Posts

Showing posts from June, 2025

அறிவு ஞானம்

Image
அறிவறிந்தோர் ஞாபகம் அறிவு என்பது அறியப்படுவது. ஞானம் என்பது உணரப்படுவது”. “ஞாலத்தை அறிவது விஞ்ஞானம். மூலத்தை உணர்வது மெய்ஞானம்”. “முக்தியை அடைந்த அளவே நமது வாழ்க்கையின் வெற்றி”. “புலன் கவர்ச்சியில் சிக்கி நிற்கும்போது விளைவறியாமல் எண்ணுதலும் பேசுதலும் செயல் புரிதலும் இயல்பு”. “குறைபோக்கும் குண்டலினி தவத்தின் மூலம் குவிந்து மனம் உயிரோடு உறையும் மேலும் மறை பொருளாம் அறிவு அதன் முழுமைபெற்று மா அமைதி அனுபவிக்கும் நிலைக்களம் ஆம் இறைவனது திருநிலையில் இணையும் அப்போ இன்ப துன்ப விருப்பு வெறுப்பிவை கடந்து நிறைவு பெறும் தீய வினையகலும் வாழ்வில் நிகழ்வதெல்லாம் பேரின்ப ஊற்றாய் மாறும்”. வாழ்க வையகம் வாழ்க வளமுடன். – தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி. ஒரு காலியான பாத்திரத்தை நிமிர்த்தித் தண்ணீருக்குள் அழுத்த அதில் நீர் நிறைந்து விடும்.  பின்னர் அதை விட்டு விட்டால், அது நீரில் முழுகி மறைந்து போகும்.  அதுபோலவே  பார்த்தல்,  கேட்டல்,  முகர்தல்,  ஊறு உணர்தல்,  சுவைத்தல் ஆகிய ஐயுணர்வுகளில் செயலாற்றப் பழகி விட்ட அறிவானது உணர்ச்சி நிலை எய்தி,  உணர்ச்சி மயமாகி, தன் உண்மை நிலையி...

ஆன்மீக பயணம் என்பது என்ன?.

Image
 ஆன்மீக பயணம் என்பது என்ன?. ஆன்மீகப் பயணம் என்பது ஒருவருடைய உள்ளார்ந்த  ஆன்மீகத் தேடலைந்நோக்கி மேற்கொள்ளப்படும் பயணம் ஆகும்.  இது மதரீதியான வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வது  அல்லது தியானம்,  யோகா போன்ற பயிற்சிகள் மூலம் தன்னையறிதலுக்கு முயற்சி செய்வது எனப் பல வழிகளில் இருக்கலாம்.  தமிழ்நாடு, அதன் ஆன்மீக பாரம்பரியம் மற்றும் கோயில்களுக்காக அறியப்படுகிறது, மேலும் இது  ஆன்மீகப் பயணங்களுக்கு ஒரு சிறந்த இடமாக உள்ளது.  ஆன்மீகப் பயணத்தின் வகைகள்: மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லுதல்: கோயில்கள் மதத் தலங்களுக்குச் சென்று வழிபடலாம்.  தியானம் மற்றும் யோகா: தியானம் மற்றும் யோகா பயிற்சிகள் மூலம் மன அமைதி மற்றும் தன்னையறிதலைப் பெறலாம்.  புத்தகம் வாசித்தல்: ஆன்மீக புத்தகங்களை வாசிப்பதன் மூலம் ஆன்மீக ஞானத்தைப் பெறலாம்.  இயற்கையோடு இணைதல்: மலைகள், காடுகள் போன்ற இயற்கையான இடங்களில் நேரத்தைச் செலவழிப்பதன் மூலம் மன அமைதி மற்றும் ஆன்மீக எழுச்சியைப் பெறலாம்.  உதவி செய்தல்: தொண்டு நிறுவனங்களில் இணைந்து மக்களுக்கு உதவி செய்வதன் மூலம் மனநிறைவைப் பெறலாம்...

