குடை தான் சனாதனதர்மம்
அனைவருக்கும் மார்கழி மாத இனிய ஆன்மீக காலை வணக்கங்கள்.
இதுகாறும் நிறை விஷயங்களைப் பற்றிய பதிவை பதிந்து வருகிறேன்.
இந்த பதிவுகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் தான் வரும்.
அந்த குடை தான் சனாதனதர்மம்
என்று பரந்த விரிந்த குடை.
குடையில் எவ்வாறு நடுவே வரும் கம்பியை இணைக்கும் ஆரங்களாக அதில் உள்ள கம்பிகள் எவ்வாறு உள்ளதோ.
அதே மாதிரியாக தான் பல தரப்பட்ட விஷயங்களை பகிர்ந்தாலும் அவை ,சனாதனதர்மம் என்ற ஒரு குடையில் கம்பியை பலபடுத்தும் விதமாகவே அவை இருக்கும்.
மற்றவைகள் அதன் காரணிகளாக இருந்து சனாதனதர்மத்தை காக்கிறது.
அவை
சனாதன தர்மத்தின் அடிப்படைக் காரணிகள் (Principles)
**அறம்,
**பொருள்,
**இன்பம்,
மற்றும்
வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களோடு,
**அஹிம்சை,
**சத்தியம்,
**தூய்மை,
**கருணை,
**பணிவு,
**சுயக்கட்டுப்பாடு,
**பொறுமை,
**தியாகம்,
**தவம்,
மற்றும்
ஆன்மிக அறிவு
போன்ற
நற்பண்புகளை உள்ளடக்கியது,
இதை நான் ஒன்றும் புதிதாக பதியவில்லை.
நான் தேடும் போது படித்த,
கேட்ட மற்றும்
அனுபவித்த விஷயங்களை
பதிவாக பதிந்து வருகிறேன்.
அவை தொகுத்து ஒரு தொகுப்பு பதிவாக பதிவிட்டு வருகிறேன்.
காரணம் இவை இந்த கால கட்டத்துக்கு மிகவும் தேவை என்பதால் அது பதிக்கிறேன்.
இதில் நான் கருவியே தவிர வேறு ஒன்றுமில்லை.
இவை அனைத்தும் மஹான்கள், ஞானிகள் மற்றும் சித்த புருஷர்கள் வகுத்த பாதை.
அந்த பாதையில் அவ்வப்போது
புல் முளைத்து பாதை தெரியாமல் ஆகிவிடும்.
அதை அவ்வப்போது என்னால் முடிந்தவரை செப்பனிடுகிறேன் என்பதே நிதர்சமான உண்மை.
என்றும் இறைப்பணியில் உங்கள்
தேடுதல் என்பணிஹரிதியாகராஜன்

Comments
Post a Comment