பூமி லாபம் தனலாபம் Buying of lands ,
பகுதி 91.
பூமி லாபம் தனலாபம்
Buying of lands ,
obtaining riches,patronage and mass support
லலிதா சஹஸ்ர நாமம் ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல்.
#லலிதாசஹஸ்ரநாமம்#
#மராலீமந்தகமா#
அம்பாளின் சிலம்பு ஒளிப்பொருந்திய இரத்தின கற்களால் ஆனது.
ஸிஜ்ஞாநமணிமஞ்ஜீரமண்டித ஶ்ரீபதாம்பூஜா
ரத்தினக் கணுக்கால்களால் அலங்கரிக்கப்பட்ட அவளுடைய தாமரை போன்ற பாதங்கள் இனிமையான ஒலிகளை உருவாக்குகின்றன.
அவள் விலைமதிப்பற்ற ரத்தினங்களால் ஆன
கொலுசுகளை அணிந்திருக்கிறாள்.
42 முதல் 46 வரையிலான ஐந்து நாமங்கள் அவளுடைய பாதங்களைப் பற்றி மட்டுமே விவரிக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவளுடைய பாதங்கள் மட்டும் இவ்வளவு விவரிக்கப்படும் போது,
அவளுடைய சக்திவாய்ந்த வடிவத்தைப் பற்றி யோசிப்பது கூட புரிந்துகொள்ள முடியாதது.
அவளுடைய பிரகாஷ விமர்சன மஹா மாயா ஸ்வரூபிணி வடிவத்தைப் பற்றி ஈர்க்க வாக் தேவிகளால் இது செய்யப்பட்டுள்ளது
#சௌந்தயலஹரி#
தேவியின் நடையழகு
தேவியின் நடையழகு
பூமி லாபம், தன லாபம்
பதந்யாஸ க்ரீடாபரிசய மிவாரப்து மனஸ:
ஸ்கலந்தஸ் தே கேலம் பவனகலஹம்ஸா ந ஜஹதி|
அதஸ்தேஷாம் ஶிக்ஷாம் ஸுபகமணி மஞ்ஜீர ரணித
ச்சலாதாசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே ||
அம்பிகே! உன் இல்லத்திலிருக்கும் அன்னபக்ஷிகள் உன்னுடைய அழகிய நடையைக் கண்டு அம்மாதிரி தாமும் நடக்க கற்றுக்கொள்ளும் எண்ணத்துடன் உன்னைப் பின்பற்றி நடக்கப் பழகுகின்றன.
அவ்வாறு அவை உனது நடையழகை பின்பற்ற முயற்சிக்கையில் நீ அணிதிருக்கும் பாதரசமணிகளின் இனிய சப்தமானது அந்த பக்ஷிகளுக்கு நடக்கச் சொல்லிக் கொடுப்பது போல இருக்கிறது.
கவிஞர்கள் அன்னபக்ஷியின் நடையை அழகிய பெண்களது நடைக்கு ஒப்பாகச் சொல்வது வழக்கம்.
இப்பாடலில் அன்னபக்ஷிகள் அன்னையிடத்தில் நடக்கக்கற்றுக் கொள்ளவதாகச் கூறுவதன் மூலம் அன்னையின் நடையழகை சிறப்பாக கூறுகிறார்.
அன்னை காலில் அணிதிருக்கும் தண்டை மற்றும் கொலுசுகளின் மூலம் ஏற்படும் சுநாதமானது அன்னையது நடையழகை பக்ஷிகளுக்கு கற்று தருவது போல இருக்கிறதாம்.
இங்கே 42ஆம் ஸ்லோகத்தில் அன்னையின் கீரிடத்தை பற்றி ஆரம்பித்து இப்பாடலுடன் அன்னையின் அங்க வர்ணணை முடிவுக்கு வருகிறது.
இனிவரும் ஸ்லோகங்கள் பொதுவான ஸ்தோத்ரங்களாக இருக்கும்.
புண்ய சரித்திரம் உடையவளே !
உன்னுடைய வீட்டில் உள்ள அன்னப் பறவைகள் உனது நடையழகை கற்றுக்கொள்ள ஆரம்பிக்க எண்ணம் கொண்டவை போல் துள்ளிக். குதித்துக்கொண்டு உன்னுடைய அழகிய நடையை தொடர்வதை விடுவதில்லை.
ஆகையினால் உன்னுடைய திருவடி மங்களமான ரத்தினம் இழைத்த சிலம்புகளின் ஒலியின் மூலம் மறைமுகமாக அப்பறவைகளுக்கு நடைப்பழக்கத்தை கற்றுக்கொடுப்பது போல் இருக்கிறது.
#அபிராமிஅந்தாதி#

Comments
Post a Comment