காமாக்ஷியின் சிவப்பு :

Image
 காமாக்ஷியின் சிவப்பு :  தெய்வத்தின் குரல் (முதல் பகுதி) கரும்பு வில்லும் புஷ்ப பாணமும் தரித்து, ஸமஸ்த லோகத்துக்கும் அநுக்கிரகம் செய்கிற திவ்ய மாதாதான் காமாக்ஷி.  சகல ஜீவராசிகளையும் இந்திரிய சேஷ்டையிலிருந்து விடுவிப்பதற்காக மலர் அம்பும், மனஸின் ஆட்டங்களிலிருந்து விடுவிப்பதற்காக கரும்பாலான தனுஸையும் தாங்கியிருக்கிறாள். இதில் வேடிக்கை என்னவென்றால், மன்மதனும் இதேபோல் கரும்பு வில்லையும்,  புஷ்பத்தாலான ஐந்து பாணங்களையும்தான் வைத்திருக்கிறான்.  அவனுடைய காரியமோ அம்பாளுடைய காரியத்துக்கு நேர் விரோதமானது.  அவன் இந்த வில்லையும் அம்பையும் வைத்துக்கொண்டுதான் ஸமஸ்தப் பிராணிகளுக்கும்  இந்திரிய விகாரத்தை – அடங்காத காம வேகத்தை – உண்டாக்கி வருகிறான். அதுவும் பராசக்தியான அம்பாளுடைய லீலைதான். அவள்தான் மன்மதனுக்கு இப்படிப்பட்ட சக்தியை அநுக்கிரஹம் செய்திருக்கிறாள்.  பிஞ்சு கசப்பாக இருந்து,  பிறகு துவர்ப்பாகி,  அப்புறம் புளிப்பாகி,  கடைசியில் பரம மதுரமாக பழுக்கிற மாதிரி,  ஜீவர்களும் படிப்படியாக பலவித அநுபவங்களில் முன்னேறி முன்னேறி கடைசியில் பழமாகப் ப...

ஹிந்து சனாதனதர்மம் என்பது.

Image
 ஹிந்து சனாதனதர்மம் என்பது. 51. கடவுள் என் நண்பர். 52. கடவுள் என் ஆசிரியர். 53. கடவுள் என் தாய். 54. கடவுள் என் தந்தை. 55. கடவுள் என் காதலன். 56. கடவுள் என் கணவர். 57. கடவுள் என் குழந்தை. 58. கடவுள் எல்லாவற்றிலும் தூய்மையாகவும் அழகாகவும் இருக்கிறார். 59. கடவுள் துன்பத்திலும் பயங்கரத்திலும் இருக்கிறார். 60. கடவுள் உள் கட்டுப்பாட்டாளர். 61. கடவுளின் விருப்பமின்றி எதுவும் நடக்காது. 62. நான் முழுமை அடையும் வரை வாழ்க்கை பிறப்பு மற்றும் இறப்பு தொடர் என்று இந்து மதம் கற்பிக்கிறது. 63. என் சொந்த திறனுக்கு ஏற்ப உண்ணாவிரதத்தையும் விழிப்பையும் கடைப்பிடிக்க எனக்கு சுதந்திரம் உள்ளது. 64. பக்தி மற்றும் என் மனதை தூய்மைப்படுத்த இந்து மதம் இறைச்சியைத் தவிர்க்க ஊக்குவிக்கிறது. 65. கடவுளை நேசிக்க தாழ்மையுடன் இருக்க இந்து மதம் என்னை ஊக்குவிக்கிறது. 66. உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகப் பார்க்க இந்து மதம் என்னைக் கேட்கிறது. 67. இந்து மதம் வன்முறையைக் கடைப்பிடிக்காமலும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கவும் கற்றுக்கொடுக்கிறது. 68. பலவீனமானவர்களுக்கும் பசியுள்ளவர்களுக்கும் உணவளிக்க இந்து மதம் எ...

குரு என்பவர் யார்?.

