திருவண்ணாமலை கார்த்திகை தீபம் தாத்பர்யம்?.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் தாத்பர்யம்?.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் என்பது சிவன் பார்வதியால் உருவானது என நம்பப்படுகிறது.
பிருகு முனிவர்:-
பிருகு முனிவர் பார்வதி தேவியை வணங்காமல் சிவபெருமானை மட்டுமே வணங்கியதால், பார்வதி தேவி கோபமடைந்து அவருக்கு சாபமளித்தார்.
இதன் விளைவாக, பிருகு முனிவர் எலும்புகள் மட்டுமே கொண்ட உடலைப் பெற்றார்.
சிவபெருமான் இரக்கமுற்று, நடனமாடும்போது பிருகு முனிவருக்கு உதவியாக மூன்றாவது காலாக ஒரு ஊன்றுகோலை வழங்கினார்.
அர்த்தநாரீஸ்வரர் என்பது ஆண் பெண் இருவரின் கலந்த வடிவம்,
அதாவது பாதி சிவனும் பாதி பார்வதியும் சேர்ந்த உருவம் ஆகும்.
தனது வாமபாகத்தை பெறுவதற்காக திருவண்ணாமலையில் தவமிருந்தால். காரணம் ,இருவரும் தனிதனியாக இருப்பததால் பிருகு முனிவர் வண்டாக மாறி அம்மைக்கும் அப்பனுக்கு இடையில் உள்ள பகுதி வழியாக அப்பனையும் மட்டும் வலம் வருவதால். அந்த இடைவெளி இருக்க கூடாது என எண்ணி, தனக்கு சிவனின் சரிபாதி இடம் வேண்டும் என்று திருவண்ணாமலையில் கார்த்திகை மாதம் பௌர்ணமி கிருத்திகை நக்ஷ்ரத்து அன்று சிவனிடமிருந்து அவரது வாமபாகத்தைப் பெற்றார்.
ஆதனால் திருகார்த்திகையன்று மலை தீபம் ஏற்று முன்பு அவ்வளவு சந்தோஷமாக அம்மையுடனான அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் வெளிவந்த பிறகு மலை தீபம் ஏற்றப்படும் என்பது திருவண்ணாமலை காணலாம்.
அவர்களது தரிசனம் அடிஅண்ணாமலை சந்நிதியில் காணலாம்.
பிருகு முனிவர்:
பார்வதி தேவியை வணங்காததால் சாபம் பெற்றார். சிவன் அவருக்கு மூன்றாவது காலாக ஊன்றுகோலை வழங்கினார்.
அர்த்தநாரீஸ்வரர்:
சிவன் மற்றும் பார்வதியின் இணைந்த வடிவமாகும்.
வலது பாதி சிவனுக்கும்,
இடது பாதி பார்வதிக்கும்
உரியது.
ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை விளக்கும் வித அம்மை மற்றும் அப்பனின் இணைவே இந்த அர்த்தநாரீஸ்வரர் தத்துவம்.
#ஓம்ஶ்ரீஅர்த்தநாதீஸ்வராயநமஹ#.

Comments
Post a Comment