யாதுமாகி நின்றாய்-காளி!
முண்டாசு கவிஞன் ஒரு அம்பாள் உபாசகன் என்பதை அனைவரும் அறிந்ததே.
சென்னையில் வாழ்ந்த காலத்தில் பத்திரிகை அலுவலகம் செல்லும் முன் தம்புச்செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாளை தரிசனம் செய்வதை வழக்கமான வைத்து இருந்தான் என்பதை அனைவரும்அறிந்ததே.
அதனால் தான் என்னவோ காளியை இவ்வாறு காண்கிறனோ.
"யாதுமாகி நின்றாய்-காளி!
எங்கும் நீ நிறைந்தாய்;
தீது நன்மையெல்லாம்-காளி!-
தெய்வ லீலை யன்றோ;
பூத மைந்தும் ஆனாய்-காளி!-
பொறிக ளைந்தும் ஆனாய்;
போத மாகி நின்றாய்-காளி!-
பொறியை விஞ்சி நின்றாய்.
இன்ப மாகி விட்டாய்-காளி!-
என்னு ளேபுகுந்தாய்;
பின்பு நின்னை யல்லால்-காளி!-
பிறிது நானும் உண்டோ;
அன்ப ளித்து விட்டாய்-காளி!-
ஆண்மை தந்து விட்டாய்;
துன்பம் நீக்கி விட்டாய்-காளி!
-தொல்லை போக்கி விட்டாய்".
(முண்டசுக் கவி சி சுப்பிரமண்யா பாரதி)
சுருக்கம்:
பாரதியார்,
காளித் தாயே
உலகில் உள்ள அனைத்திலும் வியாபித்திருக்கிறாள் என்றும்,
நன்மை தீமைகளுக்கு காரணமானவள் அவள் என்றும்,
ஐம்புலன்களாகவும்,
அறிவாகவும்,
பேரின்பமாகவும் அவள் நிறைந்து நிற்கிறாள் என்றும் போற்றிப் பாடுகிறார்.
இது இறைவனின் எல்லையற்ற, அற்புமான திருவிளையாடலை விவரிக்கும் ஒரு பக்திப் பாடலாகும்.
இது காளித் தாயின் சர்வவியாபகத்தையும்,
அவளே நன்மை தீமைகளாகவும்,
பூத ஐம்பொறிகளாகவும்,
அறிவாகவும்,
இன்பமாகவும் விளங்குகிறாள் என்பதையும் போற்றுகிறது;
இது இறைவனின் திருவிளையாடலையும்,
பக்தர்களின் மனதில் உறைவதையும் வெளிப்படுத்தும் ஆழ்ந்த பக்திப் பாடலாகும்.
பாடலின் பொருள்:
"யாதுமாகி நின்றாய் காளி!" –
நீ எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறாய்,
எல்லாமாக இருக்கிறாய், காளி.
"எங்கும் நீ நிறைந்தாய்" –
நீ எங்கும் நிறைந்திருக்கிறாய்.
"தீது நன்மையெல்லாம் காளி!" –
தீதும், நன்மையும் எல்லாம் உன்னுடையவையே
(உன்னுடைய லீலைகளே).
"தெய்வ லீலை யன்றோ" –
இது இறைவனின் திருவிளையாடல் அல்லவா?
" காளி!" –
ஐம்புலன்கள் (பூதங்கள்) நீயே.
"" – ஐம்புலன்களாகவும் நீயே
இருக்கிறாய்.
" காளி!" –
அறிவாகவும் (ஞானமாகவும்) நீயே இருக்கிறாய்.
"" – புலன்களை (பொறிகளை) கடந்து, அதையும் தாண்டி இருக்கிறாய்.
"" – நீயே இன்பமாகவும் மாறிவிட்டாய்.

Comments
Post a Comment