Image
 குரு என்பவர் யார்?. குரு என்பவர் ஒரு வழிகாட்டி/ ஆசிரியர்/நிபுணர் ஆவார்.  இவர் பொதுவாக இந்து மற்றும் அனைத்து சமயங்களில் ஒருவரின் அறிவுத் துறையில் வழிகாட்டுபவராக இருப்பார்.  ஒரு குரு, சீடர்களுக்கு ஆன்மீக மற்றும் பல்துறை அறிவை போதிக்கிறார்.  சீடர்களின் அறியாமை எனும் இருளை அகற்றி,  ஞானம் எனும் ஒளியை ஏற்றுபவர் குரு ஆவார்.  இந்து சமயத்தில், குரு மிகவும் மதிக்கப்படுகிறார் மற்றும் தீட்சை வழங்கும் ஒருவராகவும் கருதப்படுகிறார்.  எவ்வளவோ மஹான்கள் ஹிந்து மதத்தில் இருந்துள்ளனர். உதாரணமாக  ஆதிசங்கர பகவத்பாதாள்/காஞ்சிமஹாபெரியவா/குரு ராகவேந்திரர்/தாயுமானவர்போன்ற பல மஹான்கள் அதில் நமக்கு குருபீடமாக இருந்து வழி நடத்தியவர் மஹாபெரியவா. அவர் நாம் வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்தவர்.  குரு/சந்நியாசி என்ற பதத்திற்கு உதாரண புருஷராக விளங்கியவர். நமது கலாச்சார/மாண்பு/வேதம்/வேதாந்தம் எதில் சந்தேக இருந்தாலும் அதை விளக்கி நம்மை நல்வழிபடித்திய மஹான் ஆவார். நம்மை என்ன நினைக்கிறோமோ அதற்கு பதில் அளிக்கும் விதமாக அவரின் தெய்வத்தின் குரல் என்ற ஆன்மீக சொற்பொழிவு அமைந்து இருக்கிறது. ...

எனக்கு முக்கியம் அம்பாள்” : 3

Image
 எனக்கு முக்கியம் அம்பாள்” : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)-3. அம்பாளைத் தியானித்து பூரணத்துவம் அடைய இந்தப் பேச்சு தூண்டாதா என்ற ஆசைதான். பிரச்சாரத்தால் மதமும் ஆத்மாநுபவமும் வளராது. பிரச்சாரமும் பிரசங்கமும் தற்கால சாந்திதான். சாந்தியே இல்லாத லோக வாழ்க்கையில் ஏதோ தாற்காலிகமாக ஒரு சாந்தி உண்டானாலும் ஒரளவுக்கு விசேஷம்தான்.  நான் பேசினால் உங்களுக்குத் தற்கால சாந்தியாகத் திருப்தி உண்டாகிறது என்பதால் பேசுகிறேன். நான் பேசாவிட்டால் உங்களுக்கு துக்கமாகவும், ஏமாற்றமாகவும் இருக்குமே என்பதற்காகப் பேசுகிறேன். ஆனால் இதைவிட அவசியம் தாற்காலிகமானதைச் சாசுவதமாகப்பண்ணிக் கொள்வதுதான்.  அதற்கு ஒரே வழி அம்பாளின் சரணாரவிந்தத் தியானமே.  எனக்கு முக்கியம் அம்பாள்.  லோக க்ஷேமார்த்தம் அம்பாளுடைய சரணாரவிந்தத்தைத்தான் தியானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எல்லோரும் அம்பாளைத் தியானம் பண்ண வேண்டும். மற்ற மதங்களாலோ, நாஸ்திகத்தாலோ நம் மதத்துக்கு ஹானி வராது.  நம்முடைய அநுஷ்டானக் குறைவினாலேயேதான் ஹானி வரும்.  நம் உடம்பில் சக்தி குறைந்தால்தான் நோய் வருகிறது. அதுபோல் நம் அநுஷ்டானம் கு...

