லோகஜனனி

 #அம்பாளைஏன்லோகஜனனிஎன்கிறோம்



சங்கரபகவத்பாதாள் அம்பாளின் கண்ணை அழகை விவரிகிறப்போது கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.


விஶாலா கல்யாணீ ஸ்பு²டருசிரயோத்⁴யா குவலயை:


க்ருபாதா⁴ராதா⁴ரா கிமபி மது⁴ராபோ⁴க³வதிகா ।


அவந்தீ த்³ருஷ்டிஸ்தே ப³ஹுனக³ரவிஸ்தாரவிஜயா

த்⁴ருவம்


 தத்தன்னாமவ்யவஹரணயோக்³யா விஜயதே ॥ 49 ॥


பொருள்:


தாயே! 


உன்னுடைய திருஷ்டி (பார்வை) 


எட்டு விதமான அழகுகளையும், குணங்களையும் கொண்டு,


அந்தந்தப் பெயர்களைக் கொண்ட நகரங்களின் தன்மையாகவும் விளங்கி, 


எல்லாவற்றையும் வென்று திகழ்கிறது: 


#விசாலா: 


உன்னுடைய கண்கள் அகன்று (விசாலமாக) இருப்பதால் 'விசாலா' என்று அழைக்கப்படுகிறது.


#கல்யாணீ: 


மங்களகரமான பார்வை.


#அயோத்யா: 


நீல மலர்களைக் (குவளை) காட்டிலும் வெல்ல முடியாத பேரழகுடையது.


#தாரா: 


அருளைத் தாரை தாரையாகப் பொழிவதற்கு ஆதாரமாக இருப்பது.


#மதுரா: 


வர்ணிக்க முடியாத அளவிற்கு இனிமையானது.


#போகவதிகா: 


இன்பத்தை அனுபவிக்கக் கூடியது.


#அவந்தீ: 


உலகங்களைக் காத்து ரட்சிப்பது.


#பஹுநகரவிஸ்தாரவிஜயா: 


பல நகரங்களில் வெற்றியை நிலைநாட்டுவது. 


காரணம் அம்பாளின் பெயரிலேயே பல நகரங்கள் அமைந்து இருக்கிறது. அதை தவிர பல நதிகளுக்கு அம்பாளின் பெயரே உள்ளது. 


அவையாவன


#கங்கா,


#யமுனை, 


#நர்மதை,


#கோதாவரி, 


#காவேரி,


#சரஸ்வதி 


போன்ற பல பெயர்கள். 


நம் பாரத்தை  


#பாரதமாதா என்று தான்


அழைக்கிறோம்.


பூமியையே 


#பூமிமாதா 


என்று தான் அழைக்கிறோம். 


அதை போல் இவ்வுலகை காப்பதால் லோகமாதா ஆகிறாள். 


இவ்வாறு பல விஷயங்களில் அம்பாள் உள்ளிருப்பதால் 


அவள் லோகஜனனி ஆகிறாள்.


அனைத்து ஜீவராசியிலும் 


அவளே வியாபித்து இருக்கிறாள்.


#ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ


அவளே ஒவ்வொரு ஜீவராசியிலும் அவள் உள்ளிருக்கிறாள்.


அதனாலே அவள் #லோகஜனனி மற்றும் #தாயாகிறாள்.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).