதரிடம் 'த்வாதசாந்தம்'என்றால் என்ன என்று கேட்டேன்.  ராமேச்வர சங்கர மண்டபத்தில் ஆசார்யாள் ஸ்தோத்திரித்துள்ள த்வாதச (பன்னிரண்டு) ஜ்யோதிர் லிங்கங்களைச் செதுக்கியிருக்கிறது. பண்டிதர் அதை நினைத்துக் கொண்டோ என்னவோ,  "த்வாசத லிங்கங்களில் தெற்குக் கோடியில் இருக்கும் ராமேச்வர ராமநாதர் தான் த்வாதசாந்தம்"என்றார். அது ஸரியில்லை.  மூலாதாரத்திலிருந்து பிரம்மரந்திரம் வரை ஷட்-சக்ரம் (ஆறு சக்ரம்) என்று பொதுவில் சொல்கிறோம்.  இன்னும் ஸுக்ஷ்மமாக அலசிக்கொண்டு போகிறபோது, கடைசியில் வரும் ஆஜ்ஞா சக்ரத்திற்கும் ஸஹஸ்ரார சக்ரத்திற்கும் நடுவிலேயே பன்னிரண்டு ஸ்தானங்கள் சொல்லியிருக்கிறது.  அவற்றில் உச்...

#அபிராமிஅந்தாதிபாடல்6#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்6# அம்பாளின் திருவடிபாதங்களின் சிறப்பை விளக்குகிறார் பட்டர். எல்லா மஹான்களும் விளக்குவது ஒன்றே அது அம்பாளின் திருவடி செந்தாமரை. மந்திர சித்தி அளிக்கும் சென்னியது உன் பொன் திருவடி தாமரை,  சிந்தை உள்ளே மன்னியது உன் திரு மந்திரம், சிந்தூர வண்ண பெண்ணே, முன்னிய நின் அடியாருடன் கூடி, முறைமுறையே பன்னியது என்றும் உந்தன் பரம ஆகம பத்ததியே சிந்தூர வண்ணம் -  சிவப்பு  நிறம் சிவந்த வண்ணம் கொண்ட பெண்ணே,  அபிராமியே, உன் திருவடிகளே தாமரை.  அதனை என்றும் என் தலையிலேயே இருத்தி விடு.  என்றும் என் சிந்தையில் நிலைக்கொண்டிருப்பது உனது திருமந்திரம். நான் இனி கலந்து பழகப்போவது, என்றும் உன் பெருமையை பேசும் நின் அடியார்களுடன்.  உனது மேலான ஆகம நெறிகளையே நாளும் நான் மேற்கொள்ளப் போகிறேன். அன்னையின் திருவடிகள், வேதங்களின் தலை போன்றதான உபநிடதங்களின் உச்சியில் விளங்குவதாக சௌந்தர்ய லஹரியில் ஸ்ரீ ஆதி சங்கரர் வர்ணிக்கிறார். ச்ருதீநாம் மூர்த்தானோ தததி தவ யௌ சேகரதயா மம அபி ஏதௌ மாத: சிரஸி தயயா தேஹி சரணௌ யயோ: பாத்யம் பாத: பசுபதி ஜடாஜூட தடினீ யயோர் லாக்ஷா லக்ஷ்மீ: அரு...

சந்திரமண்டல வாஸினி.