எனக்கு முக்கியம் அம்பாள்” :2

Image
 எனக்கு முக்கியம் அம்பாள்” :  தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)-2. அம்பாளைத் தியானிக்க முயன்று அதில் ஒரு முகமாக ஈடுபட முடியாதபோது நம் குறையெல்லாம் தெரிகிறது.  அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான்.  ‘இந்தக் குறைகளைப் போக்கம்மா’ என்று அவளிடம் பிரார்த்தித்துக் கொள்ள முடிகிறது.  என்னிடம் எப்போதெல்லாம் தோஷம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அம்பாளிடம் முறையிட்டு அந்த தோஷம் இனியாவது இல்லாமலிருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். என்னிடம் தோஷம் இருந்தால் நான் பிறருக்கு உபதேசிப்பது வேஷம்தான். உங்களை ஏமாற்றுவதுதான்.  எனக்கு அம்பாள் அநுக்கிரகம் பூரணமாக வந்து நான் நிறைந்து போய்விட்டால்,  அப்புறம் உபதேசம் என்ற வாய்ப்பேச்சே தேவையில்லை. பேசாமலே அநுக்கிரஹ சக்தியானது மற்றவர்களுக்கு ஞானத்தைத் தந்துவிடும்.  ஆக, இரண்டு நிலையிலும் உபந்நியாசம் கூடாதுதான்.  இப்படி எல்லாம் நான் உபதேசம் பண்ணுகிற நேரத்தை அவளுடைய தியானத்திலேயே செலவு செய்தால் இன்னும் எத்தனையோ மடங்கு ஆத்ம சாந்தி கிடைக்கும்.  உபந்நியாசம் செய்கிற பொழுதை அவள் தியானத்தில் செலவிட்டால்,  என் தோஷங்கள் எத்தனையோ ...

#அபிராமிஅந்தாதிபாடல்-23#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-23# குறைவில்லா மகிழ்ச்சி நல்கும் கொள்ளேன்,  மனத்தில் நின்கோலம் அல்லாது, அன்பர் கூட்டம் தன்னை விள்ளேன்,  பரசமயம் விரும்பேன்,  வியன் மூவுலகுக்கு உள்ளே,  அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த கள்ளே,  களிக்கும் களியே,  அளியஎன் கண்மணியே. அன்னை அபிராமியே,  உன் கோலம் அல்லாது மற்றொன்றை என் மனத்தில் நினைத்துக்கொள்ள மாட்டேன்.  உன் அடியார்களை பகைத்துக்கொள்ள மாட்டேன்.  உன்னைத்தவிர மற்றொரு தெய்வத்தை விரும்ப மாட்டேன்.  மேல் உலகம், பூமி, கீழ் உலகம் ஆகிய மூவுலகிற்கும் உள்ளேயும். இவற்றிற்கு வெளியேவும் நிறைந்திருக்கும் அன்னையே,  நீ என்னுள்ளத்தில் என்றும் ஆனந்தத்தை தரும் தேன் போன்றவள்.  ஆனந்தத்திற்கு ஆனந்தம் தருபவள். என் கண்மணி நீ. ஆனந்த லஹரி என்று அம்பாளுக்கு ஒரு பெயர்.  அதாவது ஆனந்ததினை பிரவாஹமாக அருள்பவள். சங்கரரின் சௌந்தர்ய லஹரியில் முதல் 41 ஸ்லோகங்கள் ஆனந்தலஹரி என்றுதான் அழைக்கப்படுகின்றன. அதாவது ஆனந்த வெள்ளம் என்று பொருள்.  ஆனந்த வெள்ளம் என்பது அம்பாளுடன் நமது உடலில் ஒடும் ஓம்பது சக்கரங்களுடன் ஒப்பிட...

மனித மனம் மூன்று முக்கிய

Image
 குணங்கள்.! மனித மனம் மூன்று முக்கிய குணங்களைக் கொண்டுள்ளது:  சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ். மனம் இந்த மூன்று நுட்பமான ஆற்றல்கள் மூலம் செயல்படுகிறது: சத்வ:  தெளிவு, அமைதி, ஞானம், சமநிலை ரஜஸ்:  செயல்பாடு, ஆசை, லட்சியம், அமைதியின்மை தமஸ்:  மந்தநிலை, அறியாமை, கனம், குழப்பம் முக்கிய கொள்கைகள்: குணங்கள் தொடர்ந்து தொடர்பு கொள்கின்றன, உங்கள் மனநிலை, எண்ணங்கள் மற்றும் செயல்களை வடிவமைக்கின்றன. சத்வத்தை உயர்த்துகிறது, ரஜஸ் கிளர்ச்சியடைகிறது, மேலும் தமஸ் விழிப்புணர்வை மேகமூட்டுகிறது. உங்கள் உள் நிலை உங்கள் வெளிப்புற யதார்த்தத்தை தீர்மானிக்கிறது. முக்கிய நடைமுறைகள்: * தியானம், தூய உணவு, உண்மைத்தன்மை, சுய ஆய்வு மற்றும் ஞானிகளின் கூட்டுறவு மூலம் சத்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். * அமைதியற்ற சக்தியை நோக்கமான செயல், சுவாசப் பயிற்சி மற்றும் கவனமுள்ள வாழ்க்கையாக மாற்றுவதன் மூலம் ரஜஸை சமநிலைப்படுத்துங்கள். * அதிகாலையில் எழுந்திருத்தல், புதிய காற்று, இயக்கம் மற்றும் பிரதிபலிப்பு அமைதியுடன் தமஸை வெல்லுங்கள்.  எந்த குணத்தையும் நிராகரிப்பதல்ல, மாறாக அவர்களின் விளையாட்டில் தேர்ச்சி பெறு...

