#அபிராமிஅந்தாதிபாடல்-21#
#அபிராமிஅந்தாதிபாடல்-21#
அம்பிகையை வழிபடாது, நாத்திகமாய் இருந்த பாவம் தொலையும்.
மங்கலை,
செங்கலசம் முலையாள்,
மலையாள்,
வருண சங்கலை செங்கை,
சகலகலா மயில்,
தாவு கங்கை
பொங்கலை தங்கும்
புரிசடையோன் புடையாள்,
உடையாள்,
பிங்கலை,
நீலி,
செய்யாள்,
வெளியாள்,
பசும் பெண்கொடியே
மங்கலை - சுமங்கலி - மங்கள வடிவினள்.
செங்கலசம் முலையாள் -
செம்மையான கலசம் போன்ற முலைகளை உடையவள்.
மலையாள் -
மலையரசன் ஈன்ற பெண்.
பர்வதராஜ புத்ரி ஹைமவதி
வருண சங்கலை செங்கை -
சங்குகளால் ஆன வளையல்களை தன்சென்னிறகைகளில்அணிந்தவள்.
சகல கலா மயில் -
அனைத்து கலைகளுக்கும் மயில் (அரசி)
தாவு கங்கை பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் -
துள்ள திரிந்து வரும் கங்கையையும் அதனால் உண்டாகும் நுரை அலையினயும் ,
தன் சடையில் தங்க வைத்துக்கொள்ளும் சிவபெருமானின் மனையாள்
உடையாள் -
என்றும் பக்தர்களுக்கு உடையவள்
பிங்கலை -
மஞ்சள் வண்ணத்தினாள்.
நீலி -
நீல நிறமுடையாள்
செய்யாள் -
சிவந்த நிறமுடையாள்
வெளியாள் -
இவ்வாறெல்லாம் விளங்குபவள்.
பசும் பெண்கொடியே -
பசுமையான கொடி போன்றவள் -
இதனால் தான் அம்பாளுக்கு அபர்ணா என்று பெயர்.
பர்ணா - இலை.
அபர்ணா - இலையில்லாதது.
அது ஒரு கொடி
சிவன் கட்டமரம் - அசைவற்றவர்.
அம்பாள் - சக்தி - அவரை கொடி போல் சுற்றிக்கொண்டிருப்பவள்.
காய்ந்த கொடி இல்லை.
அவள் பசுங்கொடி.
இவர்கள் இருவரின் புதல்வர் -
முருகன் - விசாகன்.
சாகை - கிளை.
விசாகை - கிளை அற்றது.
தற்போது வைகாச விசாகம் நடைபெறும் காலம்.
கிளை இல்லாத செடி.
இதுவே சோமாஸ்கந்த வடிவம்.

Comments
Post a Comment