அம்பாளின் நான்கு கரங்கள்
காமாக்ஷி/இராஜராஜேஸ்வரி/பாலதிரிபுரசுந்தரி/லலிதாம்பாள் இவர்கள் நால்வரும் அம்பாள் பராசக்தியின் சொரூபமே.
இதை தான் அபிராமி பட்டரும்/காஞ்சி மஹாபெரியவா/சங்கர பகவத்பாதாள் அழகாக வர்ணிக்கிறார்கள்.
நான்கு கைகளில் என்ன உள்ளது என்பதற்கான வியாக்கியானம்
01.சதுர் பஹு சமன்விதா
நான்கு கரங்களை உடையவள்
02.ராக ஸ்வரூப பாசாத்யா
கயிறு வடிவில் அனைவரின் மீதும் அன்பு கொண்டவள் -
இடது கைகளில் ஒன்றில் இதை உடையவள்
03.க்ரோதகரங்குசோஜ்வாலா
அங்குச வடிவில் மின்னும் கோபமும் கொண்டவள் - பந்த பாசத்தை அறுபாபதற்காக.
வலது கைகளில் ஒன்றில்.
04 மனோ ரூபேஷு கோதண்டா
இடது கைகளில் ஒன்றில் மனம் எனும் இனிமையான கரும்பு வில்லை உடையவள்
05.பஞ்ச தன்மாத்ர சாயகா
சாயகத்தை விட பஞ்சம்
தொடுதல்,
வாசனை,
கேட்டல்,
சுவை மற்றும் பார்வை ஆகிய ஐந்து வில்களை உடையவள் .
ஒரு கையில் மனதாகிய கரும்பு வில் மற்றொரு கையில் மலர் அம்பு.
இதற்கு காரணம் அவளே நமது மனத்தில் ஆசை விதைக்கிறாள்.
மற்றொரு கைகளில் பாசாங்கும் அதாவது பாசம் மற்றும் அங்குசம்.
மனத்தில் ஏற்படும் பாசத்தை அங்குசத்தால் அறுது,நம்மை நாம் உழகுகின்ற பந்தபாசத்தியிலிருந்து நம்மை விடுவிக்கிறாள்.
அதனால் தான் அவள் பாசத்தை கொடுப்பவள் அவளே அந்த பாசத்தை அறுப்பவள் அவளே என முந்தைய பதிவில் பதிவிட்டது.

Comments
Post a Comment