Image
 கடந்த இரு தினங்களாக அம்பாளின் இருப்பிடம் பற்றிய மஹாபெரியவா அழகாக விளக்கி இருந்தார்  ஒன்று ஶ்ரீவித்யா உபசாகர் எண்ணும் மணிதீபம் அதில் சிந்தாமணி  கிரஹம். மற்றொன்று சந்திரமண்டல வாஸினி. ஆச்சாரியரின் வர்ணணையில் முதலாவது அண்டத்தில் அம்பாளை காண்பது. காரணம் இந்த மனசானது ஒன்றை பார்த்தால் தான் அது இருக்கும் என எண்ணும். உண்மையில் பரம்பிரம்மத்திற்கு உருவம் கிடையாது. அதிலிருந்து வெளிப்பட்ட ஒரு துணுக்கு அம்பாள்  அசையாத பரபிரம்மத்தை மனசஞ்சலப்படுத்தி அசையவைத்து இந்த லோகவியாபாரத்துக்கு தூண்டுபவள். அவளுக்கு பல திருநாமங்கள் பல வடிவங்கள் என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். அவ்வாறு அண்டத்தில் பல உருவத்தை பிண்டத்தில் உள்ள மனசில் காண்பது மற்றொரு முறை. காரணம் அவள் நம்மில் உள்ளால் என்பதை உணர்ந்து உள்முகமாக அவளை குருவாக ஏற்று தியானம் செய்வது. இந்த முறையை பல மஹான்கள் உள்முகமாக தியானம் செய்து வந்தனர். அவ்வாறு உள்முக அம்பாளை தியானம் செய்த போது தான் சரபோஜி மன்னன் இன்று என்று என்ன திதி என கேட்டவுடன். உள்ளே தான் பார்த்த பூர்ணநிலாவால் அம்பாளின் ஆக்ஞையால் பௌர்ணமி திதி என்றார். இது நடந்திராவிட்டால் அபிராமி அந்...

#அபிராமிஅந்தாதிபாடல்5#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்5# மனக்கவலைகள் அகலும் பொருந்திய முப்புரை செப்புரை செய்யும்,  புணர் முலையாள் வருந்திய வஞ்சி மருங்குல், மனோன்மணி, வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை,  அம்புயம் மேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே முத்தொழில் (படைத்தல், காத்தல், அழித்தல்) அன்னையே, உனக்கென்றே பொருத்தமான முத்தொழில்களை செம்மையாக செய்பவள் நீ.  அவ்வாறு செய்வதால் மிகுந்த நிறைவுடன் இருக்கிறாய்.  கருணைமிக்கவள் நீ ஆதலால், உனது மார்பகங்கள் பெரியதாக உள்ளது. உனது இடையோ கொடி போல சிறியது, மெல்லியது.  பருத்த முலைகளை  (பெரிய மார்பகங்கள்) உனது மெல்லிய இடையினால் தாங்க முடியவில்லை.  அதனால் வருந்துவது போல் இருக்கிறது. (இதனை லலிதா சஹஸ்ரநாமத்தில் -  "ஸ்தன பார தலன் மத்ய பட்ட பந்த வலித்ரயா" என்று கூறப்படுகிறது. அதாவது,  ஸ்தனம் - மார்பு,  அதன் பாரத்திலிருந்து மெல்லிய இடையை (மத்ய - இடை) காக்க அங்கே மூன்று கோடுகள் உள்ளது). அவள், சிவனின் மனதிற்கு இனியவள். ஆதலால் மனோன்மணி. சடைமுடி தரித்தவரானசிவபெருமான்,  தேவ - அசுரர்கள் பாற்கடல் கடையும் போது வெளிகி...

அம்பாளின் இருப்பிடம் முதல் பகுதி)பகுதி -1

Image
 அம்பாளின் இருப்பிடம் :  தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)பகுதி -1 பராசக்தி இல்லாத இடம் ஏதுமில்லை. ஆனால் மனசுக்குப் பிடிப்பு உண்டாவதற்காக அவளுக்குப் பல வாஸஸ்தானங்களைச் சொல்லியிருக்கிறது.  முக்கியமாக ஸ்ரீ வித்யா என்கிற தேவி உபாஸனா மார்க்கத்தில் சொல்கிற போது,  அவள் அமிருத சாகரத்தின் மத்தியில், மணித்வீபம் என்கிற மணிமயமான தீவில் இருப்பதாகச் சொல்கிறோம். மணித்தீவில் பல கோட்டைகள் உத்தியான வனங்களுக்குள், சிந்தாமணிகளயை இழைத்துச் செய்த கிருகத்துக்குள் இருக்கிறாள். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், ஸதாசிவன் இவர்கள் நாலு கால்களாகவும், உட்காரும் இடமாகவும் அமைந்து உருவான மஞ்சத்தின்மேல்,  பிரம்ம ஸ்வரூபமான காமேசுவரனின் இடது பக்கத்தில் அமர்ந்திருக்கிறாள் என்று சொல்லியிருக்கிறது.  அவள் இருக்கும் இடத்தை ஸ்ரீபுரம் என்று கூறியிருக்கிறது.  அமிருத ஸாகரத்தில் இருப்பதாகச் சொல்கிற மாதிரியே ஸ்வர்ணமயமான மேருசிகரத்தில் இந்த ஸ்ரீபுரம் இருப்பதாகவும் சொல்வதுண்டு. தியானம் செய்வதற்குப் பரம சௌக்கியமாக இன்னொரு வாஸஸ்தானமும் சொல்லி இருக்கிறது.  ‘லலிதா ஸஹஸ்ரநாமத்’தின் பலச்ருதியில் ச...