அபிராமிஅந்தாதிபாடல்-22#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-22# பிறவாமை அளிக்கும் கொடியே,  இளவஞ்சி கொம்பே,  எனக்கு வம்பே பழுத்த படியே,  மறையின் பரிமளமே,  பனி மால்  இமயப்பிடியே,  பிரமன் முதலாய தேவரை பெற்ற அம்மே, அடியேன் இறந்து  இங்கு  இனி பிறவாமல்  வந்து ஆண்டுகொள்ளேன் கொடி போன்றவளே,  முந்தைய பாடலில் அப்பனை சுற்றிய கொடி அம்பாள் இளங்கன்று போல் பசுமையான கொம்பே,  இளமையான கொடி தகுதியற்ற எனக்கு தானாகவே முன்வந்து அருள்புரிபவளே, தகுதி என்பதை அம்பாள் முடிவுச்செய்கிறாள் வேதத்தின் ஆதாரமே,  அவளே வேதமாதா பனி மூடிய இமயத்தில் பிறந்த பெண் யானை போன்ற வீரம் நிறைந்தவளே, அவள் ஹிமகிரி சுதே ஹேமலதே ஹிமவான் மகள் பிரம்மா முதலிய தேவர்களை பெற்றவளே,  அவளே ஆதிபராசக்தி அவளிடமிருந்து தோன்றியவர்கள் பிரம்மாகள். நான் இப்பிறவியில்  இறந்த பின் மீண்டும் பிறவாமல் என்னை ஆட்கொள்வாயாக. அம்பாளின் பாதத்தில் சரண் அடைந்தாள் மறுபிறவி இல்லை. சரணாகதி தத்துவம்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன்

Image
 🕉️🔯 காஞ்சிபுரம் காமாட்சியம்மன் தரிசனம்.!!!🙏 🔯காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள்.🔯 🔯 பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும்.  சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம்  (பிலாஹாசம்) பிம்பம்  (காமாட்சி) சூட்சமம்  (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.🔯 🔯அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.🔯 🔯காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செ...

#அபிராமிஅந்தாதிபாடல்-21#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-21# அம்பிகையை வழிபடாது, நாத்திகமாய் இருந்த பாவம் தொலையும். மங்கலை,  செங்கலசம் முலையாள்,  மலையாள்,  வருண சங்கலை செங்கை, சகலகலா மயில்,  தாவு கங்கை பொங்கலை தங்கும்  புரிசடையோன் புடையாள்,  உடையாள், பிங்கலை,  நீலி,  செய்யாள்,  வெளியாள்,  பசும் பெண்கொடியே மங்கலை - சுமங்கலி - மங்கள வடிவினள். செங்கலசம் முலையாள் - செம்மையான கலசம் போன்ற முலைகளை உடையவள். மலையாள் -  மலையரசன் ஈன்ற பெண்.  பர்வதராஜ புத்ரி ஹைமவதி வருண சங்கலை செங்கை - சங்குகளால் ஆன வளையல்களை தன்சென்னிறகைகளில்அணிந்தவள். சகல கலா மயில் -  அனைத்து கலைகளுக்கும் மயில் (அரசி) தாவு கங்கை பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் -  துள்ள திரிந்து வரும் கங்கையையும் அதனால் உண்டாகும் நுரை அலையினயும் , தன் சடையில் தங்க வைத்துக்கொள்ளும் சிவபெருமானின் மனையாள் உடையாள் -  என்றும் பக்தர்களுக்கு உடையவள் பிங்கலை -  மஞ்சள் வண்ணத்தினாள். நீலி -  நீல நிறமுடையாள்  செய்யாள் -  சிவந்த நிறமுடையாள் வெளியாள் -  இவ்வாறெல்லாம் விளங்குபவள். பசு...

