அம்பாளின் முகாரவிந்தம் இருவித வர்ணணை ஏன்?.
அம்பாளின் முகாரவிந்தம் இருவித வர்ணணை ஏன்?.
லலிதா சஹஸ்ர நாமம் அம்பாளுக்கு ஆயிரம் நாமங்கள் மட்டும் தானா என்ன?.
அவள் நாமரூபா
எல்லா வார்த்தைகளும் அவளிடமிருந்து தான் உருவாகினது தானே.
உத்யத்பானு ஸ்கஸ்பரா என்ற நாமத்தை காணலாம்.
#அம்பாளுடையமுகாரவிந்தம்#.
அம்பிகையின் முகத்தை வர்ணிக்குமா எல்லோரும் இதை கையாண்டு இருக்கிறார்கள்.
அம்பாளுடைய முகாரவிந்தம் எப்படி இருக்கும் தெரியுமா?.
ஆயிரம் சூரியர்கள் விடிகாலையில் உதிக்கும் போது அதன் கிரணங்கள் எப்படி சிவப்பு வர்ணமாக இருகாகுமோ அப்படி இருக்குமாம்.
பின்னர் வேறு இடத்தில் அவளது முகம் சரஸ் சந்திர நிபானனா சரத்காலத்தில் உதிக்கும் குளுமைப் பொருந்திய சந்திரனைப் போல் இருக்குமாம்.
இதென்ன எப்படி சூரியனைப் போலும் சந்திரனைப் போலும் இருக்குமா ஒருவரது முகம்.
ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக உள்ளதே.
மகிஷாசுரன் மதுகைடபன் போன்ற அசுரர்களை வதைக்கும் போது உக்கிரமாக சிவந்து உத்யத்பானு ஸ்காஸாராபாவாக இருக்கும்.
அபிராமி பட்டர் போன்ற அடியார்களை காக்கும் போது ஸரஸ்சந்திர நிபானனாவாக இருக்கும்.

Comments
Post a Comment