தஞ்சாவூரில் வீற்றிருக்கும் அன்னை காமாக்ஷி
தஞ்சாவூரில் வீற்றிருக்கும் அன்னை காமாக்ஷி
,அவள் அருகில் வசித்தது.
அதாவது தஞ்சாவூர் மேலவீதியில் விஸ்வேசர் பண்டிதர் தெருவில் வசித்து வந்த காலம், அப்போது விஸ்வரூப தரிசனத்து காலை 5மணிக்கு ரசித்தவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். அதில் நானும் ஓருவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்.
அவ்வாறு பால்ய வயத்தில் விஸ்வரூப தரிசனத்தை தரிசித்தவனின் நானும் ஒருவன்.
அந்த விபரம் தெரியாத வயத்தில் எனது தந்தை கையை பிடித்து அம்பாளை தரிசத்தவன், அந்த நினைவுகள் பசுமரத்து ஆணியை எனது நெஞ்சில் பதிந்துள்ளது.
அம்பாளைப் பற்றி பதியும்போது அந்த நினைவலைகள் என் எண்ணத்தில் வந்துச் செல்கிறது.
அது ஒரு கனா காலம்.
இன்று, தஞ்சாவூரில் காமாக்ஷி கோயிலில் இரண்டு சன்னிதிகள்
(சன்னிதிகள்) உள்ளன:
முதன்மை சன்னிதி -
பங்காரு காமாட்சி
இரண்டாம் சன்னிதி -
காமகோடி காமாட்சி
இது தனித்துவமானது,
ஏனெனில் இந்தியாவின் பிற பகுதிகளில்,
ஒரு தனி காமகோடி காமாட்சி சன்னிதி காணப்படவில்லை.
காஞ்சிபுரத்தில் உள்ள காயத்ரி மண்டபத்தில் கூட,
காமகோட்டி காமக்ஷி
வெறுமனே காமக்ஷி,
மூல காமாக்ஷி,
திரிபுரசுந்தரி அல்லது ராஜராஜேஸ்வரி
என்று குறிப்பிடப்படுகிறார்,
ஆனால் பொதுவாக காமகோடி அம்பாள் என்ற பெயரில் அழைக்கப்படுவதில்லை.
இருந்தாலும் தஞ்சாவூரில் அந்த பட்டத்தை போற்றி பாதுகாத்து வருகிறோம்.
#பங்காரு_காமாட்சி முக்கிய
உற்சவ நாட்கள்
பங்காரு காமாட்சிக்கு,
ஒரு வருடத்தில் 11 முக்கிய அபிஷேகங்கள் உள்ளன.
9 அபிஷேகங்கள் - சாரதா நவராத்திரியின் போது (9 நாட்கள்).
1 அபிஷேகம் -
ஐப்பசி மாதம், பூரம் நட்சத்திரம்
(அவளுடைய ஆவிர்பவ நாள் - தோன்றிய நாள்).
1 அபிஷேகம் -
பங்குனி உத்திரம் அன்று
(அம்பாளின் திருக்கல்யாணம் - தெய்வீக திருமணம்)வருடத்தின் மிகப் பெரிய திருவிழா சாரதா நவராத்திரி.
தொடர்ந்து 9 மாலைகள்,
அபிஷேகம் தனிப்பட்ட முறையில் (ஒரு திரைக்குப் பின்னால், மரபுப்படி) செய்யப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சாய ரக்ஷண பூஜை நடைபெறும்,
இதன் போது பல்லயத்தில்
புளியோதரை (புளி சாதம்) வழங்கப்படும்
சக்கரைப் பொங்கல்
வெண் பொங்கல்
தயிர் சாதம்
வடை
அம்பாளுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு,
பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக விநியோகிக்கப்படுகிறது.
அழைப்பு
தஞ்சாவூர்,
பங்காரு காமாக்ஷி கோயிலில்
இந்த ஆண்டு நடைபெறும்
சாரதா நவராத்திரி மஹோத்சவத்தில் எங்களுடன் இணையுமாறு
உங்களை தாழ்மையுடன் அழைக்கிறோம்.
ஆரோக்கியம்,
செழிப்பு
மற்றும்
ஆன்மீக மேம்பாட்டிற்காக
ஸ்ரீ பங்காரு காமாக்ஷி அம்பாள் மற்றும் காமகோடி காமாக்ஷி அம்பாளின் ஆசிகளை
(அனுக்கிரஹம்)
பெற்றுக் கொள்ள வாருங்கள்.
உங்கள் பங்கேற்பும் ஆதரவும் இந்த புனித கொண்டாட்டத்தை இன்னும் மங்களகரமானதாக மாற்றும்.
ஓம் ஶ்ரீ மஹா பெரியவாளுக்கு
அனந்த கோடி நமஸ்காரங்கள்
#லோகாஸமஸ்தாஸுகினோபவந்து

Comments
Post a Comment