#அபிராமிஅந்தாதிபாடல்-23#

 #அபிராமிஅந்தாதிபாடல்-23#



குறைவில்லா மகிழ்ச்சி நல்கும்


கொள்ளேன், 


மனத்தில் நின்கோலம் அல்லாது,


அன்பர் கூட்டம் தன்னை

விள்ளேன், 


பரசமயம் விரும்பேன், 


வியன் மூவுலகுக்கு உள்ளே, 


அனைத்தினுக்கும் புறம்பே,


உள்ளத்தே விளைந்த கள்ளே, 


களிக்கும் களியே, 


அளியஎன் கண்மணியே.


அன்னை அபிராமியே, 


உன் கோலம் அல்லாது மற்றொன்றை என் மனத்தில் நினைத்துக்கொள்ள மாட்டேன். 


உன் அடியார்களை பகைத்துக்கொள்ள மாட்டேன்.


 உன்னைத்தவிர மற்றொரு தெய்வத்தை விரும்ப மாட்டேன். 


மேல் உலகம், பூமி, கீழ் உலகம் ஆகிய மூவுலகிற்கும் உள்ளேயும்.


இவற்றிற்கு வெளியேவும் நிறைந்திருக்கும் அன்னையே, 


நீ என்னுள்ளத்தில் என்றும் ஆனந்தத்தை தரும் தேன் போன்றவள். 


ஆனந்தத்திற்கு ஆனந்தம் தருபவள்.


என் கண்மணி நீ.


ஆனந்த லஹரி என்று அம்பாளுக்கு ஒரு பெயர். 


அதாவது ஆனந்ததினை பிரவாஹமாக அருள்பவள்.


சங்கரரின் சௌந்தர்ய லஹரியில் முதல் 41 ஸ்லோகங்கள் ஆனந்தலஹரி என்றுதான் அழைக்கப்படுகின்றன.


அதாவது ஆனந்த வெள்ளம் என்று பொருள். 


ஆனந்த வெள்ளம் என்பது அம்பாளுடன் நமது உடலில் ஒடும் ஓம்பது சக்கரங்களுடன் ஒப்பிட்டு ஸ்லோகம் அமைக்கப்பட்டு இருக்கும்.


குண்டலினியை மேல் எழும்பி சஹஸ்ரஸ்ரத்தில் இணைக்கும் போது ஆனந்த அமிர்தம் 72000நாடிகளில் பெருக்கு எடுத்து ஒடும். 


இதை தான் 1முதல் 41ஸ்லோகங்கள் வரை குறிப்பிடுகிறது.


எனவே அது ஆனந்த லஹரி.


பின் இருக்கக்கூடிய 59 ஸ்லோகங்கள் சௌந்தர்ய லஹரி - அழகு வெள்ளம்.


தநோது க்ஷேமம் நஸ்தவ வதனஸௌந்தர்யலஹரி-

பரிவாஹஸ்ரோத: சரணிரிவ சிமந்தசரணி: |


வஹந்தி ஸிந்தூரம் ப்ரபாலகபரிபாரதிமிரா-

த்விஷாம் ப்ருந்தைர்பந்திக்ருதமிவ நவினார்ககிரணம் ||


"உன்னுடைய அடர்த்தியான மற்றும் கருமையான பிரிந்த கூந்தல் சிறைபிடிக்கப்பட்ட எதிரிகளைப் போலத் தோன்றுகிறது; 


உன் பிரிந்த கூந்தலில் அலங்கரிக்கப்பட்ட குங்குமம் விடியற்காலையில் சூரியனைப் போலத் தெரிகிறது. 


பிரிந்த பகுதியின் மையம், உன் முகத்தின் அழகின் அலைகளுடன், நிரம்பி வழியும் நீரோடை போலத் தோன்றுகிறது."


இந்தப் பதத்தில் பராசக்தியின் கூந்தல் விவரிக்கப்படுகிறது. அவளுக்கு மிகவும் அழகான முகம் இருக்கிறது, 


அதை யாராலும் ஒப்பிட முடியாது. அவளுக்கு அடர்த்தியான மற்றும் கருமையான கூந்தல் உள்ளது, இது மையத்தில் பிரிக்கப்பட்டு ஒரு கோடு ஏற்படுகிறது. 


அவளுடைய நெற்றியின் மையத்தின் மேல் பகுதியான இந்த கோட்டின் முடிவில், அவள் குங்குமப்பூவால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள். நெற்றியின் மேல் பகுதியில் குங்குமப்பூ வைப்பது மங்களத்தின் அடையாளமாகும். 


தலையின் மேல் பகுதியில் முடி பிரிக்கப்படும்போது, ​​மண்டை ஓட்டின் வெள்ளை நிறம் தெரியும், மேலும் இந்தப் பிரிப்பு வெள்ள நீரால் நிரம்பி வழியும் நீரோடை போல் தோன்றும் என்று வசனம் கூறுகிறது. வெள்ளத்திற்கு ஒரு தோற்றம் இருக்க வேண்டும், 


மேலும் சங்கராச்சாரியார் வெள்ளம் அவளுடைய முகத்திலிருந்து உருவாகிறது என்று கூறுகிறார், 


அது அழகுக் கடலாகும் (சௌந்தர்ய லஹரி)


லஹரி என்றால் அலைகள் மற்றும் அலைகள் கடலின் மையத்தில் அல்ல,


 கரையில் மட்டுமே தோன்றும். நமக்குத் தெரியும் அவளுடைய முகத்தின் அழகு அவளுடைய மகிமையான அழகின் ஒரு சிறிய பகுதி மட்டுமே என்றும் சாதாரண மனித புரிதலுக்கு அப்பாற்பட்டது என்றும் அவர் நுட்பமாக வெளிப்படுத்துகிறார்.


கடல் அலைகள் போலத் தோன்றும் வெள்ளம், அவளுடைய முகத்தின் நிரம்பி வழியும் அழகினால் ஏற்படுகிறது. 


மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிவப்பு நிறத்தின் இருபுறமும் அடர்த்தியான மற்றும் கருமையான முடி உள்ளது.


சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் 44


அம்மா ! 


உன் கேசத்தின் நடுவில் உள்ள வகிடு , உன் முகத்திற்கு அழகு சேர்க்கின்றது . 


பால சூர்யா கிரணம் போன்று உன் வகிட்டில் மின்னும் சிந்தூர வர்ண குங்குமமானது , 


உன் அடர்ந்த இருட்டு போன்ற, கருமையான கேசம் என்ற எதிரிகளின் சிறையில் அடைக்கப்பட்டது போல் உள்ளது . அந்த  முகத்தின்  அழகு வெள்ளத்திற்கு  கால்வாய் போன்ற உனது கேச வகிடு,  


எங்களுக்கு எல்லாவிதமான நன்மைகளையும் தரட்டும் . 


இவை அம்பாளது அழகு ஆற்றின் வெள்ளம் போல் பிரவாகமாக தலை முதல் பத்மபாதம் வரை வர்ணித்து இருப்பார்.


ஆதனால் அம்பாளது சௌந்தர்யம் ஆற்றைப்போல் பிரவாகம் போல் இருக்கும்.


அதனால் இது சௌந்தர்யலஹரி என ஆனது.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).