#அபிராமிஅந்தாதிபாடல் 4#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்4# உயர்பதவிகள் கிடைக்கும் மனிதரும் தேவரும்  மாயா முனிவரும்  வந்து சென்னிகுனிதரும்  சேவடி கோமளமே  கொன்றை வார்சடை மேல் பனிதரும் திங்களும் பாம்பும்  பகீரதியும் படைத்த புனிதரும் நீயும்  என் புந்தி எந்நாளும் பொருந்துகவே. அனைவரும் (மனிதர், தேவர், முனிவர்) தங்கள் தலையை அபிராமியின் பாதத்தில் வைத்து வணங்குகின்றனர்.  ஏன் இங்கு தேவரை முதலில் கூறாமல் மனிதர்களைக் கூறினார். ஒன்று பூலோகத்தில் இருந்து பாடுவதால் முதன்மை படுபவர் மனிதர்கள். இரண்டு தேவர்கள் எப்போது பார்த்தாலும் எனக்கு இது கிடைக்கவில்லை எனக்கு அது கிடைக்கவில்லை என்று எப்போது பார்த்தாலும் குறைக்கூறிக் கொண்டே இருக்கின்றனர். அதனால் பகவானுக்கு அவர்மேல் ஒரு சலிப்பு ஏற்படுகிறது.  ஆனால் மனிதர்கள் எப்போதும் நம்மை துதித்துக் கொண்டே இருக்கின்றனர்.  அதனால் அவர் மனிதரும் தேவரும் என பாடி இருப்பாரோ. அன்னையின் பாதம் சிவப்பாக இருக்கிறது.  அது பாதகமலம். கமலம்  ஆனதால் அது சிவப்பாக இருக்கிறது. சேவடி என்றல் சிவந்த அடி (பாதம்). பட்டர் கேட்டுக்கொள்வது என்னவென்றால், அன்னையே, கொன்றை ப...

#அபிராமிஅந்தாதிபாடல்3#.

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்3#. அம்பாளிடம் சரணாகதி குடும்பக் கவலைகள் தீரும் அறிந்தேன்,  எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு, செறிந்தேன் நினது திருவடிக்கே திருவே,  வெருவிப் பிறிந்தேன்,  நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால், மறிந்தே விழும்  நரகுக்கு உறவாய மனிதரையே அபிராமியே,  இதுநாள் வரை, எனது பழவினைகள் காரணமாக, உன் பெருமையை எண்ணி துதிக்கும் உனது அன்பர்களின் சங்கத்தை நாடவில்லை.  அதனால் மீண்டும் மீண்டும் நரகத்தினுள் விழுந்து கொண்டிருந்தேன். இங்கு நரகம் என்பது மனித சொந்தம் கலந்த  சம்சார கடலை குறிக்கிறது. திருவள்ளுவரின் அருமையான வரிகள் அதை தான் பட்டர் இங்கு குறிப்பிடுகிறார். #பிறவிப்பெருங்கடல்நீந்துவர்நீந்தார்இறைவன்அடிசேராதார்#. இறைவனுடைய திருவடிகளைப் போற்றி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது. பிறவி பெரும்கடல் -  சம்சாரசாஹரம். #பிறவிப்பெருங்கடல்#என்பது பிறவியின் துன்பங்களை ஒரு பெரிய கடலாக உருவகப்படுத்துகிறது. #நீந்துவர்#என்பது இறைவனை நினைப்பவர்கள் பிறவி கடலை கடந்து மோட்சம் அடைவார்கள் என்று பொருள். #நீந்தார்#என்ப...