நாம் உலகிற்கு உள்ள அனைவருக்கும் விஸ்வ குரு எதனால்?.

Image
 நாம்  உலகிற்கு உள்ள  அனைவருக்கும் விஸ்வ குரு எதனால்?. பாஸ்கராச்சாரியார் யார்? நியூட்டனுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே,  கால்குலஸுக்கு ஒரு பெயர் இருப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே— இந்தியாவிற்கு பாஸ்கராச்சாரியார் இருந்தார். பாஸ்கரா II என்றும் அழைக்கப்படும் அவர்,  12 ஆம் நூற்றாண்டின் ஒரு உயர்ந்த அறிஞர்,  கணிதம் மற்றும் வானியலில் அவரது பணி இன்றும் விஞ்ஞானிகளை வியக்க வைக்கிறது. ✅ நியூட்டனுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே அவர் ஈர்ப்பு விசையின் கருத்தை விளக்கினார். ✅ புதிர்கள், தர்க்கம் மற்றும் அழகு நிறைந்த கவிதை கணித பாடப்புத்தகமான லீலாவதியை எழுதினார். ✅ அவர்  இயற்கணிதம்,  எண்கணிதம்,  முக்கோணவியல் மற்றும்  கிரக இயக்கம் ஆகியவற்றை ஆராய்ந்தார் -  அனைத்தும் சமஸ்கிருத வசனத்தில். மேலும் அவர் அனைத்தையும் செய்தார்...  ஒரு ஆய்வகத்தில் அல்ல,  ஆனால் வானம், எண்கள் மற்றும் உண்மையை அமைதியாகக் கவனிப்பதன் மூலம். அவரது புத்திசாலித்தனம் அறிவியல் இங்கு புதியதல்ல என்பதை நமக்கு நினைவூட்டுகிறது— இது நம் மண்ணில் வேரூன்றியுள்ளது,  நமது எழுத்துக்களி...

உலகில் பெரியது எது?

Image
 உலகில் பெரியது எது? என்று நம்மில் எழும் கேள்விகான பதில். உலகில் மிகப்பெரியது எது என்று கேட்டால், இந்த உலகம்தான் பெரியது.  ஆனால் இந்த உலகமோ நான்முகனால் படைக்கப்பட்டது. எனவே நான்முகன்தான் பெரியவன் என்றால் நான்முகனோ திருமாலின் உந்தியில் (தொப்புள்) தோன்றியவன்.  எனவே திருமால்தான் பெரியவன் என்றால் திருமாலோ அலைகடலில் தூங்குகிறவன்.  திருமாலைத் தாங்கும் கடல்தான் பெரியது என்றால், அந்தக் கடலும் அகத்தியனின் உள்ளங்கையில் அடங்கியது.  எனவே அகத்தியர்தான் பெரியவர் என்றால்,  அந்த அகத்தியரும் கலயத்தில்.(சிறு மண்குடம்) அடங்கி இருந்தவர்.  எனவே, கலயம் தான் பெரியது என்றால் அந்தக் கலயமோ இந்தப் பூமியில் உள்ள மண்ணால் செய்யப்பட்டது.  எனவே, பூமிதான் பெரியது என்றால், இந்தப் பூமியை ஆதிசேஷன் என்னும் பாம்பு தனது ஒரு தலையில் தாங்கியிருக்கிறது.  பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் என்னும் பாம்புதான் பெரியது என்றால் அந்தப் பாம்பை, உமையவள் தனது விரலில் மோதிரமாக அணிந்துள்ளாள்.  எனவே உமையவள்தான் பெரியவள் என்றால்,  அந்த உமையவளோ சிவனது உடலின் ஒரு பாதியில் ஒடுங்கியிருக்கிறாள்....