10முத்ராதேவிகள்

முதலாவது சக்கரத்தின் உள்புற சக்கரத்தில் உறையும் சக்திகள்.

#ஶ்ரீதேவிகட்கமாலாஸ்தோத்திரம்.


தாமசக்குணத்தைக் குறிக்கும் உள்புற மஞ்சள் நிற சதுரத்தின் உறையும் #10முத்ராதேவிகளை


வணங்குங்கிறேன்.


சர்வ ஸம்க்ஷோபினி -எல்லாவற்றையும் கிளறுகிறவள்/அனைவரையும் கிளர்தெழச் செய்பவள்.


சர்வவித்ராவினி - அனைத்தையும் கரைப்பவள்.


சர்வகர்ஷினி - அனைத்தையும் கவர்பவள்.


சர்வசங்கரி - அனைத்தையும் கட்டுபடுத்துபவள்.


சர்வோன்மாதினி - அனைவரையும் பித்துப் பிடிக்கச் செய்பவளா.


சர்வமஹாங்குசே - அனைவருக்கும் பெருநதெய்வமாக இருப்பவள்.


சர்வகேசரி - விண்வெளியில் பயணிப்பவள்.


சர்வபீஜே - அனைத்துக்கும் வித்தானவள்/மூலமாக இருப்பவள்.


சர்வயோனி - படைப்பின் இருப்பிடமாக(கருப்பையாக) இருப்பவள். #கர்பரக்ஷாம்பிகை.


சர்வ த்ரிகண்டே தேவி - அனைத்தையும் மூன்றாகப் பிரிப்பவள்.


த்ரைலோக்ய மோகன சக்ர சுவாமினி - விழிப்பு,உறக்கம், கனவு ஆகிய மூவுலக சக்கரத்தின் தலைவியாக இருப்பவள்.


பிரகடயோகினி - யோகத்தில் நிபுனத்துவம் பெற்றவள்; தடைகள் இல்லாமல் தன்னை வெளிபடுத்துபவள்.


இச்சக்கரத்தின் முத்ரா தேவி சர்வசம்க்ஷோபினி (எல்லாவற்றையும் கிளறுகிறவள்/அனைவரையும் கிளர்ந்தெழச் செய்பவள்)ஆவாள்.


இந்த ஆவரணத்தில் லலிதாவின் பிரதான அம்சம்(சக்கரஸ்வரி).


திரிபுரே - விழிப்பு/கனவு/உறக்கம் ஆகிய மூன்று நிலைகளையும் கட்டுப்படுத்துகிறவள்.


இச்சக்கரத்தின் தேவி மகாமகேஸ்வரி (பேரண்டத்தை கட்டுபடுத்துபவர்/சிவனின் துணைவி)ஆவாள்


இந்த சக்கரம் நம் ஆசைகள் நிறைவறுவதையும்,நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருப்பதையும் கட்டுபடுத்த உதவுகிறது.


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).